siruppiddy

வியாழன், 18 டிசம்பர், 2014

இது ரஜினியைத் தாக்கும் அல்லது விமர்சிக்கும் பதிவல்ல.

நானும் ரஜனி ரசிகன்தான். ரஜினியின் பின்னனிச் செயல்பாடுகள் எனக்குத் தெரியாத வரைக்கும் நான் ரஜினியை எதுவும் சொல்லப் போவதில்லை. விமர்சிக்கவும் முடியாது. நான் கேட்பதெல்லாம் உங்களை நோக்கிதான்.

ஒரு வாரத்திற்கு முன்பிருந்து அவரது பிறந்தநாளை விளம்பரப்படுத்தி இங்கிருக்கும் மீடியாக்கள் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? அவரது புகழைத் தங்கள் வியாபாரத்திற்குப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். இங்கும் அது அவர்கள் தவறில்லை.

ஏமாறும் கடைசி மனிதன் இருக்கும் வரையில் எவரேனும் ஒருவர் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். வளங்கள் சுரண்டப்படுவது நேரடியாகத்தான் நிகழ வேண்டும் என்பதில்லை. முற்காலத்தில் படையெடுப்பு என்று வந்தார்கள். இப்பொழுதெல்லாம் கூடிக்கெடுக்கும் தந்திரம்தான். அதற்கு அடிப்படை உங்களின் அறியாமை.

தமிழ்நாட்டின் உற்பத்தியையும், இங்கு பெருக்கப்பட்ட பணத்தையும், அண்டை மாநிலங்களில் இருக்கும் சபரி மலையிலும், திருப்பதியிலும் எந்தவித மறுகொள்முதலும் இல்லாது கொட்டிவிட்டு வருகின்றீர்கள். கேட்டால், அன்னாரின் அருள் கிடைக்கும் என்பீர்கள். நீ ஏன் எங்கள் நம்பிக்கையில் குறுக்கிடுகிறாய் என்றும் திரித்துக் குரல் எழுப்புவீர்கள்.

ஒரு நடிகரின் நடிப்பிற்கு கோடிக்கணக்கில் சம்பளம். எல்லாம் மக்களாகிய நம் பணம். அந்தப் பணம் எல்லாம் எங்கே போயின? தமிழ்நாட்டில் ஏதேனும் வளர்ச்சிப்பணிகளுக்காக அவை செலவழிக்கப்பட்டனவா? உயிரைக்கொடுக்கும் ரசிகர்களாகிய உங்களுக்கு ஏதேனும் உதவியாக இருந்திருக்கின்றதா? திருமணம் செய்து வைக்கிறார், சமூக சேவை செய்கிறார் என்ற சமாளிப்பிற்கெல்லாம் ஏமாந்து போகாதீர்கள்.

"வாங்குங் கவளத்தொரு சிறிது வாய் தப்பின் தூங்குங் களிறோ துயருறா..." என்ற நீதிநெறிப்பாடல் தெரியுமா உங்களுக்கு? பல கோடிகளில் இறைக்கப்படும் சில்லறைகள் உங்களைத் திருப்திப்படுத்திட போதும் என்பது ஒரு இழிநிலை. அவர் பணம் அவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்வார். அதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், எத்தனை பேர் அடுத்த வேளை உணவிற்கு வழி இல்லா விட்டாலும், கடன் பட்டாவது முதல் நாள் அதிக விலை கொடுத்து நுழைவுச் சீட்டு பெற்று அவரது திரைப்படத்தை பார்க்கின்றனர்.

செய்தி ஒன்றில் படித்தேன், வீட்டில் இருக்கும் நகையைத் திருடி ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செலவு செய்து ஒரு சிறுவன் படம் பார்த்திருக்கிறான். என் நண்பர் ஒருவர், அவர் மனைவி குழந்தைகளோடு அன்றைக்கு கோயிலுக்குப் போகலாம் என்று திட்டம் போட்டுவிட்டு, இவர் பாட்டுக்கு லிங்கா திரைப்படம் பார்க்கப் போய் விட்டார்.

உருவப்படத்திற்கு பாலாபிஷேகம், வெடிகள், வெற்றுக்கூச்சல்கள், சண்டை சச்சரவுகள், கூட்டநெரிசலில் உயிர்ப்பலி, எத்தனை எத்தனை....

இப்படி தனிமனித இழப்புகள் நிறைய உள்ளன. சரி, முதல் நாளே போய்ப் பாருங்கள். உங்கள் ஆர்வம் எனக்கொள்ளலாம். ஆனால், எதற்காக அதிகக் கட்டணம் கொடுத்துப் பார்க்க வேண்டும்? என்றைக்காவது யோசித்திருக்கின்றீர்களா? இங்கேதான் உங்கள் உழைப்பு, உங்கள் நேரம், உங்கள் பணம் உங்களுக்கே தெரியாமல் உங்களிடமிருந்து சுரண்டப்படுகின்றது.

