siruppiddy

திங்கள், 6 ஜனவரி, 2014

வெள்ளைத் தங்கம் “அஸ்பாரகஸ்”

அஸ்பாரகஸ் என்பது ஒரு பூண்டுத்தாவரமாகும், நீண்டகாலம் வாழும் தன்மையுடையது.
இந்த தாவரம் உயரமாகவும், தடித்த லாரிஸா தண்டுகள் கொண்டு, அதிகமான கிளைகளுடன் மென்மையான இலைக்கொத்துகளை கொண்டும் காணப்படுகிறது.

இதனுடைய பூக்கள் மணியின் வடிவத்தைக் கொண்டிருக்கும். இது பச்சை கலந்த வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடையதாக இருக்கும்.
இந்த பூக்கள் தனியாகவோ, கொத்தாக இரண்டிலிருந்து மூன்றாகவோ, கிளைகள் சேரும் இடங்களில் பூக்கும்.
இது ஒரு இருபால் தாவரமாகும். ஆண் மற்றும் பெண் பூக்கள் தனித்தனியான தாவரங்களில் பூக்கும்.

ஆனால் சில நேரங்களில் இருபாலினத்து உறுப்புக்களும் ஒரே பூவில் காணப்படும்.
இதில் காய்க்கும் பழம், மிகவும் சிறிய சிகப்பு பெர்ரியை போன்று, 6 முதல் 10மிமி விட்டமுடையதாக இருக்கும்.
இந்த தாவரம் ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா மற்றும் மேற்கத்திய ஆசியா போன்ற நாடுகளை இருப்பிடமாகக் கொண்டதாகும்.
இப்போது இது காய்கறி பயிராகவும் அதிகமான இடங்களில் பயிரிடப்படுகிறது.

பயிரிடுதல்
கடல்சார்ந்த பகுதிகளில் தான் அஸ்பாரகஸ் அதிகமாக வளரும் தன்மையுடையதாக இருக்கிறது.
ஏனெனில், அஸ்பாரகஸ் விளையும் நிலம் மிகவும் உப்பு நிறைந்ததாக இருக்கும்



சத்துக்கள்
இதில் கொழுப்புச் சத்து இல்லை, குறைந்த அளவில் கலோரி மற்றும் சோடியம் இருப்பதால் ஆரோக்கியமான உணவு என்றும் கூறலாம்.
போலிக் அமிலம், பொட்டாசியம், நார்ச்சத்து அதிகம் உள்ளது.
இதனை வெள்ளைத் தங்கம் என்றும் அழைப்பர், வெள்ளை அஸ்பாரகசை விட பச்சை அஸ்பாரகசில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

மருத்துவ குணம்
அஸ்பாரகஸில் உள்ள சத்துப்பொருள், சிறுநீர்ப்பெருக்கியாக செயல்புரிகிறது, நம்மை சோர்வுப்படுத்தும் அம்மோனியாவை நடுநிலைப்படுத்துகிறது.
சிறிய இரத்த குழல்களில் சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கிறது, இதனுடைய நார் சத்து மலமிளக்கியாகவும் செயல்புரிகிறது.
அஸ்பாரகஸ், மனச்சோர்விலிருந்து பாதுகாப்பளித்து, மன நிலையை லேசாக்கக் கூடியது.
ஏனெனில் இதில் போலேட் மற்றும் வைட்டமின் சி ஆகியவைகள் நிறைந்து காணப்படுகிறது.

இதய நோய் உருவாவதற்கு காரணமாக இருக்கும் ஹோமோசிஸ்டைனை, போலேட் மட்டுப்படுத்துகிறது என ஆராய்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலேட் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில், போலேட் குழந்தைகளின் நரம்பு சார்ந்த குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
அதிகமான பொட்டாசியம் எடுத்துக்கொள்வதனால், உடலில் உள்ள கால்சியம் இழப்பு குறைக்கப்படுகிறது என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

மனிதனுக்கு வரும் ஒரு புது வகையானநோயை?



அமெரிக்காவை சேர்ந்த ஃப்ரைய்ன் ஃபெரி என்ற டாக்டர் மனிதனுக்கு வரும் ஒரு புது வகையான புற்றுநோயை கண்டு பிடித்துள்ளார்
 சில்வர் நைட்ரோ ஆக்ஸைடு என்ற வேதி பொருள் மூலம் ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளார் 

 அந்த வேதி பொருள் ரீச்சார்ஜ்
 கார்டுகள் மீது தடைபடுகிறது நகங்கள் மூலம் சுரண்டுவதால் தோல் புற்றுநோய் ஏற்படுவதாக அவர் கண்டுபிடித்துள்ளார் 

 எனவே நகங்கள் மூலம் சுரண்டாமல் நாணயம் ,பேனா மூடி போன்றவற்றால் சுரண்டினால் பாதுகாப்பாக இருக்கலாம்