siruppiddy

செவ்வாய், 24 டிசம்பர், 2013

""பூப்புனித நீராட்டு விழா""

இந்தக் கட்டுரை பூப்புனித நீராட்டு விழா பற்றியது. பிற மஞ்சள் நீராட்டு பயன்பாட்டுக்கு, மஞ்சள் நீராட்டு என்பதைப் பார்க்கவும்.

பூப்புனித நீராட்டுவிழா என்பது, பெண் பால்முதிர்ச்சி அடைந்து முதல் மாதப்போக்கினைக் கண்டதை விழாவாக்கிக் கொண்டாடும் ஒரு சடங்காகும். முதல் மாதப்போக்கு ஏற்பட்ட அன்றே சில சடங்குகள் உள்ளதாயினும், பூப்புனித நீராட்டுவிழா அதையடுத்துவரும் அண்மைய நாட்களில் அல்லது மாதங்களில் நடத்தப்படுகின்றன. இவ்விழா மற்றும் இதற்கான சடங்குகள்

அவர்கள் சார்ந்த இடம், மக்கள் கூட்டம் போன்றவைகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. சில மக்கள் குழுக்களிடையே ஆண்களுக்கும் இத்தகைய சடங்குகள் நடத்தப்படுவதுண்டு. இச்சடங்குகளும் விழா முறைகளும் மதம், சாதி, வாழ்நிலை, வர்க்கம், இனம் சார்ந்தும் வேறுபடுகின்றன.
 

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் மருத்துவர் சில்மிஷம்

 இங்கிலாந்தில் சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளியிடம் செக்ஸ் குறும்பில் ஈடுபட்ட மருத்துவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள பி.எம்.ஐ எட்க்பாஸ்டன் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருபவர் அங்கமுத்து அருண்கலைவாணன்.
இங்கு கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம், பெண் ஒருவர் மார்பக பரிசோதனைக்காக வந்துள்ளார்.
அப்போது டாக்டர் அருண்கலைவாணன் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடம் குறித்த பெண் புகார் கூறினார்.

உடனே அருண்கலைவாணன் மன்னிப்பு கேட்டும், இந்திய மருத்துவர்களுக்கு இப்படித்தான் மார்பக பரிசோதனை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறி சமாளிக்கப் பார்த்தது.
அதுபற்றி ஒரு நர்சிடம் அந்த பெண் நோயாளி கேட்டபோது, அது பொய் என்று தெரிய வந்தது.
இதனைதொடர்ந்து, இந்த விவகாரத்தை இங்கிலாந்து டாக்டர்கள் தீர்ப்பாயத்தில் அப்பெண் முறையிட்டார்.

தீர்ப்பாய விசாரணையில், அருண்கலைவாணன் தவறாக நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து மருத்துவ தொழிலுக்கே அவமரியாதை ஏற்படுத்தி விட்டதாக கூறி, அருண்கலைவாணன் ஒரு வருடம் மருத்துவ தொழில் செய்ய தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
எனினும் அவரது சேவையை கருத்தில் கொண்டு, பெயரை மருத்துவ பதிவேட்டில் இருந்து நீக்கவில்லை.
 

வியாழன், 12 டிசம்பர், 2013

முகத்தில் உள்ள முடிகளை நீக்க - பெண்களுக்கான அழகு குறிப்புகள்


பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது முகத்தில் தோன்றும் முடிகள்தான். 
சிறுசிறு முடிகள் முகத்தில் தோன்றி, முகத்தின் அழகை கெடுக்கும். இத்தகைய முடிகளை அகற்ற இக்காலத்தில் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் அதிகம்.
குறிப்பாக முடிகளை நீக்க ப்ளீசீங் முறையைப் பயன்படுத்துகின்றனர். ப்ளீச்சிங் முறையில் முடிகளை அகற்றுவது சிறந்தென்றாலும், இதனால் சருமம் உலர்ந்து வறட்சித் தன்மை ஏற்படும். வறட்சியான தோலில் பருக்கள், வெடிப்புகள் தோன்றும்.

ஆனால் இயற்கை முறையிலேயே கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி ப்ளீச்சிங் செய்யலாம். இதனால் முகத்திலுள்ள அழுக்குகள், தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, நல்ல ஆரோக்கியமான அழகையும் பெற முடியும்.

இயற்கையாக ஸ்கரப்கள் தயார் செய்வது எப்படி?
கடலை, மஞ்சள்தூள்:

இயற்கை அழகு குறிப்புகள்
கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளுடன் கடுகு எண்ணையைச் சேர்த்து பசைபோல ஆக்கி, அதை முகத்தில் பூசவேண்டும். முடிகள் இருக்கும் இடத்தில் இந்த கலவையை நன்றாக தேய்த்து நீரில் கழுவ வேண்டும். இம்முறையை தொடர்ந்து வாரம் இருமுறை செய்துவர முகத்தில் இருக்கும் அழுக்கு, முடிகள் நீங்கும். தேவையில்லாமல் முகத்தில் தோன்றும் முடிகளின் வளர்ச்சி குறைந்து நாளடைவில் அவைகள் நீங்கிவிடும்.

தேன், எலுமிச்சை:

தேனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி இருபது நிமிடங்கள் ஊறவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவ முகம் பட்டுப்போன்ற சருமத்தைப் பெற்று ஜொலிக்கும்.
முட்டை, சர்க்கரை, சோளமாவு:

முட்டையை உடைத்து ஒரு கோப்பையில் ஊற்றி, அதில் சர்க்கரை, சோளமாவை கலந்து நன்றாக கலக்கி, உருவான கலவையை எடுத்து முகத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு ஐந்து நிமிடத்திற்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ முகம் பளிச்... பளிச் ....

கடலை மாவு, தயிர், மஞ்சள்:

இம்மூன்றையும் கலந்து பசைபோல் ஆக்கிக்கொள்ளுங்கள். பிறகு அதை இதமாக முகத்தில் நன்கு தடவி இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு பசும்பால் கொண்டு முகத்தை கழுவவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாக கழுவி, வெண்மைநிற துணியால் முகத்தை இதமாக துடைக்கவும். இப்பொழுது உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்க.. நீங்களே வியந்துபோவீர்கள்..!!! இம்முறையை வாரம் இருமுறை தொடர்ந்து செய்துவர உங்கள் முகம் பால்போல் வெண்மையாக ஜொலிக்கும்.

மூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்?


நன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து முகத்திற்கு பூசலாம் மேலும் பழங்களான ஃபேஸ் பாக் போடலாம்.வாழைப்பழத்தின் தோலின் உட்பகுதியை முகம் முழுவதும் தேய்த்து காயவைத்து கழுவலாம். மேலும் எலுமிச்சை வெள்ளரிக்காய் போன்ற காயிலும் இதே முறையை பின்பற்றலாம்


முகம் பொலிவு பெற
மூக்கு மற்றும் காது
கிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து மூக்கின் தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம். ஆனால் எப்படிப்பட்ட ஷேப் உள்ள மூக்கினையும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் ஷேப்பைப் பற்றிய கவலை தேவையில்லை. மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. ரெகுலரான பேஷியல் கூட போதும். அதுவும் முடியாவிட்டால் வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்மெண்ட்டே போதும். மிக எளிதான மூக்குக்கான அழகுக் குறிப்பினை பார்ப்போம்

 நன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து முகத்திற்கு பூசலாம் மேலும் பழங்களான ஃபேஸ் பாக் போடலாம்.வாழைப்பழத்தின் தோலின் உட்பகுதியை முகம் முழுவதும் தேய்த்து காயவைத்து கழுவலாம். மேலும் எலுமிச்சை வெள்ளரிக்காய் போன்ற காயிலும் இதே முறையை பின்பற்றலாம்

 

புதன், 11 டிசம்பர், 2013

இன்றுஓர்அதிஸ்டநாள்... 11.12.13


இதே மாதிரியான ஒரு எண்கோலம் இந்நூற்றாண்டில். 11.12.13.இன்றைக்குப் பின்னர் மீண்டும் வராது. பலர் இதனால் அதிர்ஷ்டம் வந்து சேரும் என்றும் நம்புகின்றனர்

 


 

செவ்வாய், 10 டிசம்பர், 2013

இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால் நுரையீரல் …..

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.
அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?
1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை ஒழுச்சு கட்டிடும்.
3. வாயுத் தொல்லை என்பதே வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.
அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.
ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.
மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

தமிழில் வீட்டு கடிகாரம் தமிழ் தந்த புதுப்பாடம்


12தமிழில் வீட்டு கடிகாரம் இது கடிகாரத்தில்
 மட்டும் இருந்தால்
 போதுமா? நாம் இன்று இந்த நிலையில் இருப்பதர்க்கும் தமிழே காரனம் எம்மை எமது தனித்துவத்தைக் காட்டவும்

 தமிழே காரனம் அழகில் தமிழ் பேச்சும் அன்பின் நடைப்பாட்டுக்கும் எங்கள் தமிழே காரனம் கலை இலக்கிய விழுமியங்களை கட்டிக்காத்த முந்தையர் பேசிய மூத்த தமிழ் எம் தந்தையர் தாயார் நமக்கென பேசிட கற்றறிந்த எம் மொழி சுற்றத்தை சுமந்து மற்றவர்வாழ்கைக்காய் வாழும்தமிழினம் பேசிடும் மொழி தமிழ்மொழி
 ஆதி கூறும் ஔவையும் முருகனோடு அள்ளிச் சுவைத்த எம் தமிழ்
 மொழி அதன்

 ஓர் காலத்தில் எண்ணிக்கை 12 வரைதான் இருந்தது அப்போது எல்லாம் பன்னிரண்டை வைத்தே பிரிக்கப்பட்டது அதில்த்தான் ,காலன் , அங்குலம் நேரம் எல்லாம் உருவாகிற்று இதனை தமிழ் அதி அறிஞர்களே உருவாக்கினார்கள் நாளடைவில் பத்து என்பது இறுதி கணக்காக மாறியது ஆனால் நேரத்தை மட்டும் மாற்ற எவராலும் உமுடியாது எல்லாம் தமிழன் சிந்தையே நன்றி இ நேமி பகி்ந்த கொண்டமைக்கு
 

புதன், 4 டிசம்பர், 2013

சிரிப்பு வெடிகளை வீசிய இரா. குணபாலன்...


கலை வாழ்வில் இன்னொரு அத்தியாயம்..உயிர்வரை இனித்தாய் திரைப்படத்துடன்இரா. குணபாலனும் அவர்
 உலகத்தமிழரை நோக்கி தனது சிரிப்புச் சரவெடிகளை வீச வருகிறார்..இதுவரை புலம்பெயர்ந்த தமிழரிடையே சிரிப்பு வெடிகளை வீசிய கலைஞர். இரா. குணபாலன் தனது நகைச்சுவையை மேலும் மேலும் மெருகேற்றிக்கொண்டு உலகத்தமிழரை நோக்கி சிரிப்பு வெடிகளை வீச வருகிறார்.உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தில் இரா. குணபாலனின் நடிப்பு அவ்வளவு சிறப்பாக வந்துள்ளது.

உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தமிழ்நாடு ஏ.வி.எம்மில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது.. இரா. குணபாலனின் நடிப்பைப் பார்த்த தயாரிப்பாளர் பாவல் சங்கர் இவர் பாரீசில் இருந்தது போதும் ; இனிமேலாவது தமிழகம் வரவேண்டும் என்று அழைப்புவிட்டது விளையாட்டல்ல..இன்று தமிழகத்தில் ரென்ட் நகைச்சுவைதான்.. இரா. குணபாலன் கால் நூற்றாண்டுக்கு மேலாக ரசிகர்களை சிரிக்க வைக்கும் நடிப்பிற்கும், உடல் மொழிக்கும் சொந்தக்காரராக இருக்கிறார்.
இப்படியொரு அரிய கலைஞர் தமிழகம் வந்தால் அவருக்கு எத்தனை பெரிய வாய்ப்புக்கள் இருக்கிறது என்பதே பாவல் சங்கரின் கவலை.இன்று வெறுமனே மிமிக்கிரி செய்தவர்கள் எல்லாம் தாமும் நகைச்சுவை நடிகர்கள் என்கிறார்கள் ஆனால் நகைச்சுவையை டெலிவரி பண்ணமுடியாமல் திணறுகிறார்கள் என்று பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு சொன்னது தெரிந்ததே.

நடிப்பால் ரசிகனை அழ வைக்கலாம் ஆனால் சிரிக்க வைப்பதுதான் மாபெரும் கடினம் காரணம் நகைச்சுவை நடிப்பு என்பது மாபெரும் ஆற்றலின் பிறப்பிடம் என்பது கலைவாணர் என்.எஸ்.கே, கே.ஏ. தங்கவேலு போன்றவர்களின் திரையுலக வரலாறு எடுத்துரைத்துள்ளது.அந்த ஆற்றலை நோக்கி கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக கடின உழைப்பும், பயிற்சியும் செய்து திரையுலகிற்கு வந்துள்ளார் இரா. குணபாலன்.அந்தவகையில் இரா. குணபாலனின் நடிப்பாற்றலும், ரசிகர்களை மிக நுட்பமாக அவர் சிரிக்க வைக்கும் முறையும் அபாரமாக இருக்கிறது.நடிக்க வந்துவிட்டால் கிடைக்கும் வளங்களை

எல்லாம் சேகரித்து, தயாரிப்பாளரையும், இயக்குநரையும் அதிசயிக்க வைத்துவிடுவார், அப்படியொரு ஆற்றல் அவரிடம் உள்ளது.அதைப்பார்த்தால் அடடா இவரைப்போன்றவர்களுக்கு சரியான வாய்ப்புக்களை தமிழ் திரையுலகம் ஏற்படுத்தத் தவறிவிட்டதே என்ற நினைப்பு அரும்புவது இயல்பானதே என்றும் பாவல் சங்கர் தெரிவித்திருக்கிறார்.இரா. குணபாலன் நையாண்டி மேளம் தொடரில் நடித்து, மேலை நாடுகளில் உள்ள ரசிகர்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர்,அவருக்கு

எண்ணற்ற ரசிகர்கள் மேலை நாடுகள் முழுவதும் இருக்கிறார்கள்.இப்போது உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தில் தனது நகைச்சுவை நடிப்பால் ஓவியம் வரைந்துள்ளார் இரா. குணபாலன், தமிழக நடிகர்களின் முன்னாலும் தரிசனமாக இருக்கிறார்.ஆற்றல் மிக்க புலம் பெயர் நடிகர்களையும், கலைஞர்களையும் தமிழக திரையரங்குகளின் ரசிகர்களின் முன்னால் கொண்டுவரும் காத்திரமான புதிய பணியை முன்னெடுத்துள்ள தமிழ்நாடு கிரியேட்டி சிட்டி ஆர்ட்ஸ் நிறுவனம் தனது முயற்சியால் தமிழகத்தில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு தெளிவாக ஒரு செய்தியைத் தெரிவித்துள்ளது.இன்று தமிழ்

சினிமாவின் வர்த்தகம் ஏறத்தாழ தமிழகத்தில் இல்லை என்ற நிலை வந்துவிட்டது, தமிழ் சினிமாவை காப்பாற்றி நிற்பதே புலம் பெயர் தமிழர்தான், அதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் மனம் கோடம்பாக்கத்திற்கு வரவேண்டும் என்கிறது.புலம் பெயர் தமிழர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் தமிழ் திரைப்படங்கள் இனி பெருமளவில் தயாரிக்கப்பட வேண்டும், தமிழ் வர்த்தக சினிமாவின் அடுத்தகட்ட வெற்றிக்கு இது அவசியம்.

அதன் ஓரங்கமாக முற்று முழுதாக ஐரோப்பாவில் உள்ள கலைஞர்களை வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது உயிர்ரை இனித்தாய்.
இப்படம் புலம் பெயர் தமிழனின் திரைப்படம் என்ற பெயருடனும், துணிச்சலுடனும் தமிழக திரைச்சந்தைக்கு போகிறது.
திரைப்படத்தை பல்கலைக்கழக கல்வியாகக் கற்ற இளம் தமிழ் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

டென்மார்க் திரைப்பட தொழில்நுட்பத்துறை இந்த முயற்சிக்கு பேருதவியாக இருந்துள்ளது.
இந்தத் திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் வரும் இரா. குணபாலன் முற்றிலும் புதிய பரிமாணம் எடுத்துள்ளார்.

நடிக்க வந்துவிட்டால் எடுத்த கருமத்தில் கண்ணாக இருந்து, பிரதியை தெளிவாக விளங்கிக்கொண்டு, அதற்கேற்ப அதி உச்ச சிரிப்பை வரவழைக்கும் உடல்மொழியோடு உரையாடலையும் வழங்குவதில் அவருக்கு இணை அவரே.

அவரும் அவருடைய இணைபிரியாத நண்பர் தயாநிதியும் படப்பிடிப்பு இடத்திற்கு வந்துவிட்டால் படப்பிடிப்பே களைகட்டிவிடும், அதுமட்டுமல்ல இளம் நடிகர்களோடு கடுகளவும் ஈகோ இல்லாமல் பழகி இணைந்து நடிப்பதிலும் அவர்களுக்கு இணை அவர்களே.

இதுவரை புலம் பெயர் தமிழ் ரசிகர்களை குறியாக வைத்து நகைச்சுவை விருந்தளித்த இரா. குணபாலன் இந்தத் தடவை தமிழகம் உட்பட உலகம் முழுவதும் பரவியுள்ள எட்டுக்கோடி தமிழ் ரசிகர்களுக்கும் ஏற்றவாறு தனது நகைச்சுவை வெடிகளை புதுமையும், பொதுமையும்படுத்தி சரமாரியாக சுழற்றி வீசியபடி, தனது நண்பர் தயாநிதியுடன் திரைக்கு வருகிறார்.வரும் புத்தாண்டில் வெடிக்கப்போகும்

பட்டாசுகள் போல அடுத்த ஆண்டு திரையில் மத்தாப்பாக வெடித்துச் சிதறப்போகிறது.. இரா. குணபாலனின் சிரிப்புப் பட்டாசுகள் என்கிறார்கள் உயிர்வரை இனித்தாய் திரைப்படக் குழுவினர்.நம்பியிருங்கள் இரா. குணபாலன் ஜெயித்துக்காட்டுவார்.இவர் கலைவாழ்வில் இன்னும் பலதிறமையுள்ளவராக நன்று நடிப்புத்துறையில் சிறந்தோங்க
 எமது வாழ்த்துக்கள்

திங்கள், 4 நவம்பர், 2013

கடவுளிடம் ஒரு கணவன் வேண்டினான்,''


ஒரு கணவன் கடவுளிடம் வேண்டினான்,'' நாள் முழுவது நான் கடுமையாக உழைக்கிறேன்.என் மனைவி வீட்டில் ஒரு சிரமமும் இல்லாது மகிழ்ச்சியாக இருக்கிறாள்.போதாக் குறைக்கு என்னிடம் வேறு குற்றம் காண்கிறாள்.
எனவே என்னை பெண்ணாக்கி என் மனைவியை

ஆணாக்கிவிடு.அப்போதுதான் அவளுக்கு ஆண்களின் துன்பமும் சிரமமும் புரியும்.
 ''கடவுளும் அவனது வேண்டுகோளை ஏற்று மறுநாளே அவர்கள் இருவரையும் மாற்றிவிட்டார்.

மனைவி ஆணானவுடன் வேலைக்கு சென்றாள்.பெண்ணான கணவன் காலை எழுந்து வீடு வாசல் சுத்தம் செய்து,அடுப்படி வேலைகளை முடித்து பிள்ளைகளை பள்ளிக்குத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு,கடைக்கு சென்று காய்கறிகள் வாங்கி வந்து சமையல் முடித்து,இப்படியாக இரவு நெடு நேரம் வரை வேலை இருந்தது .

மறுநாள் எழுந்ததும் முதல் வேலையாகக் கடவுளிடம் ,
 ''ஐயோ கடவுளே!பெண்களுக்கு இவ்வளவு துன்பங்கள் இருப்பதை உணராது இருந்து விட்டேனே!என்னால் இந்த பொறுப்புகளை சுமக்க முடியாது.
தயவு செய்து என்னை மறுபடியும் ஆணாக்கி,என் மனைவியைப் பெண்ணாக்கிவிடு,''என்று அழுது வேண்டினான்.
கடவுள் சொன்னார்,

 ''உன் வேண்டுகோளை நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் அதற்கு நீ நாற்பது வாரங்கள் காத்திருக்க வேண்டும்''.அவன் ஒன்றும் புரியாமல் விழிக்க,
கடவுள் சொன்னார்,
 ''இப்போது நீ கருவுற்றிருக்கிறாய்.''

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்


மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும்.
கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, கார்போஹைடிரேடுகள், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை

அவசியம். கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன.

நம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.

* கூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போஹைடிரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கார்போஹைடிரேட் சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.

* உடலுக்கு நல்ல கொழுப்பு சத்து தேவை. இவை, கூந்தல் வறண்டு போதல், கடினமாதல் மற்றும் பொடுகு ஏற்படுதல் ஆகியவற்றை தடுக்கிறது.எண்ணெய் தன்மை உள்ள மீன்கள், பருப்பு வகைகள், ஆலிவ், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவின் மூலம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து கிடைக்கவில்லை என்றால் டாக்டரின் ஆலோசனை பெறலாம்.

* மீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, புரோக்கோலி, முட்டைகோஸ், கேரட் மற்றும் ஏப்ரிகாட் ஆகியவற்றில் காணப்படும், “வைட்டமின் ஏ’ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை தலையில் தேவையான எண்ணெய் சுரப்பதை

உறுதிசெய்து, தலை போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது.
நெல்லிக்காய், கொய்யா, சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள “வைட்டமின் சி’ சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.

ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து, தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.

* பயோட்டின்’ கூந்தல், சருமம் மற்றும் நகம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் நரைப்பதை தடுக்கும் கெரட்டின் உற்பத்திக்கு இது உதவுகிறது. கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின்

 உற்பத்திக்கு “நியாசின்’ உதவுகிறது. முட்டை மஞ்சள் கரு, கல்லீரல், அரிசி மற்றும் பால்பொருட்களில் “பயோட்டின்’ நிறைந்துள்ளது.
* இரும்புச்சத்து, கூந்தலுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. கூந்தலுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், அவை உடைந்து உதிரத் தொடங்கும். பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், முட்டை

, தர்ப்பூசணி ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம்.
கூந்தலின் நெகிழ்வு தன்மைக்கு, ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கூந்தலின் வறண்ட தன்மை நீங்க, தினமும், 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரையிலான தண்ணீர் குடிக்க வேண்டும்.


ஞாயிறு, 20 அக்டோபர், 2013

ஆசாராமின் ஆசிமத்திற்குள் கருக்கலைப்பு மையம்!