இப்படி ஒவ்வொருத்தருடையதாகச் சுரண்டப்படுவதுதான் ஒட்டுமொத்த மாநிலத்தினுடையதும் சுரண்டப்படுகின்றது. நிற்க இது மாநிலப் பிரச்சனையாகச் சொல்லவரவில்லை. மொத்தத்தில் ஒரு இடத்தின் வளம் அநியாயமாக அறியாமையினால் சுரண்டப்படுகின்றது.

ரஜினி, அவர் சம்பாதித்த பணத்தை என்ன செய்தார் என்று ஒரு நாள் எவரேனும் வெளிப்படுத்துகையில் எல்லோரும் அவரை இகழ்வீர்கள். அப்பொழுது கூட நீங்கள் செய்த தவற்றினைச் சற்றேனும் சிந்தித்துப் பார்க்க மாட்டீர்கள்.

என்னதான் செய்வது? அதிகக் கட்டணம் கொடுத்து முதல் நாளே திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். நடிகர்களை நடிகர்களாக மட்டும் பாருங்கள். அவர்கள் உங்களைக் காக்க வந்த ஆபத்பாந்தவர்கள் இல்லை. அவர்கள் உங்களுக்கான வழிகாட்டியும் இல்லை. அவர்கள் பிழைப்பை அவர்கள் பார்க்கின்றார்கள். திரைப்படத்தில் அவர்கள் பேசும் வசனங்கள் எவரோ எழுதிக்கொடுத்ததுதான். உங்கள் ரசனையை, கைதட்டல்களை அவர்கள் காசாக்கிக் கொள்கின்றார்கள். உங்களை வழிப்படுத்தவோ பண்படுத்தவோ அந்த வசனங்களை அவர்கள் பேசுவதில்லை.

மறுபடியும் சொல்கிறேன், இது ரஜினியைத் தாக்கும் அல்லது விமர்சிக்கும் பதிவல்ல. உங்களின் மடத்தனங்களைச் சுட்டிக்காட்டும் பதிவுதான் இது. வாய்ப்பு இருக்கின்றவன் சம்பாதிக்கும் மட்டும் சம்பாதித்துக் கொள்ளட்டும் என்கிற கொள்கை உடைய நாட்டில் வாய்ப்பில்லாதவன் வாய் பார்த்துக்கொண்டே கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றானே என்ற ஆதங்கத்தில் எழுதுவது.

பெரும்பாலோரை இதனைப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக ரஜினியின் படத்தைப் பயன்படுத்த வேண்டியதாகிவிட்டது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 12 டிசம்பர், 2014

இருவருக்கு இடையே ஏற்ப்பட்ட மோதலில் பெண் மரணம்.

அச்சுவேலியின் தென்மூலைப் பகுதியில் இரு ஆண்களுக்கு இடையே ஏற்ப்பட்ட மோதலை தடுக்க சென்ற மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான பெண் சம்பவ இடத்திலயே அகால மரணம் அடைந்தார் அவரின் இறுதி ஊர்வலம்  நடை பெற்றது அவரது பூதஉடல் மேலதிக விசாரணைக்காக புதைக்கப்பட்டது. தேவராசா மனோரம்மா



ஞாயிறு, 9 நவம்பர், 2014

விலைமாதுகள் விடுதிகளை மூடுமாறு உத்தரவு!

 சாவகச்சேரி போலிஸ்க்கு மக்கள் அட! போடுவது போல் ஒருசம்பவம் அண்மையில் நடந்தது. இரவு மீசாலையில் வாடிக்கையாளருக்காக காத்திருந்த விபச்சார பெண்ணை கையும் மெய்யுமாக பிடித்த போலிஸ் அவரை கூட்டிகொடுக்கும் 'மாமா' பயல் மற்றும் விளக்கு பிடித்த விடுதி ஓணர். ஆகியோரையும் கைது செய்தனர்.
 தனக்கு ஆயிரம் மட்டுமே தந்துவிட்டு மீதி நாலாயிரத்தை இவர்கள் சுருட்டிவிடுவதாகவும் தான் ஊர்விட்டு யாழ்ப்பாணம் வந்து கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி விபச்சாரம்செய்து சம்பாதிப்பதாகவும் தெரிவித்திருந்தார் இந்த விபச்சார அழகி. இதனையடுத்து
இவரது வேலைத்தளமான விடுதிகள் அனுமதியற்றவை என அறிந்த சாவகச்சேரி நீதிமன்றம் அவற்றை மூடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விடுதியை மூடலாம் ஆனா அண்மையில் இந்த சம்பவத்துக்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் விபச்சாரம் எப்படி நடைபெறுகிறது? என்ற கட்டுரையை விளக்கம் விலாவாரியாக பிரசுரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏனய விபச்சாரிகளும் யாழ்பாணத்தில் கைது செய்யப்பட்டால் மக்கள் குறிப்பாக குடும்ப பெண்கள் இன்னும் மகிழ்வடைவர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 3 நவம்பர், 2014

தமிழரின் கடை கத்தி முனையில் கொள்ளை !

