siruppiddy

வியாழன், 30 ஜூலை, 2015

காதலியின் காலில் 10 முறைக்கும் மேல் மண்டியிடும் காதலன் காணொளியில்

ஹாங்காங்கின் மோங்காக் நகர் பா யூன் தெருவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியை அனைவரையும் வியப்படைய வைத்து உள்ளது.
காதலர் ஒருவர் காதலியை தன்னை விட்டு பிரிய வேண்டாம் என கெஞ்சுகிறார் ஒரு கட்டத்தில் காதலின் காலில் விழுத்து அழுது புரளுகிறார். ஆனால் காதலி கல் நெஞ்சக்காரியாக இருப்பார் போல் காதலல்னின் வேண்டு கோளை செவி சாய்க்க வில்லை.
மேலும் காதலனை எட்டி உதைக்கிறாள். இருந்தும் காதலியிடம் காதலன் மிகவும் கெஞ்சுகிறார் ஆனால் காதலி அவரை உதாசீனபடுத்தி தலையில் மிதிப்பது, அவரை அடித்து விரட்டுவதிலுமே குறியாக உள்ளார்.
காதலன் குறைந்தது 10 முறையாவது காதலியின் காலில் விழுந்து 
இருப்பார்.அவர்கள் பேச்சு தெளிவாக இல்லை என்றாலும் பெண் சத்தமாக் பேசுகிறார் ஒரு கட்டத்தில் என்னை தொடாதே என பெண் கூறுகிறார். போ போய் சாவு என வசைமாறி பொழிகிறார்.
போ போய் அந்த கட்டிடத்தில் இருந்து குதி என்கிறார். தனது வலது காலால் காதலனை பலமுறை தாக்குகிறார். பலமுறை கன்னத்தில் அறைகிறார்.இருந்தும் சுவற்றில் அடித்த பந்தாக காதலன் காதலையை சமாதான படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
ஆனால் கடைசி வரை காதலி எந்த வித சமாதானத்திற்கும் வரவில்லை பின்னர் இருவரும் வெவ்வேறு திசைகளில் பிரிகின்றனர். இந்த வீடியோ ஹாங்காங் டெய்லி ஆப்பிள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த காணொளி, 0.50 நிமிடங்கள் ஓடுகிறது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 28 ஜூலை, 2015

பெண்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையை பாருங்கோ ???

மீரட்: சினிமாவை மிஞ்சும் அளவில், ஒரு காதலனுக்கு இரண்டு இளம்பெண்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் உத்தரபிரதேச  மாநிலத்தில் நடந்துள்ளது.
 உத்தரபிரதேச மாநிலம், மீரட் நகரில் உள்ள மாதவபுரம் என்ற இடத்தில், திடீரென இரண்டு இளம் பெண்கள் கட்டிப் புரண்டு சண்டை போட்டனர். அதை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடியது. ஒருவழியாக அவர்களை கூட்டத்தினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த சண்டையை வேடிக்கை பார்த்த ஒருவர் கூறுகையில், "சண்டைக்கு காரணம் ஒரு இளம் பெண்ணின் காதலருடன் மற்றொருவர் பேசியதுதான். தனது காதலரை அபகரிக்க முயல்வதாக அந்த பெண்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென அந்த பெண் மற்றொரு 
பெண்ணை அடித்து கீழே தள்ளி உதைக்க தொடங்கிவிட்டார். பின்னர் சுற்றி நின்ற பெண்கள் அந்த பெண்ணை சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர்" என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 26 ஜூலை, 2015

செல்போன் பேசியதால் வாலிபரின் முகம் கிழிந்தது???

சார்ஜர் போட்டு செல்போன் பேசியதால் விபரீதம்: பேட்டரிக்கு மின்சாரம் பாய்ந்து வாலிபரின் முகம் கிழிந்தது
பெங்களூரு: உலகில் புதுமையான பல கண்டுபிடிப்புகள் உலகையே கைக்குள் அடங்கிவிட்டதாக பலர் பாராட்டி வரும் அதே வேளையில் முறை தவறி பயன்படுத்தப்படும் இந்த கண்டுபிடிப்புகள் ஆபத்தாக மாறிவிடும் வாய்ப்பும் 
உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுதான் வருகின்றது. ஆனால், இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தத பலர் வரம்பு மீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் பெரும்பாலும் விபரீதத்தில் தான் முடிகின்றன..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 22 ஜூலை, 2015

ஜன்னல் வழியாக ஓடும் பேருந்தில் சிறுநீர் கழித்த பெண் (காணொளி )

ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் ஜன்னல் வழியாக சிறு நீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் ஒருவர் ஓடும் பேருந்தில் ஜன்னல் வழியாக சிறு நீர் கழிக்கும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் பிரித்தானியாவில் நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எனினும் அந்த பெண்ணை பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த செயலில் ஈடுபட்டிருந்த போது அப்பெண் மது அருந்தியிருந்தாரா என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த காட்சிக்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 9 ஜூலை, 2015

மதமும் பெற்றோரும் தடை! மாணவி தீ மூட்டி மரணம்!

காதலுக்கு பெற்றோர்களும், மதமும் தடையாக இருந்தமையால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி மரணம் அடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வு கூட பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு மாணவியான முல்லைத்தீவு செல்வபுரத்தை சேர்ந்த மாணவியே இத்தகைய விபரிதமான முடிவை மேற்க்கொண்டு மரணத்தை தழுவிக்கொண்டவராவார்.
காதலனுடைய பெற்றோர் இந்து முறையில் திருமணம் செய்ய வேண்டும் எனவும் பெண்ணினுடைய பெற்றோர் கிறிஸ்தவ முறையில் திருமணம் செய்ய வேண்டும் எனவும் இரு பகுதியினரும் தமது பிள்ளைகளுக்கு நெருக்கடிகளை கொடுத்து வந்துள்ளார்கள்.
இந்நிலையில் காதலியிடம் காதலன் தான் கிறிஸ்தவ முறையில் திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 ம் திகதி வடமராட்சி உடுத்துறையில் உள்ள காதலனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய நிலையில் காதலன் சைவப் பாடலை கேட்டுக்கொண்டு இருந்தாகவும் இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 6ம் திகதி காலையில் காதலன் காதலி தங்கியிருந்த திருநெல்வேலி பாற்பண்னை வீதயில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். இந் நிலையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து காதலி தனக்கு தானே மண்ணெண்னை ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயணளிக்காத நிலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் மரணத்தை தழுவிக்கொண்டுள்ளார்.
மரண விசாரனையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மரண விசாரனை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>