 
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு மையம் செயல்பட்டுவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆசாராம் பாபு மீது தொடர்ந்து பல பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த பல பெண்களை வற்புறுத்தி பலாத்காரம் செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில், ஆசாராமின் ஆசிரமத்தில் கருக்கலைப்பு மையம் செயல்பட்டதாக குஜராத் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் ஒருவர் கூறுகையில், நான் ஆசாராமின் ஆசிரமத்தில் 1997ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை தங்கியிருந்தேன்.

என்னை ஆசாராம் 2001ம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார், அதிலிருந்து என்னை அடிக்கடி உடல் ரீதியாக துன்புறுத்திவந்தார்.
மேலும் அவரின் ஆசிரமத்தில் கருக்கலைப்பு மையம் இருந்தது. ஆசாராமல் கர்ப்பமாகும் பெண்களுக்கு அங்கு கட்டாய கருக்கலைப்பு செய்யப்படும் என்றும் இதனை ஆசிரமத்தின் மேற்பார்வையாளரான துருவ்பெண் கவனித்துக்கொள்வார் எனவும் கூறியுள்ளார்.
 

வியாழன், 17 அக்டோபர், 2013

ஆனையிறவு வரை பரீட்சார்த்த ரயில்


ஆனையிறவு வரையான ரயில் பாதைப் புனரமைப்பு பணிகள் நிறைவுபெற்றுள்ளதை அடுத்து பரீட்சார்த்த ரயில் சேவைகள் ஆனையிறவு வரையில் இடம் பெற்று வருகின்றன.

ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றுக் கடந்த மாதம் 14 ஆம் திகதி, கிளிநொச்சி வரை ரயில் சேவை விரிவாக்கப்பட்டது.

இதன் பின்னர் ஆனையிறவு வரையான ரயில் பாதைப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சியிலிருந்து. ஆனையிறவு வரையான ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இதனையடுத்து பரீட்சார்த்தமான ரயில் சேவை கிளிநொச்சியிலிருந்து ஆனையிறவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பளை வரையான ரயில் பாதைப் புனரமைப்புப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்னும் ஒரு மாதகாலத்துக்குள் அந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது

திங்கள், 14 அக்டோபர், 2013

இரண்டு பிள்ளைகளுடன் யாழ்.தேவியின் முன் பாய்ந்த தாய்


p'0கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ். தேவி புகையிரதத்தின் முன் பாய்ந்து தாயொருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம்  பகல் 1 மணியளவில் இடம்பெற்றதாக மத்திய புகையிரதக் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

தாய் ஒருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் ஓடும் புகையிரதத்தின் முன் பாய்ந்துள்ளார் இதன்போது தாயும் ஒரு மகளும் புகையிரதத்தில் மோதி உயிரிழந்த நிலையில் ஒரு மகள் தப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் வெயங்கொட, கீனவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த இருவரின் சடலமும் வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வெயங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதன், 2 அக்டோபர், 2013

இன்று காந்­தி­ய­டி­களின் பிறந்த தினம்


கிரேக்க நாட்டில் ‘தயா­ஐயன்’ என்­றொரு ஞானி இருந்தான். அவ­னிடம் ஒரு நாய் இருந்­தது. பகலில் கூட அவன் விளக்கைப் பிடித்து மனி­தரைத் தேடுவான். மனி­தரைப் பார்க்கப் பார்க்க தனது நாயிடம் அதிக அன்பு உண்­டா­கின்­றது’ என்றான். ‘பிறகு யார்தான் மனிதன்?’ என்று பிளேட்டோ கேட்டான். ‘ அதோ ஒரு மனிதன்’ என்று காட்­டினான். ஆம்! அவனே சோக்­ரதன். அதே­போன்று பட்டம், பதவி, தம்­பட்­டங்­க­ளுக்­கி­டையே ஒரு தூய தியா­கி­யாக, மேதை­க­ளுக்­

கெல்லாம் மேதை­யா­கவும், மனித குலத்தின் மாண்­பு­மிகு சின்­ன­மா­கவும், ஆசி­யா­விலே தலை­சி­றந்த அர­சியல் அறிவாளி­யா­கவும், சான்­றோ­னா­கவும், இந்­திய நாட்டின் நன் மக்­களுள் ஒரு­வ­ரா­கவும், சாணக்­கி­ய­ரா­கவும் விளங்­கி­யவர் ‘அண்ணல் காந்­தி­ய­டிகள்’. இவரின் பிறந்த தினம் இன்று ஒக்­டோபர் 2ஆம் திக­தி­யாகும்.

பழம் பெருமை மிக்க நம் பாரத நாடு எத்­த­னையோ இன்­னல்­க­ளுக்கு இலக்­காகி விளங்­கிய பொழுது அதன் விடு­த­லைக்­காக, சுதந்­தி­ரத்­திற்­காக தமது உயிரை துச்­ச­மென நினைத்து, இந்­திய மக்கள் சொல்­லொணா துன்­பங்­க­ளுக்கும், துய­ரங்­க­ளுக்கும் மத்­தியில் அளப்­பெரும் தியா­கத்தை செய்து நாட்டை வெள்­ளை­ய­ரு­டைய ஆதிக்­கத்தில் இருந்து காப்­பாற்­றி­னார்கள்.

எத்­த­னையோ தலை­சி­றந்த அறி­ஞர்கள், கல்­வி­மான்கள், அர­சி­யல்­வா­திகள், மாமே­தைகள் இந்­திய நாட்டின் விடு­த­லைக்­காக பாடு­பட்ட பொழு­திலும் ‘நான் ஒரு இந்­தியன்’ என்று பெரு­மையை தேடித் தந்­தவர் காந்­தி­ய­டிகள் ஆவார்.
இந்­தி­யாவை வெள்­ளை­யர்கள் அடக்கி ஆண்ட பொழுது மக்கள் விழித்­தெ­ழுந்­தனர். ‘வெள்­ளை­யனே வெளி­யேறு’ என்று கோஷம் எழுப்­பினர். தமி­ழ­கத்­திலே பார­தியார், இரா­ஜ­கோ­பா­லச்­சா­ரியார் போன்ற பெரு­மக்கள் வீறு­கொண்­டெ­ழுந்­

தனர். ராஜா ஜீ சென்­னை­யிலே சட்டக் கல்­லூரி மாண­வ­ராகப் பயின்று கொண்­டி­ருந்த பொழுது அவ­ரது சிந்­த­னைகள் எல்லாம் இந்­திய நாட்டின் மக்­களைப் பற்­றியும், அடி­மைப்­பட்டுக் கிடந்த இந்­தி­யாவின் இழி­நிலை பற்­றி­யுமே எண்­ண­மி­ட­லா­யின. இக்­கால கட்­டத்­திலே நாட்­டிலே விடு­த­லை­வேட்கை தளிர் விட்­டி­ருந்த காலம், ஆத்­மீ­கத்­தோடு அர­சி­ய­லையும் கலந்து வாழ்ந்த அற்­புதப் பிறவி காந்தி மகானின் அரு­ம­ருந்­தன்ன சீட­ரா­கவும், சான்­றோ­னா­கவும், சாணக்­கி­ய­ரா­கவும் விளங்­கி­ய­தோடு இந்­திய நாட்டின் விடு­த­லைக்­காக காந்­தி­ய­டி­க­ளோடு தோளோடு தோள் நின்று உழைத்தார்.

மோகன்தாஸ் கரம்சண்ட் காந்தி அடிகள் 1915ஆம் ஆண்டு அர­சி­யலில் பிர­வே­சித்தார். இதன் கார­ண­மாக, வழக்­க­றி­ஞ­ராக விளங்­கிய காந்­தி­ய­டிகள் தமது தொழிலைத் துறந்து, குடும்­பத்தை மறந்து, அர­சி­யலில் மிகவும் ஈடு­பாடு கொண்டு பல இன்­னல்­க­ளுக்கு மத்­தியில் இந்­திய நாடு சுதந்­திரம் அடை­வ­தற்­காகப் பற்­பல தியா­கங்­களைச் செய்தார்.
காந்­தி­ய­டிகள் தென் ஆபி­ரிக்­காவில் வழக்­க­றி­ஞ­ராக தமது தொழிலைச் செய்து கொண்­டி­ருந்த பொழுது பல இன்­னல்­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டி­ய­வ­ராக வாழ்ந்து கொண்­டி­ருந்தார்.

ஒரு சமயம் ரயில் வண்­டியில் பயணம் செய்து கொண்­டி­ருந்த பொழுது இவர் கறுப்பு இனத்தைச் சேர்ந்­தவர் என்று அவ­ரு­டைய பாத­ணி­யையும், பொருட்­க­ளையும் வெளியே தூக்கி எறிந்­த­தோடு, காந்தி அடி­க­ளையும் வண்­டி­யி­லி­ருந்து தூக்கி எறிந்து விட்­டனர் வெள்­ளை­யர்கள். இதன் கார­ண­மாக வெள்­ளை­யரின் ஆதிக்­கத்­தி­லி­ருந்து விடு­தலை பெறவும், நாடு சுதந்­திரம் அடை­யவும் திட­சங்­கற்பம் பூண்டார்.

காந்­தி­ய­டிகள் நாடு சுதந்­திரம் அடை­வ­தற்­காக சத்­தியாக் கிர­கத்தை மேற்­கொண்டார். அந்­நி­யரின் அடக்­கு­மு­றையை ஒத்­து­ழையா இயக்­கத்தின் மூலம் செய்து காட்­டினார். தமது அமை­தி­யான, எவ­ருக்கும் தீங்கு விளை­விக்­காத மனப்­பான்மை மூலம் பிரித்­தா­னிய சாம்­ராட்யத்தை தலை­கு­னிய வைத்தார். இதன் கார­ண­மாக வெள்­ளை­யர்கள் திகைப்­ப­டைந்­தனர். என்ன செய்­வது என்று தெரி­யாது தடு­மா­றி­னார்கள்.

இவை யாவற்­றிற்கும் கார­ண­மாக அமைந்­தது இவர் சிறு வய­திலே கண்­டு­க­ழித்த அரிச்­சந்­திர நாட­க­மே­யாகும். இவ் நாட­கத்­திலே சொல்­லப்­பட்ட வச­னங்கள் இவரை மிகவும் கவர்ந்­தன. அதா­வது, ‘பதி இழக்­கிலும், பாலனை இழக்­கினும், கதி இழக்­கினும், கட்­டுரை இழக்­கிலேன்? கட்­டுரை என்­பது வாய்மை.

இதுவே காந்­தி­ய­டிகள் இந்­திய நாடு சுதந்­திரம் அடை­வ­தற்கு தூண்­டு­கோ­லாக அமைந்­தது. அதுவே அவரின் வெற்­றியும் ஆகும். மற்­றை­யது மகா­பா­ர­தத்தில் கிருஷ்ண பக­வானால் அருச்­சு­ன­னுக்குப் போதிக்­கப்­பட்ட ‘பக­வத்­கீ­தை­யாகும்’ எத்­த­கைய பிரச்­சி­னைகள் வந்த பொழுதும், கட­மையில் நின்று வெளி­யேறக்

கூடாது. பிரச்­சி­னைகள் வந்­தேதான் ஆகும். ஆயினும், ‘பிரச்­சி­னை­க­ளைத்­தக்க முறையில் ஆராய்ந்து, தீர்வு காண்­பதே சிறந்­தது என்­பதை காந்­தி­ய­டிகள் தமது வாழ்க்­கையில் எந்தச் சூழ்­நி­லை­யிலும் தவ­றாது கடைப்­பி­டித்தார். இது மட்­டு­மன்றி தமது எதி­ரி­களின் எண்­ணங்­களுக்கும், சிந்­த­னை­க­ளுக்கும் மதிப்­ப­ளித்தார். தன்னை எதிர்த்­த­வர்­க­ளையும் சாதுரி­ய­மாக வெல்ல முடியும் என்­பதை நன்­க­றிந்­தி­ருந்தார்.