இலங்கை தமிழரின் கடை பிரிட்டனில் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது !
முகமுடி அணிந்த நபர் ஒருவர் கத்தி முனையில் இந்த திருட்டைதுனிகரமாக
நடாத்தி பின்பு கதவை உடைத்து வெளிஜெறி உள்ளார் கதவு இந்த திருத்த
வேலைக்குப்பெரும் தொகை பணம் தேவைஏன கடை உரிமை
யாளர் தெரிவித்ததாக தகவல்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 15 அக்டோபர், 2014

கடலுணவுப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கிறது!!

சிறிலங்காவின் கடலுணவுப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருக்கிறது. சிறிலங்காவினால் நடத்தப்படுகின்ற மீன்பிடித் தொழில் சர்வதேச சட்டங்களை மதித்து நடத்தப்படுவதில்லை என்று, ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்றுவரையில் இந்த நிலைமையில் சிறிலங்கா மாற்றம் செய்திருக்கவில்லை.
இந்த நிலையில் சிறிலங்காவில் இருந்து எந்தவிதமான கடலுணவுப் பொருட்களையும் ஐரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சிறிலங்காவுக்கு வருடாந்தம் 73 மில்லியன் பவுண்கள் நட்டம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளத
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 27 பிப்ரவரி, 2014

கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின்..


ஈழத்துக்கலைமன்னர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களிள் நினைவலைகள்.வாழ்ந்த காலம் முழுவதும் கலைக்காகவே தன்னை அர்ப்பணித்திருந்த கலைமகன். தனது சக கலைஞர்களை ஏற்றிப் போற்றிப் புகழ்பாடும் கலைத்தொண்டன். தன்னால் முடியக்கூடியதைக் கூட மற்றைய கலைஞர்களுக்கு வழங்கி அதிலே மகிழ்ச்சி கொண்ட அரும்பெரும் கலைஞன். எப்பொழுது பேசிக்கொண்டாலும்

ஈழத்துக்கலைகள் தொடர்பாக, நிறைவான விடயங்களைக் கூறிக்கொள்ளும் எங்கள் கலைஞன் ‘அண்ண ரைட்’ கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களே உங்களை நாம் இனி எங்கே பார்க்கப்போகிறோம். எம்மிடமிருந்து விடைபெற்ற ஒவ்வொரு கலைஞர்கள் பற்றியும் எவ்வளவு விடயங்களை வானலையில்எடுத்துக் கூறிவந்தீர்களே!

இன்று நீங்கள் ஒவ்வொரு நிகழ்ச்சியும், எங்கள் மனங்களில் நிழலாடுகின்றீர்கள். நாங்கள் இவ்வளவு விரைவாக உங்களை இழப்போம் என்று எண்ணவில்லை. நோய்வாய்ப்பட்டிருந்த போதும், கலையின்பால் தாங்கள் கொண்டிருந்த ஈடுபாடு, காதல் சற்றும் குறையவில்லையே.
ஈழத்துக்கலையுலகம் உங்கள் இழப்பை எப்படித்தாங்கிக்கொள்ளாது.
வானொலி,மேடை,திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞர் ‘அண்ண ரைட்’ கே.எஸ்.பாலச்சந்திரன் என்றதும் கம்பீரமாக மேடைக்கு வரும் அந்தக்காட்சியையே மனதில்

பதித்துவைத்துள்ளோம்.காலமெல்லாம் கலையுலகில் உங்கள் புகழ் நிலைத்திருக்கும்.கலைஞனே உன் ஒலி.ஒளிப்பதிவுகள்தான் எம்மனச்சுமையாற்றும் மருந்தாகும்.காலம்போற்றும் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் கருத்துக்கள் கேளுங்கள். அரை நூற்றாண்டு காலம் வரை இந்தக்கலையுலகில் கலைப்பணியாற்றி விடை பெற்றுள்ளார். என்றும் அவர்படைப்புகள் அவரை நினைவூட்டியவண்ணமே இருக்கும் என்பதை நினைவூட்டுகிறோம்.