ஒரு­ச­மயம் புதுடெல்­லியில் அமைந்­தி­ருந்த ‘Vicerory” மாளி­கைக்கு LORD ERWIN என்­ப­வரை சந்­திக்க காந்தி அடிகள் சென்­றி­ருந்தார். இதை அன்­றைய கால­கட்­டத்தில் இருந்த பிரித்­தா­னிய பிர­தமர் வின்ஸ்ரன் சேர்ச்சில் மிகவும் கடு­மை­யாக விமர்­சித்தார். அரை நிர்­வா­ணத்­தோடு இருக்கின்ற பாதி­ரி­யா­ரா­கிய காந்தி,

 பிரித்­தா­னிய சாம்­ராச்­சி­யத்தின் பிர­தி­நி­தி­யாக இருக்­கின்ற ‘Vicerory” அரை நிர்­வா­ணத்­தோடு காண்­ப­தற்குச் செல்­கின்றார் என்று மிகவும் கடு­மை­யாகச் சாடினார். அதற்கு காந்தி அடிகள் ‘வின்ஸ்ரன் சேர்ச்சிலுக்கு’ கடித மூலம் கூறி­யது என்­ன­வெனில், நீங்கள் கூறி­யதை இட்டு நான் மட்­டற்ற மகிழ்ச்சி அடை­கிறேன். இதை நான் தவ­றாது என்றும் கடைப்­பி­டிக்க நினைத்தேன். இதை இன்று நான் செய்து காட்­டி­யுள்ளேன். ஆகை­யி­னாலே நீங்கள் கூறி­யது உண்­மை­யி­லேயே ஒரு பாராட்­டாக நான் மதிக்­கிறேன் என்று கூறி ‘வின்ஸ்ரன் சேர்ச்­சிலின்’ வாயை அடக்­கினார்.

இது­மட்­டு­மன்றி ஒரு சமயம் காந்தி அடிகள் நாட்டின் அமை­திக்கு இன்னல் விளை­வித்­த­தாகக் கூறி கோட்டில் ஆஜ­ரா­கு­வ­தற்­காக அழைத்துச் செல்­லப்­பட்டார். அச்­ச­மயம் கோட்டில் இருந்த அனை­வரும் காந்­தியைக் கண்டு எழுந்து மரி­யாதை செய்­தனர். இதைக் கண்­ணுற்ற வெள்­ளைக்­கார நீதி­ப­தியும் எழுந்து அவ­ருக்கு மரி­யாதை செய்ய நேரிட்­டது. ஒரு கைதிக்கு நீதி­பதி, அதுவும் வெள்­ளைக்­கார நீதி­பதி மரி­யாதை செய்­தது இது­வே­யாகும்.

வழக்கை விசா­ரித்த நீதி­பதி காந்­தியை நோக்கி கூறி­யது என்னவெனில், ‘நீங்கள் மக்­களின் மனதில் ஒரு ஞானி­யாக கட­வு­ளாகக் கரு­தப்­ப­டு­வதை நான் அறிவேன். ஆயினும் கூட சட்­டத்தின் படி உங்­க­ளுக்கு ஆறு­மாதக் கடும் தண்­டனை வழங்­கு­கிறேன் என்று தமது தீர்ப்பில் வாசித்தார். அப்­போது காந்தி அடிகள் கூறினார், ‘கனம் நீதி­பதி அவர்­களே’ நீங்கள் எனக்கு குறைந்த தண்­ட­னையை வழங்­கி­யி­ருக்­கி­றீர்கள் என்று’.

அப்­போது கோட்டில் கூடி­யி­ருந்த மக்கள் கண் கலங்கி அழத் தொடங்­கி­னார்கள். இவர்­களை நோக்கி, ‘காந்­தி­ய­டிகள் கூறி­ய­தா­வது, ‘மண­ம­களை, மண­மகன் முத­லி­ரவு சந்­திக்கப் போவது போன்று, சிறைச்­சா­லைக்குச் செல்ல வேண்டும் என்று கூறி மக்­களை சாந்­த­ம­டையச் செய்தார். ஆகை­யி­னாலே காந்­தி­மகான் எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் சல­ன­ம­டை­ய­வில்லை. எதையும் தாங்கும் ‘செயல் வீர­னா­கவே’ வாழ்ந்தார்.

இன்னும் ஒரு சமயம் உல­கப்­புகழ் ரவிந்­தி­ரநாத் தாகூருக்கும் காந்தி அடி­க­ளுக்கும் முக்­கிய சம்­பா­ஷணை நடை­பெற்­றது. அப்­போது ரவிந்­தி­ரநாத், ‘உலக இயற்கை அழகை விப­ரித்தார்’ இதை நீங்கள் உலக மக்­க­ளுக்குக் கூற வேண்டும் என்று காந்­தியைக் கேட்டுக் கொண்டார். அதற்கு காந்தி அடிகள் ‘இவற்றை எல்லாம் எப்­படி ஒரு வேளை சாப்­பாட்­டுக்குக் கஷ்­டப்­ப­டு­கின்ற மக்­க­ளுக்கு என்னால் கூற முடியும் என்று சொல்லி ரவிந்திரநாத் தாகூரின் பேச்சை அடக்­கினார்.

காந்தி அடிகள் இந்­தியா எக்­கா­ர­ணத்தைக் கொண்டும் பிரிக்­கப்­ப­டக்­கூ­டாது என்று கூறிய பொழுது, ‘ஜின்னா’ எப்­ப­டி­யா­கிலும் பிரிக்­கப்­பட்டே ஆக வேண்டும் என்று தீவிர கொள்­கை­யோடு நின்றார். அச்­ச­மயம் Mount Batten இந்­தி­யா­விற்கு Viceroy ஆக அனுப்­பப்­பட்டு நாடு பிரிக்­கப்­பட்­டது.
இதை காந்தி அடிகள் வன்­மை­யாகக் கண்­டித்தார். ஆயினும் சில தீவிர இளை­ஞர்கள் காந்­தியின் கொள்­கையை ஆத­ரிக்­காது அவரைக் கொலை செய்­வ­தற்கு ஆயத்­த­மா­னார்கள். காந்தி அடிகள் பிரார்த்­த­னைக்குச் செல்லும் போது, ‘கோட்சே’ என்­பவள் காந்தி அடி­களை நோக்கி ரிவோல்­வரால் சுட்டுக் கொன்றான்.

இதை கேள்­விப்­பட்ட உலக மக்கள் கலங்­கி­னார்கள். கண்ணீர் விட்­டார்­களே. அன்­றைய கால­கட்­டத்தில் இந்­திய பிர­த­ம­ராக இருந்த, ‘ஜவ­ஹர்லால் நேரு’ தமது உரையில் கூறி­ய­தா­வது, ‘இந்­திய நாட்டின் விலை­ம­திக்க முடி­யாத தந்தை’ காந்­தி­ய­டிகள் நம்மை விட்டுப் பிரிந்­து­விட்டார். ஆயினும் அவர் உண்­

மை­யி­லேயே ஒரு ‘அம­ர­தீபம்’. எதிர்­வரும் காலத்தில் காந்தி அடிகள் மக்­களின் மன­திலே என்றும் அழி­யாத தீப­மாக விளங்­குவார் என்று தமது உரை­யிலே கூறினார்.
காந்­தி­ய­டிகள் தரு­மமே நல்­லாட்­சியின் அஸ்­தி­வாரம் என்று முடி­வான கருத்­துடன் அர­சி­யலைத் தூய்மை செய்தவர்.

ஜனநாயகம் என்பது அனைவரினதும் ஆத்மீக பலத்தையே சார்ந்தது என்று முற்றுணர்வுடன் சிறுபான்மையினரின் நியாயமான நலன்களுக்காகப் போராடினார். ஏழை மக்கள், குறைந்த சாதியினர் யாவரையும் கடவுளின் பிள்ளைகள் என மதித்து வாழ்ந்ததோடு, தனிமனிதர் ஒவ்வொருவரின் சிறப்புப் பண்பும் பூரணமாக பொலிவுற்று அதன் விளைவாகத் தேசம் முழுவதும் சுபீட்சம் காண வேண்டும் என்ற உணர்வில் நிலைத்து நின்று வாழ்ந்தவர் காந்தி அடிகள்.

காந்தியைச் சரியாகப் புரிந்துகொள்ளாத வர்கள் அல்லது வேண்டுமென்றே சுயநல னுக்காக அவரைச் சரியாக புரிந்துகொள்ள மறுப்பவர்கள், அவரை எதிர்த்தார்கள். காந்தி அடிகள் எதிர்ப்புக்களினின்று எட்டாத தொலைவில் நின்று பணி புரிந்தார். எந்தக் கருமேகமும் தொட முடியாத ஹிமாலயப் பனிமுடியாக, அவர் பரம நிர்மலமாக மகோன்னதமாக வாழ்ந்த உலகப் பேரொளி

செவ்வாய், 1 அக்டோபர், 2013

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சபிரா

 
  நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி.சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி. சபிரா அவர்களின் முதலாவது பிறந்தநாள்.01.10. 2013 இன்று வெகுவிமர்சாயாககொண்டாடுகின்றார்இவரைஅன்பு அப்‌பாஅம்மா
அப்‌பப்‌பா அப்‌பம்மா ஐய்யாமார் அம்மம்மாமார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  மாமா மாமி மார் §
மச்சான் மச்சாள் மார் மற்றும் நபர்கள் குடும்ப உறவுகள் ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார்அருள்புரிய. பல் கலைகளும் பெற்று
பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவற்கிரி இணையங்களும் உறவு இணைய ங்களும்{ஐய்யா குடும்பம் சுவிஸ்}
 வாழ்த்துகின்றோம்.
 

மகளை கற்பழித்த தந்தைக்கு 25 வருட சிறைத்தண்டனை


பாகிஸ்தானில் 7 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 25 வருட சிறை தண்டனை மற்றும் ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்து லாகூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லாகூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள பாடாபூரில் 2012ம் ஆண்டில் கூலித் தொழிலாளியான ரஹமத் அலி, தனது 7 வயது மகளை பாலியல் பலாத்காரமó செய்துள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு லாகூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பை திங்கள்கிழமை வழங்கிய நீதிபதி குலாம் அப்பாஸ் சியால், ரஹமத் அலிக்கு 25 வருட சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதம்

சனி, 28 செப்டம்பர், 2013

விமானிகள் உறக்கம் பறந்துகொண்டிருந்த விமானத்தில்


பிரித்­தா­னிய பய­ணிகள் விமா­ன­மொன்று பறந்­து­கொண்­டி­ருந்­த­போது இரு விமா­னி­க ளும் உறங்­கிக்­கொண்டு சென்­ற­தாக வெளி­யான தகவல் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

எயார் பஸ் ஏ330 ரகத்தைச் சேர்ந்த இந்த விமா­னத்தின் இயக்­கத்தை “ஒட்டோ பைலட்” முறை­மைக்கு மாற்­றி­விட்டே இவர்கள் இவ்­வாறு உறங்­கி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த மாதம் இடம்­பெற்ற இச்­சம்­பவம் தொடர்­பான தகவல் கடந்த செவ்வாய்க்கிழமை வெளி­யா­கி­யுள்­ளது. விமானம் தரை­யி­லி­ருந்து கிளம்­பி­ய­வுடன் விமா­னத்தை ஒட்டோ பைலட் முறை­மைக்கு மாற்­றி­விட்டு ஒருவர் மாறி ஒருவர் சிறிது நேரம் உறங்­கு­வ­தற்கு தலைமை விமா­னியும் துணை விமா­னியும் இணங்­கினர்.

ஆனால் அவர்­களில் ஒருவர் விழித்­தெ­ழுந்து பார்த்­த­போதே இரு­வரும் உறங்­கிக்­கொண்­டி­ருந்­ததை உணர்ந்­துள்ளார். இச்­சம்­பவம் குறித்து இவர்கள் தாமா­கவே முன்­வந்து பிரித்­தா­னிய சிவில் விமான சேவைகள் அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்­துள்­ளனர்.

இத்­த­கைய சம்­ப­வங்கள் குறித்த தக­வல்­களை அம்­ப­லப்­ப­டுத்­து­வதை ஊக்­கு­விப்­ப­தற்­காக, இவ்விமானிகள் பணியாற்றும் நிறுவனத்தின் பெயரை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அதிகாரிகள் வெளியிடவில்லை

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

ஒரே செடியில் உருளைக்கிழங்கும் தக்காளியும்


""பொது அறிவு   ""
உரு­ளைக்­கி­ழங்கும் விளையும் தாவ­ர­மொன்றை விற்­பனை செய்யும் நட­வ­டிக்­கையை பிரித்­தா­னிய நிறு­வ­ன­மொன்­று­ ஆ­ரம்­பித்­துள்­ளது.

தக்­காளி (tomato), உரு­ளைக்­கி­ழங்கு (potato) தாவ­ரங்­களை ஒன்­றி­ணைத்து உரு­வாக்­கப்­பட்­டுள்ள இத்­தா­வ­ரத்­துக்கு TomTato என பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.
சுமார் 500 தக்­கா­ளிக்­காய்­களும் கணி­ச­­மா­ன­ளவு உரு­ளைக்­கி­ழங்கும் இந்த செடியில் விளையும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஓரே தாவரக் குடும்­பத்தைச் சேர்ந்­த­வை­யாக இருப்­பதால் தக்­காளி, உரு­ளைக்­கி­ழங்கு தாவ­ரங்­களை இணைத்து ஒரே செடி­யாக்­கு­வது சுல­ப­மா­னது எனக் கூறப்­ப­டு­கி­றது. ஏற்­கெ­னவே ஆர்வம் கொண்ட விவ­சா­யிகள், வீட்டுத் தோட்­டச்­செய்­கை­யா­ளர்கள் சிலர் இத்­த­கைய செடி­களை உரு­வாக்­கி­யுள்­ளனர்.

ஆனால் தொம்ஸன் அன்ட் மோர்கன் எனும் நிறு­வனம் இத்­த­கைய தாவ­ரங்­களை வர்த்­தக ரீதியில் உரு­வாக்கி விற்­பனை செய்ய ஆரம்­பித்­துள்­ளது.
சாடியில் வைக்­கப்­பட்ட 9 சென்றி மீற்றர் உய­ர­மான தாவரம் 14.99 ஸ்ரேலிங் பவுண்­க­ளுக்கு (சுமார் 3100 ரூபா) விற்கப்படுகிறது. இதை வீட்டில் வளர்த்து தக்காளிகளையும் உருளைக்கிழங்குளையும் அறுவடை செய்யலாம். காணொளி


 



 

சனி, 21 செப்டம்பர், 2013

நிம்மதியாக தூங்கலாம்: புகையை விட்டால்ஆய்வில் தகவல்


புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டால் நிம்மதியாக தூங்கலாம் என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
புகைபிடிப்பதால் பல்வேறு நோய்களும், அவற்றின் மூலம் மரணமும் ஏற்படுகிறது.

புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வகையில், புளோரிடா பல்கலையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், புகைப்பழக்கத்திற்கும், தூக்கத்திற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு சிகரட்டும் 1.2 நிமிட தூக்கத்தை கெடுப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

புகைபிடிப்போரில் 11.9 சதவிகிதம் பேர் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதாகவும், 10.6 சதவிகிதம் பேர் நள்ளிரவில் எழுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
 

வியாழன், 19 செப்டம்பர், 2013

கந்தன் தோன்றுவார்எனநம்பி கூடிஏமாந்த அடியவர்கள்


கதிர்காமத்தில் கதிர்காம கந்தன் நேற்று தோன்றுவார் என ஜோதிடரான மஞ்சுள பீரிஸ் ஜோதிடத்தின் பிரகாரம் எதிர்வு கூறியிருந்ததன் காரணமாக நேற்று அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்கள் கதிர்காமத்தில் கூடியிருந்தனர்.

பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கதிர்காம ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்ற மக்கள் கிரிவெஹர மாவத்தை, அபினவராமய உட்பட பல இடங்களில் குழுமியிருந்தனர். .இதனால் கதிர்காம ஆலய பூமி மக்களால் நிரம்பி காணப்பட்டது.

சாதாரணமாக கிழமை நாட்களில் இப்படி பெருந்தொகையான மக்கள் ஆலயத்திற்கு வருவதில்லை என ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர். மஞ்சுள பிரிஸின் ஜோதிட எதிர்வுகூறலே பக்தர்கள் அதிகளவில் வருவதற்கான காரணம் எனவும் அவர்கள் கூறினர்.

குழந்தைகளை தூக்கி கொண்டும் அர்ச்சனை பாத்திரங்களை ஏந்தி கொண்டும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
ஆலயத்திற்கு சென்றிருந்த பலர் மஞ்சுள பீரிஸின் ஜோதிட எதிர்வு கூறல் பற்றி கேட்டுக்கொண்டிருந்தனர்.

எனினும் கதிர்காம ஆலயத்திற்கு சென்றிருந்த பக்தர்களிடம் விசாரித்த போது தாம் கதிர்காம கந்தனை நேரடியாக எங்கும் காணவில்லை. அத்துடன் கந்தனை கண்ட எவரையும் அங்கு பார்க்க முடியவில்லை என்றனர்.



 

புதன், 18 செப்டம்பர், 2013

வகுப்பறையில் குழந்தை பெற்ற இந்தியப்பெண்


 
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் இந்தியாவை சேர்ந்த டயானா கிரிஷ் (வயது 30) ஆசிரியை ஆக பணி புரிகிறார். இவரது கணவர் பெயர் விஜய் வீரமணி (31). இவர்களுக்கு ஒன்றரை வயதில் நோவா என்ற ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் டயானா மீண்டும் கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான அவர், பிரசவத்துக்காக கடந்த வெள்ளிக்கிழமை முதல் விடுப்பு எடுப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாள் அன்றே (வியாழக்கிழமை) டயானாவுக்கு பள்ளி வகுப்பறையிலேயே ஆண் குழந்தை பிறந்தது.

அன்று பள்ளிக்கு சென்ற டயானா, தலைமை ஆசிரியர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு இடுப்பு வலி ஏற்பட்டது. உடனே இதுகுறித்து சக ஆசிரியைகளிடம் தெரிவித்த டயானா, கணவர் விஜய்க்கும், உடனே வந்து தன்னை வீட்டுக்கு

அழைத்துச்செல்லுமாறு டெ
லிபோனில் கூறினார். அவரும் விரைந்து பள்ளிக்கு சென்றார்.
இதற்குள் டயானாவுக்கு வலி அதிகரித்தது. சக ஆசிரியைகள் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு போன் செய்தனர். ஆம்புலன்சும், கணவரும் வருவதற்கு முன்னதாக, வகுப்பறையில் படுக்க வைக்கப்பட்டிருந்த டயானாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது

அந்த குழந்தைக்கு ஜோனா என்று பெயர் சூட்டப்பட்டது. இதனால் பிரசவம் நடந்த வகுப்பறைக்கும், பள்ளி நிர்வாகம் ஜோனா வகுப்பறை என்று பெயர் சூட்டியது.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

மாணவர்களை காப்புறுதி செய்ய நடவடிக்கை


நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களை காப்புறுதி செய்யும் திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்தகவலை கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க இது தொடர்பில் கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது வெளியிட்டுள்ளார் .

 இதன்படி சுமார் 40 இலட்சம் பாடசாலை மாணவர்கள் காப்புறுதி செய்யப்படவுள்ளனர்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சனி, 14 செப்டம்பர், 2013

யாழில் அதிகரிக்கும் கொள்ளை!

 

யாழ்.குடாவில் ஆலய நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு குற்றச்செயல்களும் அதிகளவில் இடம்பெற்றுவருவதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழாவிற்கு மக்கள் சென்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாழ்.குடாவின் பல பகுதிகளிலும் உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளையர்கள் சூறையாடியதில் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிறீலங்கா காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
மேற்படி சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற 4 கொள்ளை மற்றும் களவுச்

சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் இதுவரைக்கும் கைது செய்யப்படவில்லை என்று கூறும் அளவிற்கு கொள்ளையர்கள் நன்கு திட்டமிட்டு இச்செயலில் இறங்கியுள்ளனர். கடந்த வாரம் நல்லூர்த் தேர்த்திருவிழாவின் போது மட்டும் 3 இடங்களில் திருட்டு இடம்பெற்றுள்ளது.

 யாழ்.கந்தர் மடப் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்து 6 இலட்சத்து 27 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள், பணம் மற்றும்  நீர்வேலி தெற்கு, நீர்வேலி பகுதியில் உள்ள வீட்டில் 23 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான பொருட்கள், பணம் என்பனவும் பட்டப் பகல் வேளைகளில் திருடப்பட்டுள்ளமை

குறிப்பிடத்தக்கது.
கந்தர்மடம் பகுதியில் உள்ள விரிவுரையாளர் ஒருவரின் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நல்லூர் தேர் திருவிழாவிற்கு வீட்டில் உள்ள அனைவரும் வீட்டினை பூட்டிவிட்டு சென்றுள்ளார்கள். வீட்டை உடைத்து உட்புகுந்த திருடர்கள் அங்கு தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். கந்தர்மடம் புகையிரத நிலைய வீதியில் உள்ள, தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் முரளிதரனின் வீட்டிலேயே இந்த துணிகரக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று அன்றைதினம் இரவு யாழ்.பிறவுண் வீதியில் உள்ள வீடு

ஒன்றினை உடைத்து உட் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 6 இலட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபா பெறுமதி வாய்ந்த பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த முதலாம் நாள் ஞாயிற்றுக்கிழமை யாழ்.சீனியர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் பட்டப்பகலில் சினிமாபாணியில் கொள்ளையிடப்பட்டுள்ளது. அன்றையதினம்

வயோதிபர்கள் இருவரையும் தனியாக விட்டு விட்டு  எல்லோரும் நல்லூர் ஆலயத்தில் வேல்விமானத் திருவிழாவிற்குச் சென்றுள்ளனர். இதனை நன்கு அவதானித்து வைத்திருந்த கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டுக்குச் சென்று அங்கிருந்த வயோதிபர்கள் இருவரையும் கட்டிப் போட்டுவிட்டு, அங்கிருந்த 6 இலட்சத்து 40 ஆயிம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தினைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் வீட்டு உரிமையாளர்கள் யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள போதும் அவர்களால், கொள்ளையர்களைக் கண்டு பிடிக்கமுடியவில்லை. விடுதலைப் புலிகள் யாழ்.குடாவில் தமது நிர்வாகத்தைச் செலுத்திய காலப் பகுதியில் நள்ளிரவு வேளையில் கூட ஒரு பெண் எவ்வளவு நகைகளையும் அணிந்துகொண்டு செல்ல முடியும் என முன்னரும் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தோம்.