திங்கள், 6 ஜனவரி, 2014

வெள்ளைத் தங்கம் “அஸ்பாரகஸ்”

அஸ்பாரகஸ் என்பது ஒரு பூண்டுத்தாவரமாகும், நீண்டகாலம் வாழும் தன்மையுடையது.
இந்த தாவரம் உயரமாகவும், தடித்த லாரிஸா தண்டுகள் கொண்டு, அதிகமான கிளைகளுடன் மென்மையான இலைக்கொத்துகளை கொண்டும் காணப்படுகிறது.

இதனுடைய பூக்கள் மணியின் வடிவத்தைக் கொண்டிருக்கும். இது பச்சை கலந்த வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடையதாக இருக்கும்.
இந்த பூக்கள் தனியாகவோ, கொத்தாக இரண்டிலிருந்து மூன்றாகவோ, கிளைகள் சேரும் இடங்களில் பூக்கும்.
இது ஒரு இருபால் தாவரமாகும். ஆண் மற்றும் பெண் பூக்கள் தனித்தனியான தாவரங்களில் பூக்கும்.

ஆனால் சில நேரங்களில் இருபாலினத்து உறுப்புக்களும் ஒரே பூவில் காணப்படும்.
இதில் காய்க்கும் பழம், மிகவும் சிறிய சிகப்பு பெர்ரியை போன்று, 6 முதல் 10மிமி விட்டமுடையதாக இருக்கும்.
இந்த தாவரம் ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா மற்றும் மேற்கத்திய ஆசியா போன்ற நாடுகளை இருப்பிடமாகக் கொண்டதாகும்.
இப்போது இது காய்கறி பயிராகவும் அதிகமான இடங்களில் பயிரிடப்படுகிறது.

பயிரிடுதல்
கடல்சார்ந்த பகுதிகளில் தான் அஸ்பாரகஸ் அதிகமாக வளரும் தன்மையுடையதாக இருக்கிறது.
ஏனெனில், அஸ்பாரகஸ் விளையும் நிலம் மிகவும் உப்பு நிறைந்ததாக இருக்கும்



சத்துக்கள்
இதில் கொழுப்புச் சத்து இல்லை, குறைந்த அளவில் கலோரி மற்றும் சோடியம் இருப்பதால் ஆரோக்கியமான உணவு என்றும் கூறலாம்.
போலிக் அமிலம், பொட்டாசியம், நார்ச்சத்து அதிகம் உள்ளது.
இதனை வெள்ளைத் தங்கம் என்றும் அழைப்பர், வெள்ளை அஸ்பாரகசை விட பச்சை அஸ்பாரகசில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

மருத்துவ குணம்
அஸ்பாரகஸில் உள்ள சத்துப்பொருள், சிறுநீர்ப்பெருக்கியாக செயல்புரிகிறது, நம்மை சோர்வுப்படுத்தும் அம்மோனியாவை நடுநிலைப்படுத்துகிறது.
சிறிய இரத்த குழல்களில் சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கிறது, இதனுடைய நார் சத்து மலமிளக்கியாகவும் செயல்புரிகிறது.
அஸ்பாரகஸ், மனச்சோர்விலிருந்து பாதுகாப்பளித்து, மன நிலையை லேசாக்கக் கூடியது.
ஏனெனில் இதில் போலேட் மற்றும் வைட்டமின் சி ஆகியவைகள் நிறைந்து காணப்படுகிறது.

இதய நோய் உருவாவதற்கு காரணமாக இருக்கும் ஹோமோசிஸ்டைனை, போலேட் மட்டுப்படுத்துகிறது என ஆராய்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலேட் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில், போலேட் குழந்தைகளின் நரம்பு சார்ந்த குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
அதிகமான பொட்டாசியம் எடுத்துக்கொள்வதனால், உடலில் உள்ள கால்சியம் இழப்பு குறைக்கப்படுகிறது என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

மனிதனுக்கு வரும் ஒரு புது வகையானநோயை?



அமெரிக்காவை சேர்ந்த ஃப்ரைய்ன் ஃபெரி என்ற டாக்டர் மனிதனுக்கு வரும் ஒரு புது வகையான புற்றுநோயை கண்டு பிடித்துள்ளார்
 சில்வர் நைட்ரோ ஆக்ஸைடு என்ற வேதி பொருள் மூலம் ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளார் 

 அந்த வேதி பொருள் ரீச்சார்ஜ்
 கார்டுகள் மீது தடைபடுகிறது நகங்கள் மூலம் சுரண்டுவதால் தோல் புற்றுநோய் ஏற்படுவதாக அவர் கண்டுபிடித்துள்ளார் 

 எனவே நகங்கள் மூலம் சுரண்டாமல் நாணயம் ,பேனா மூடி போன்றவற்றால் சுரண்டினால் பாதுகாப்பாக இருக்கலாம்