ஆனால் இன்று அந்த நிலை மாறி பட்டப்பகலில் கூட வீடுகளில் தனித்து இருக்க முடியாத நிலையே அங்கு உள்ளது. அண்மையில், வடபகுதிக்குச் சென்றிருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள்கூட அங்கு பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையே அங்கு தொடர்கின்றது என்பதை நிரூபிக்கும் அளவிற்கு அங்கு சம்பவங்கள் நாளும் நடந்தேறுகின்றன. 

இந்நிலையில், யாழ். உடுவிலில் வீதியால் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை உந்துருளியில் வந்த இளைஞர்கள் அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் காவல்துறைப்

பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்தத் திருட்டுச் சம்பவத்தில் இரண்டு பவுண் நிறையுடைய சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியே வீதியால் சென்ற இளைஞர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. குறித்த பெண் கூச்சல் இட்டபோதும் குறித்த இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். நெடுந்தீவில் மீண்டும் திருட்டுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சிறிலங்கா இராணுவத்தின் துணைக்குழுக்களின் கோட்டையாக விளங்கும்  இப்பகுதிகளில் அண்மைக் காலமாக மிதிவண்டித் திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாகப் பொது மக்கள் முறையிட்டுள்ளனர். இதேபோல் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் பல நோ.கூ. சங்கத்தின் முதலாவது கிளையில் கூரையைப் பிரித்துக்கொண்டு உள்ளே இறங்கிய திருடர்கள் சுமார் பத்தாயிரம் ரூபாவிற்கு அதிகமான பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

அத்துடன், நெடுந்தீவு மேற்கிலுள்ள உபதபாலகத்தின் கூரையைப்பிரித்துக் கொண்டு உள்ளிறங்கிய திருடர்கள் அங்கும் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். இந்நிலையில் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்ற திருட்டை அடுத்து அந்தக் கிளையை சங்கம் மூடியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, தமிழர் தாயகப் பகுதிகளில் கொள்ளைகள், சூறையாடல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சிறிலங்கா அரசின் கையாலாகாத காவல்துறையினர், இவற்றுக்குத் துணைபோவதுடன் தடுத்து நிறுத்த நாதியற்றவர்களாய் உள்ளனர். உலகெங்கும் வாழ் தமிழ் உறவுகளே இது உங்களின் கவனத்திற்கு! நீங்கள் ஓய்ந்து இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சிறிலங்கா இனவாதத்திற்கு சாதகமே.

எதிர்வரும் 16.09.2013 திங்களன்று ஜெனிவாவில் ஐ.நா முன்றலில் இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டப் பேரணியில் ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு எமது மக்களின் விடிவுக்காக உலக தமிழினம் உரிமைக்குரல் எழுப்ப வேண்டும்

வியாழன், 12 செப்டம்பர், 2013

சரும குறைபாட்டை போக்கி இளமை தோற்றம்

       
 
தரும் தேன் சிறு சிறு தேன் துளிகள் சருமத்தைப் பராமரிக்கும் பணியினை ஆச்சரியப்படத் தக்க வகையில் செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது வரை பருகும் தேநீரில் சர்க்கரைக்கு மாற்றாக தேனைப் பயன்படுத்தியிருப்பீர்கள். இப்போது அழகுப் பராமரிப்பிற்கு தேனைப் பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
 
பொதுவாக தேனானது சருமத்தை மென்மையாக்குவது மட்டுமன்றி, அதனுடைய பாக்டீரியா எதிர்ப்புக் குணமும், ஈரமாக்கும் தன்மையும், சருமத்தின் குறைபாடுகளைப் போக்கி, அதன் இளமைத் தன்மையைப் பேணுகின்றது.
 
மேலும் இந்த தேன் சருமத்திற்கான பராமரிப்பில் மட்டுமின்றி, கூந்தல் பராமரிப் பிற்கான அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, பண்டைக் காலத்திலிருந்து சிறந்த உணவுப் பெருளாக பயன்படும் தேன் தற்போது, சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கும் பயன்படுகிறது.
 
மொத்தத்தில் அழகுப் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக தேன் இருக்கும். இப்போது கூந்தல் பராமரிப்பிற்கும், சருமப் பராமரிப்பிற்கும் சில தேன் கலந்த வீட்டுக்குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்திப் பாருங்கள்.
கூந்தலுக்கு :
 
சிக்கலற்றபட்டுப் போன்ற கூந்தல் வேண்டுமா? அதுவும் குறிப்பாக மழைக்காலங்களில் கூந்தல் எண்ணெய் பசையின்றி பட்டுப்போல மென்மையாக இருக்க வேண்டுமா? அப்படியாயின் இம்முறையைப் பயன்படுத்திப்பாருங்கள்.
 
ஒரு கிண்ணத்தில், இரண்டு மேசைக் கரண்டி தயிர், இரண்டு முட்டைகள் (வெள்ளைக்கரு மட்டும்), எலுமிச்சைச் சாறு, ஐந்து துளி தேன் ஆகியவை கலந்து கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் படும்படி தேய்த்துக் கொள்ள வேண்டும். பின் அரை மணிநேரம் கழித்து, தண்ணீரில் நன்றாக
 அலச வேண்டும். இதனால் கூந்தலானது பட்டுப்போல மென்மையாகி இருப்பதைக் கவனிப்பீர்கள்.
பளபளப்பான கூந்தலுக்கு :
தேனுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து கூந்தல் மீது தடவி, சிறிது நேரம் கழித்துத் தண்ணீரில் அலசினால், கூந்தல் பளபளப்புடன் இருப்பதைக் காண முடியும்.
 
பருக்கள் :
சிலரது சருமம் எளிதில் பருக்கள் உருவாவதற்கு வசதியானதாக இருக்கும். பருக்கள் நிறைந்த சருமம் உண்மையிலேயே பராமரிப்பதற்கு கடினமானது தான். பருக்களைப் போக்குவதும் கடினமான காரியம் தான். எனவே வீட்டில் உள்ள மசாலா பொருள்களில் ஒன்றான பட்டையையும் சிறிது தேனையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
 
பின் இதனை பருக்களின் மீது தடவுங்கள். ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்க விடுங்கள். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவுங்கள். பருக்களைப் போக்குவதற்கு இது சிறப்பான ஒரு வீட்டு மருத்துவம்.
 
கலப்பட தேனுக்கான அறிகுறிகள் :
மார்க்கெட்டில் மிக எளிதாகக் கிடைக்கும் பொருள் தான் தேன் என்றாலும், அது தரமான தேனா என்று பார்த்து வாங்குங்கள். தேனில், வெல்லப்பாகு அல்லது சர்க்கரைப்பாகு அல்லது சில சமயங்களில் தண்ணீர் கலந்தும் கலப்படமான தேன் விற்கப்படுகிறது.
 
கலப்படம் செய்யப்பட்ட தேனில் இயற்கையான மருத்துவக் குணங்கள் இருப்பதில்லை. ஆகவே தேனை வாங்கும் போது கவனமாக இருங்கள். சுத்தமான தேனா அல்லது கலப்படம் செய்யப்பட்ட தேனா என்று சோதனை செய்ய ஒரு எளிய வழி, அதனை உறைய வைத்துப் பார்ப்பது ஆகும்.
 
அதற்கு வாங்கிய தேனை, வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரீசரில் ஒரு மணிநேரம் வைத்திருந்து எடுத்துப் பாருங்கள். சுத்தமான தேன் என்றால், அதே பிசுபிசுப்புடன் பாகு நிலையிலேயே இருக்கும். கலப்படம் செய்யப்பட்ட தேன் என்றால், உறைந்திருக்கும். வீட்டு தேன் பாட்டிலைச் சுற்றி எறும்புகள் மொய்க்கின்றனவா?
 
அப்படியென்றால் அது கலப்படமான தேன். சுத்தமான தேன் எறும்புகளை அண்டவிடாது. சிறிது நாள் கழித்து தேன் படிகங்களாக அடியில் படிகிறதா? அப்படி யென்றால், அது கலப்படமான தேன்ஆகும். ஏனெனில் அதில் சர்க்கரைப்பாகு கலக்கப்பட்டிருக்கிறது என்று பொருள்
 
தேன் வாங்கும் போது மேற்கூறிய சோதனைகளைச் செய்து பார்த்துக் கவனமுடன் வாங்குங்கள். தேனின் மருத்துவக் குணங்களைப் பெறுங்கள். நல்ல தேனை அடையாளம் கண்டுவிட்டீர்கள் என்றால், அந்தக் கம்பெனித் தயாரிப்புகளையே தொடர்ந்து வாங்குங்கள்

சீமான் கிட்ட பேச்சு இருக்குஎன்கிட்ட ஃபேக்ட்ஸ் இருக்கு :

 
 **நடிகை விஜயலெட்சுமி ‘‘மூணு வருஷமாக நானும் சீமானும் ரிலேஷன்ஷிப்ல தான் இருக்கோம். அவர் ஜெயிலுக்குப் போனதிலிருந்து, அவரோட அப்ஸ் அண்ட் டவுன்ஸ் எல்லாத்திலும் நான் கூடவே இருந்திருக்கேன். நாங்க கல்யாணம் பண்றதாகத்தான் இருந்துச்சு. எங்க ஃபேமிலியில எங்க திருமணத்தை

ஏத்துக்கிட்டதாலதான் தொடர்ந்து ரிலேஷன்ஷிப்ல இ ருந்தோம். பொதுவாக ஜெயிலுக்குப் போயிட்டு வந்தா யாரும் என்கரேஜ் பண்ண மாட்டாங்க. ஆனால் அப்ப கூட அவரோடயே நான் இருந்திருக்கேன்.

போன மாசம்தான் நாங்க ‘கல்யாணம் நடக்கவே மாட்டேங்குதே’னு கேட்டோம். சில வி.ஐ.பி.க்களை வைச்சு பேசிப் பார்த்தோம். அவங்ககிட்ட ‘எனக்கு அப்படியொரு ஐடியாவே இல்ல. நான் அவளைப் பார்த்தே ஒண்ணரை வருஷமாச்சு’ன்னு சொல்லியிருக்கார். அப்படீன்னா அவரோட மனசில என்னதான் இருக்குங்கிறதுதான் என்னோட கேள்வி.

நல்லா பழகுறாங்க. ஆனால் வெளியே சொஸைட்டியில யாராவது கேட்டால், ‘எனக்கு அப்படியொரு ஐடியாவே இல்ல’ன்னு சொல்றாங்க. நான் அந்தமாதிரி பொண்ணு இ ல்லைங்க. இருட்டுக்குள்ளே இருக்கிற ரிலேஷன்ஷிப்புக்காக நான் வரல. உங்க பத்திரிகையிலேயே ‘செத்த பொணத்துக்கு பொண்டாட்டி தேவையா’ன்னு அவரே சொல்றார். அப்புறம் அவரேதான் ‘நான் ஒரு இலங்கைப் பெண்ணைத் தேடிக்கிட்டு இருக்கேன். கட்டிக்கப் போறேன்’னு

சொல்றார். அவரே ஒரு குழப்பமான நிலையில இ ருக்கார்ங்கிறது தெளிவாகத் தெரியுது.’’
மதுரை ஹோட்டல்ல நீங்க தங்கினதா சொல்ற நாள்ல சீமான் சிறையிலிருந்ததாகச் சொல்றாங்களே?

‘‘அப்ப அவருக்கு பெயில் கிடைச்சது. வெளியே வந்தார். மதுரை நீதிமன்றத்துல அவர் கையெழுத்துப் போடவேண்டியிருந்துச்சு. அப்ப அவர் அந்த ஹோட்டல்ல இருந் தப்ப, அவரோட ஆட்கள் டிக்கெட் போட்டு என்னைக் கூப்பிட்டாங்கங்கிறதுதான் நான் கொடுத்த விஷயம். இதுதான் உண்மை. வெளியே அவர், ‘நான் தியாகி. எனக்கு ஈழ விஷயத்தைத் தவிர வேறெதுவும் இல்ல’ன்னு சொல்வார். என்கிட்ட ஃபேக்ட்ஸ் இருக்கு. அவர் கிட்ட பேச்சு இருக்கு.

நானும் தமிழ்ப் பொண்ணு. சைவப் பிள்ளைமார். காவிரிப் பிரச்னையில இருந்து ஒகேனக்கல் பிரச்னை வரைக்கும் நான் தமிழுக்காக நிற்கிற தமிழ்ப் பொண்ணு. தமிழ்நாட் டுல இருக்கிற தமிழ்ப் பெண்ணான என்னை இங்கே நிக்க வைச்சிட்டு ஈழத்துல இருக்கிற அகதிப் பெண்ணைத் தேடுறேன்னா என்ன அர்த்தம்?’’
நீங்க புகார் கொடுத்ததன் பின்னணியில காங்கிரஸ் பிரமுகர்கள் இருப்பதாக கிசுகிசு இருக்கே?

“குழாய்ல தண்ணி வரலன்னா கூட அதுக்குக் காரணம் காங்கிரஸ்தான்னு சொல்வார். என்னை நேருக்கு நேராகப் பார்த்து, ’நீ யாருன்னு தெரியல, நான் எதுவும் பண் ணல’ன்னு சொல்ல முடியுமா அவரால. எனக்கு இன்னிக்கு யாருமில்ல. நான் தனியாளாகத்தான் நிக்குறேன். எனக்கு காங்கிரஸ் ஆளு யாரும் சப்போர்ட் பண்ணல. நான் நேரடியாகவே போய் கமிஷனர்கிட்ட

 கம்ப்ளெய்ண்ட் கொடுத்திருக்கேன். எனக்கு யாரும் சப்போர்ட் கொடுத்துடக் கூடாதுனு இப்படிச் சொல்றார்.’’
இதுபோன்ற பிரச்னைகளில் நீங்கள் ஏற்கெனவே சிக்கி, உங்கள் மேல் புகார்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே...

‘‘பழைய கதையெல்லாம் முடிஞ்சு போச்சு. அந்தக் கதை முடிஞ்சு சீமான்கிட்ட நான் வந்தாச்சு. சீமானுடன் வந்த பிறகு ஒரு நாளைக்கு பத்து போனாவது பண்ணுவார். ‘எங்க போயிட்டு இருக்க.. எங்கே இருக்கே’ன்னு போன் பண்ணிட்டேதான் இருப்பார். மூணு வருஷமாக அவரோட ரிலேஷன்ஷிப்ல இருக்கும்போது நான் எங்கேயாவது போகமுடியுமா?

உங்க பழைய கதையெல்லாம் கேட்டு மன்னிச்சுதானே ஏத்துக்கிட்டேன். பச்சையாவே சொல்றேன் உங்களுக்கு ஆசை, அன்புன்னு தேவைப்பட்டப்ப நான் கொடுத்தேன்ல. எனக்கு அப்பாவும் இல்ல. அண்ணனும் இல்ல. எனக்குன்னு கேட்க வீட்டுல ஆம்பளை இல்ல.’’

இவ்வளவு நடந்த பிறகும் சீமானுடன் இணைந்து வாழ நீங்க தயாரா?
‘‘என்னை யாருன்னு கேட்ட பிறகு அவர் எனக்குத் தேவையே இல்ல. என்னை மாதிரி வேறெந்தப் பொண்ணும் ஏமாந்துடக்கூடாதுங்கிறதுக்குதான் இதை வெளியே கொண்டு வந்திருக்கேன்.’’

நீங்க கொடுத்த ஆதாரங்கள் போதுமான அளவு இல்ல. அதனால போலீஸ் நடவடிக்கை எடுக்கலன்னு ஒரு பேச்சு இருக்குதே?

‘‘விசாரணை சரியா போய்க்கிட்டு இருக்கு. அவர் சொல்றது பொய்னு ஆகும். நான் சொல்றது நிரூபணம் ஆகும். அம்மா ஆட்சியில, கலங்கி நிற்கும் பெண்ணுக்கு நீதி கிடைக்கும்னு நம்புறேன்.’’

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

இலக்கியச்சந்திப்பில் நாம் எப்போது நாகரிகமடைவது?


இதுவரை காலமும் புலம்பெயர்ந்த நாடுகளில் மட்டும் நடைபெற்று வந்த இலக்கியச் சந்திப்பின் 41-வது மாநாடு முதன்முறையாக இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கடந்த சனியும் ஞாயிறும் யாழ்ப்பாணம் அக்றேறியன் லேனில் உள்ள யூரோவில் மண்டபத்தில் இந்த இலக்கியச் சந்திப்பின் ஒவ்வொரு நாளும் சுமார் இருநூறு பேர்வரையில் வந்து கலந்துகொண்டிருந்தனர்.

நாட்டின் சகல பகுதிகளிலுமிருந்து வந்திருந்த இலக்கிய ஆர்வலர்களும் எழுத்தாளர்களும் பண்பாடு, சாதியம், இலக்கியம், தேசிய இனங்கள்-பிரச்சினைகள் ஆகிய தலைப்புகளில் பல மணிநேர விவாதங்களை நடத்தியிருந்தனர். பல புதிய கருத்துக்களும் நெஞ்சைத் தொடும் அனுபவப்பகிர்வுகளும் ஒவ்வொரு அமர் விலும் வெளிப்பட்டன.

முஸ்லிம் தேசியம், மலையகத் தேசியம் ஆகியவற்றின் முகிழ்ப்பின் பின்னுள்ள காரணிகள், சிங்களத் தேசியத்தின் எண்ணப்பாடுகள் குறித்த சிங்கள வளவாளர்களின் பகிர்வுகள், தமிழ்த் தேசியம் பற்றிய விசாரணை, சாதியம், பெண்களின் நிலை, வரலாற்று விடுபடல்கள், பண்பாட்டுருவாக்க நெருக்கடிகள் குறித்தெல்லாம் விரிவான பலதரப்பு விவாதங்கள் நடத்தப்பட்டன.

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவிலிருந்து இந்து ஆங்கில நாளிதழ், லண்டனிலிருந்து பிபிசி போன்றவை எல்லாம் இந்த இலக்கியச் சந்திப்பு பற்றி செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் தமிழ் ஊடகங்களில் இப்படி ஒரு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்து முடிந்ததற்கான அடையாளத்தையே காணக்கிடைக்கவில்லை. அதிலும் யாழ்ப்பாண ஊடகங்கள் கண்ணை மூடிக்கொண்டது ஏன் என்று யோசித்தால்தான் எங்கள் பத்திரிகா தர்மங்கள் ஊடக நடுவுநிலைமை எல்லாம் ஓடிவெளிக்கின்றன. மற்றவர்களின் கதையை காதுகொடுத்துக் கேட்கவே விரும்பாத போக்கும், மற்றவர் கதியை நினைத்தே பார்க்க விரும்பாத தன்மோகமும் தான் எங்கள் சமூகத்தை இன்னும் வழிநடத்து வதாகத் தெரிகிறது.

ஏனைய சமூகத்தவர்களை, ஏனைய பார்வைகளை ஏனைய பேச்சுக்களை சகித்துக்கொள்ளாமையும் அவற்றை மறைக்க முற்படுதலுமே நம் ஊடக அரசியல் கலாசாரமாக இருக்கிறது. நம்மைத் தவிர்ந்த மற்றவர்களை (மற்றவற்றை) நம்மைவிட மட்டமாக நினைப்பதும், இழித்து ஒதுக்குதலும் நமது மரபாயி ருந்துவரும் பழக்கங்களிலொன்று என்பது தெரிந்ததே. அது இவ்வளவு உலக மாற்றங்களுக்குப் பிறகும் இன்றும் தொடர்கிறது.

 வடக்கத்தியான், மோட்டுச் சீனா, தொப்பி பிரட்டி, காப்பிலி, பறங்கி, பாம்புதின்னி என்பவையெல்லாம் ஏனைய சமூகத்தைச் சேர்ந்தவர்களை விளிப்பதற்காக நாம் ஏற்கனவே தமிழில் வைத்திருக்கும் வார்த்தைகள் என்பதில் அதிசயமென்ன? இதிலுள்ள பாசிஸ மனோநிலையை இன்னும் உணராதவர் களாகவே நம்மில் பலர் இன்றும் இதே பாணியில்

பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் நினைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். அதையே தமிழ்ப் பெருமையாகவும் எண்ணிக்கொள்ளும் கடந்த காலத்தவர்களாக மாறாமனிதர்களாய் இன்னுமிருக்கிறோம்.

ஒருபடி மேலே போய், அந்த சமூகங்கள் நாம் நினைத்தமாதிரி நடக்கவில்லை என்றால், மிரட்டுவதும் சாபமிடுவதும் குதிப்பது மாக மிகக் கேலிக்கிடமாகவும் நடந்துகொள்கிறோம். நம்மை நாமே உயர்வாய் நினைத்துக்கொண்டு பிறரை விலக்குதல் மிரட் டுதல் ஒழித்துவிடுதல் என்ற எண்ணப்பாங்கிலேயே இன்னமும் நமது ஊடகங்களும் ஆதிக்க அரசியலாளர்களும் செயற்பட்டு வரு வதை அவதானிக்க முடிகிறது.

இங்கு பலர் இப்போதும் இனவாதத்தன்மை மாறாமலேயே சிந்திக்கிறார்கள்; எழுதுகிறார்கள். அதிலுள்ள அறக்கீழ்மை பற்றிய புரிதலும் குற்றவுணர்வும் கூட இல்லை. ம்… எப்போது நாகரிகம டைந்த மனித சமுதாயங்களில் ஒன்று என நாமும் ஆகப்போகி றோம்?
 

கொச்சினுக்கு தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது


  சட்டவிரோதமான முறையில் இந்தியாவின் கொச்சினுக்கு தங்கம் கடத்திச் செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இன்று காலை  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடத்திச் செல்ல முயன்ற தங்கத்தின் மொத்தப் பெறுமதி 27 இலட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான ஆணொருவரும், 46 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஆண் 350 கிராம் நிறைகொண்ட இரண்டு தங்க பிஸ்கட்டுக்களை மலவாயில் வைத்து கடத்திச் செல்ல முயன்றுள்ளார்.

மேலும் அவருடன் வந்த பெண் 200 கிராம் நிறைகொண்ட தங்கத்தினால் செய்யப்பட்டு வெள்ளி முலாம் பூசப்பட்ட கொலுசுகளை கால்களில் அணிந்து கடத்திச் செல்ல முயன்றுள்ளார்.

இவர்கள் இருவரும் இன்று காலை 7 மணியளவில் இந்தியாவின் கொச்சின் நோக்கி செல்லும்  ஸ்ரீலங்கன் எயார் யு.எல் 165 விமானத்தில் பயணிக்கும் பொருட்டு விமானநிலையத்திற்கு வந்துள்ளனர்.
எனினும் இவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது தங்கம் கடத்திச் செல்லவிருந்தமை தெரியவந்துள்ளது.

பின்னர் இவர்கள் கடத்திச் செல்ல முயன்ற தங்கத்தை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

திங்கள், 9 செப்டம்பர், 2013

மண்ணுக்கான மோதலில் தம்பியின் தாக்குதலில் அண்ணன் மரணம்

 
பொலன்நறுவை காலிங்க எல பிரதேசத்தில் சகோதரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெல் அறுவடை தொடர்பில் இச் சகோதரர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சினை மூண்டுள்ளது.

இதன்போது தம்பியின் தாக்குதலுக்கு இலக்கான அண்ணன் உயிரிழந்துள்ளார்.
அண்ணனுக்கு சொந்தமான வயலை தம்பிக்கு வழங்குவதாக குறிப்பிட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படாமையின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (08) மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலன்நறுவை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

குடிகாரர்களின் சாகசக் காட்சி..கொடூர விபத்தில் முடிந்தது..


பிரான்ஸின் வடக்கு பகுதியிலுள்ள பிரிட்டானியில் கார் சாகசம் மேற்கொள்ள முனைந்த போது 64 கார்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.

சுமார் 1500 பார்வையாளர்கள் கூடியிருந்த போது இந்த சாகசக்காட்சியை காண்பிக்க முனைந்தவர்கள் மதுபோதையில் இருந்தமையினாலேயே இக்கொடூர விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் நேரடிச் சாட்டிகளின் அடிப்படையாகக் கொண்டு 32 மற்றும் 37 வயதை உடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டு 2 வருட சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்{காணொளி}

 


வியாழன், 5 செப்டம்பர், 2013

நம் கல்லுாரி வாழ்க்கை.மீண்டும்வராது.!!!

சலனத்துடனும் சஞ்சலத்துடனும்
 கால் எடுத்து வைத்த நொடிகள்
 சத்தத்தின் உச்சத்தோடு
 பல பல புது முகங்கள்...!
பயத்துடனும் ப்ரியத்துடனும்
 பயணம்போல் தொடர்ந்து சென்று
'ஹாய்' என்ற வார்த்தையுடன்
 ஒரு சிறு புன்னகைகள்...!
வகுப்பறைக்குள் நுழைந்தவுடன்
 கதிரை மேசை தேடிச்சென்று
 பல்கனியில் பலர் நாம்
 கூடிப்படித்த நினைவலைகள்...!
பாசமாய் சில உறவு
 அன்போடு சில உறவு
 காதலுக்கும் குறைவில்லை
 கைகள் சில சேரவில்லை...!
கண்டிப்புடன் தண்டிக்காது
 கவலை தீர புத்தி சொல்லி
 கரைசேர்த்த காலங்கள் போய்
 கண்ணீருடன் சில துளிகள்...!
கலகலப்பாய் கைகோர்த்து
 பல பாசல் கைவைத்து
 அரை நிமிடம் உணவு உண்டு
 அதிக கதை கதைத்த நேரம்...!
கைபிடித்து மைதானத்தின்
 நடுவினிலே சுற்றித் திரிந்து
 சிரிப்புடனும் சண்டையுடனும்
 சினுங்கிய சில காலம்...!
அதிபரை கண்டவுடன்
 ஜந்து நிமிடம் அமைதியுடன்
 அடக்கமாய் இருந்துவிட்டு
 பிளைத்துக்கொண்ட சிறு நிமிடம்...!
ஆசையாய் பெயர்கள் தனை
 சுவரிலும் வாங்கிலுமாய்
 செதுக்கி உரிமையாக்கி
 மகிழ்ந்திட்ட சில நொடிகள்...!
சொந்தம் போல் நண்பர்கள் நாம்
 கைபிடித்து சுற்றி வந்து
 கவி வரைந்து நக்கலடித்து
 கழித்திட்ட சில பொழுது...!
கடிகார முள்பார்த்து
 பாடங்கள் தனை போக்கி
 இடைவேளைக்கு காத்திருக்கும்
 இனிய சில அரை மணி நேரம்...!
ஆங்கிலப் புத்தகத்தின்
 பக்கங்கள் சில பறித்தே
 றொக்கற் எய்திடவே
 முறைத்திட்ட சில காலம்...!
நிகழ்ச்சிகள் விழாக்கள் என
 ஓடி ஆடி போட்டி போட்டு
 புதிய சில ஆக்கங்கள்
 படைத்திட்ட சில நாட்கள்...!
சண்டையிட்டு மௌணமாகி
 கண்ணீரால் மேசை கழுவி
 ஊமைகளாய் போய்விட்ட
 பலனற்ற சில நிமிடம்...!
கதிரைகள் பல சேர்த்து
 பலர் கூடி இனைந்திருந்து
 பலர் கதை கதைத்திட்ட
 கலகலப்பான சில நாட்கள்...!
திசைமாறி சில பாடம்
 சிரிப்பின்றி புரிந்திட்டு
 சிதறடித்த சில பொழுதின்
 கசப்பான சில நாட்கள்...!
கடைசி வரை மாறாது
 கனிவுடனே பேசிக்கொண்டு
 கலகலப்பாய் எப்பொழுதும்
 கைகோர்த்த சில நாட்கள்...!
பிரிந்திட்ட சில நாளில்
 அதிஸ்ரமின்றி கண்ணீருடன்
 பிரியாவிடை தந்திடாத - நம்
 கல்லுாரி சொந்தங்கள்...!
இத்தனையும் தந்திட்ட
 கல்லுாரி வாழ்வு தனில்
 அர்த்தமின்றி நாம் வரைந்த
 சில நொடிப் பாடங்கள்...!
புகைப்படத்தின் நினைவு ழூலம்
 சிரித்திட்ட சில முகங்கள்
 புகைப்படத்தில் தவறிய - அரிய
 சில நல் முகங்கள்...!
அத்தனையும் நிறைந்த அந்த
 இரண்டரை மணி நேரம்
 வாழ்வாக அமைந்திட்ட - நம்
 ஆயுட்கால வாழ்க்கை...!
இத்தனையும் அனுபவித்த - நம்
 கல்லுாரி வாழ்வு தான்
 எக்காலம் சென்றாலும்
 மறவாத நம் இன்பம்...!
எத்தனை பிறவியிலும்
 இத்தனை இன்பம் காண
 கல்லுாரி வாழ்வொன்று
 காணோமா இனியும் நாம்...!
நினைவோரக் கனவுகளாய்
 நம் கல்லுாரிச் சொந்தங்கள்
 மொத்தத்தில் இனியாவும்
 வராது மீண்டும் வாழ்வில்.......!





செவ்வாய், 3 செப்டம்பர், 2013

ராணி பயன்படுத்திய கார் ஏலத்தில் விற்பனை,,

,   
இரண்டாம் எலிசபெத் ராணி உபயோகித்த லிமோசின் சொகுசுக் கார் சர்ரே நகரில் இயங்கிவரும் புரூக்லேண்ட்ஸ் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ராணி எலிசபெத் 2001 ஆம் ஆண்டில் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை உபயோகித்த கார் ஒன்றே ஏலத்தில் விடப்பட்டது.

அந்த காரை 40,500 பவுன்ஸ்கள் கொடுத்து ஒரு பணக்கார தொழிலதிபர் வாங்கியுள்ளார். அவரது பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த காரின் எண் Y694 CDU ஆகும்.
இதுவரை 11,000 மைல்கள் மட்டுமே ஓடிய அந்த கார் 2001 Daimler Super V8 LWB வகையை சேர்ந்தது.

இந்த காரில் இருந்துகொண்டே ராணி உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு தனக்கு தேவையான தகவல்களை கேட்டுக்கொள்ளும் வசதி இருந்தது. தற்போது இந்த கார் விற்பனை செய்யப்பட்டதால் அந்த வசதியை மட்டும் அதிகாரிகள் நீக்கியுள்ளனர்.

இந்த காரை பெரும்பாலும் ராணியே ஓட்டி வந்துள்ளார். டிரைவர் யாரையும் அவர் இந்த காரில் அனுமதிக்கவில்லை.
ராணி உபயோகித்த இந்தக் காரில் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தக் காரின் சீட்டுகளுக்கு நடுவில் ராணியின் கைப்பையை வைப்பதற்காகவே நடுவில் இருந்த கைப்பகுதியில் சிறப்பு அமைப்பு ஒன்றும் இருந்தது.

ராணி அரண்மனையை நெருங்கும்போது, அவரது வருகையை அறிவிக்கும்விதமாக பின்புற பார்வைக் கண்ணாடி அருகில் நீல நிற நியான் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

நான்கு லிட்டர் என்ஜினுடன் கூடிய இந்தக் கார் நல்ல நிலையில் பூர்வீக ரெஜிஸ்ட்ரேஷன் நம்பருடனும், அசலான பத்திரங்களுடனும், ராணி அந்தக் காரை ஓட்டிச் செல்வது போன்ற புகைப்படத்துடனும் நன்கு பராமரிக்கப்பட்ட நிலையில் விற்கப்பட்டுள்ளது
(காணொளி இணைப்பு)  

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

:அழகிப் போட்டிஉயரம் குறைவானவர்களுக்கான ! :


உயரம் குறைவானவர்களுக்கான அழகிப் போட்டி : சென்னை நடைபெறுகிறது
சென்னை, ஆகஸ்ட் 31 (டி.என்.எஸ்) நாகரிக உலகில் புதுமையாகவும் புரட்சிகரமாகவும் ஒரு போட்டியை நடத்தும் நோக்கத்தில், ஒளியும் ஒலியும் பொழுது போக்கு நிறுவனம் சென்னையில் 'என்.ஏ.சி இளம் இளவரசி' என்ற போட்டியை நடத்த உள்ளது.
இந்த போட்டியின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த போட்டியில் உயரம் குறைவானவர்களே கலந்து கொள்ள முடியும். இந்த போட்டியில் பங்கு கொள்ள பெண்களின் உயரம்  5.7 அடிக்கும் குறைவாக இருக்க வேண்டும். அழகி போட்டியில் வெல்ல உயரம் ஒரு தடையல்ல.
தகுதி சுற்று போட்டிகள் மூலம் 12 இறுதி போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் முதல் சுற்று போட்டியில் நடுவர்களாக பேஷன் டிசைனர் சிட்னி ஷெல்டன், மாடல் அழகி ப்ரதாயினி சர்வோத்தம் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
பெண்களின் பல்வேறு திறன்களை வெளிபடுத்த வாய்பளிக்கும் விதமாக இப்போட்டி அமையும், இறுதி போட்டியாளர்கள் அழகு, உடல் திறன் யோகா, தற்காப்பு, நடிப்பு மற்றும் ஆளுமை திறன் போன்ற பல திறமை கலை அடிப்படையாக கொண்டு இறுதி போட்டிகளுக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்கள் பெண்களை இறுதி போட்டிக்கு தயார் படுத்துவார்கள்
இறுதி போட்டியில் பிரபலங்கள் திரைப்பட கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். ஸ்டார் விஜய் டிவி யில் ஒளிபரப்பப்படும். போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 'என்.ஏ.சி  அழகி' என்ற பட்டம் வழங்கப்படும்