siruppiddy

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

மாடு மேய்க்கும் இலங்கைப் பெண் பல்கலையில் பட்டம் பெற்றுள்ளார்

கடந்த 2003 ஆம் ஆண்டு பௌத்தம் மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் பட்டம்   பெற்ற     இலங்கைப்பெண் ஒருவர் கால்நடை வளர்த்து அன்றாட தேவைகளை நிறைவேற்றி வருகின்றார்.
கலஹா - பெல்வூட் பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான சாலிக்க நவோதனி என்ற பெண்ணே, பட்டம் பெற்று கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் தனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து
 வருகின்றார்.
குறித்த பெண்ணின் வீடு மிகவும் பழமையானதாகவும், அடிப்படை வசதிகளற்றதாகவும் காணப்படுகிறது.
குறித்த பெண்ணுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் அவர்கள் குப்பி விளக்குகளை வைத்துக்கொண்டே கல்வி நடவடிக்கைகளில் ஈடுப்படுகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று தனது இளங்கலை சான்றிதழை வீட்டின் சுவரில் தொங்கவிட்டுள்ள குறித்த பெண், கணவனுக்கு உதவியாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டு
 வருகின்றார்.
தொழில் பெறுவதற்காக பல பரீட்சைகளை மேற்கொண்டிருந்த நிலையிலும் அவருக்கு எந்த தொழிவாய்ப்பும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை உயர் கல்வி படிப்பதற்காக தன் கணவர் செலவுகளை மேற்கொண்டிருந்தார். எனினும் அதன்மூலம் எந்தவித பிரதிபலனும் கிடைக்கவில்லை. ஆனால் கணவனுக்கு உதவ வேண்டும் என்றும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
என்னுடைய கல்வியை வைத்து கணவனுக்கு உதவி செய்ய முடியாமல் போனாலும் அவருடைய தொழிலுக்காக என்னால் உதவ முடியும் என குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய வலியை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே சுவரில் பட்டம் பெற்ற சான்றிதழை தொங்கவிட்டுள்ளதாக குறித்த பெண் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 29 நவம்பர், 2016

உலகம் வியப்பில் தமிழர் கண்டுபிடித்த கருவியால் !!!

நீரிழிவு நோயுடையவர்களுக்கு கண்வியாதி வருவதை கண்டுபிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ள தமிழர் யோகி கனகசிங்கம். இவர் இதுபோன்று பல புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டுள்ளார்.

இப்படியான கருவிகள் கண்டு பிடிப்பது அரிதிலும் அரிது ஆனாலும் இவரின் கண்டு பிடிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் பல ஆராச்சியாளர்கள் வியப்படைந்தாலும் பராட்டி வருகின்றனராம்…
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

இப்படியொரு மாற்றமா வாழைப்பழ தோலை தண்ணீருக்குள் போட்டால் ?

தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது. பில்டர் செய்யக் கூடாது. பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது. வேறு எப்படித் தான் தண்ணீரை சுத்தப்படுத்துவது என்று கேட்டால், சாதாரணமாக பைப்பில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம். அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச்சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே. யார் ஒருவர் குழாய் தண்ணீரை நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க்கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே 
சாப்பிடுங்கள்.
குழாயில் வரும் தண்ணீரை எப்படிக் குடிப்பது? தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது, தாதுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது. சாக்கடைநீர் கலந்து வருகிறது என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும். எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என டி.வி., பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள்.
ங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர் கெட்டுவிட்டதாக அந்தந்த ஊரில் உள்ள தண்ணீரைப் பாட்டில் மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து பிரச்சாரம் செய்கிறது. அப்பொழுது தானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் பாட்டில் தண்ணீரை வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் பிரச்சாரம் செய்க்கிறார்கள்.
மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள் தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும் பில்டர் செய்து மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக மக்களுக்கு நோய் வருகிறது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப் பிரச்சாரம் செய்வது போல கெட்ட விஷயத்தை பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு இருக்க வைத்து அதன் மூலமாக மருந்து மாத்திரை வியாபாரம் செய்வதற்குத் திட்டமிட்டு உள்ளார்கள்.
உண்மையிலேயே குழாய் தண்ணீர் குடித்தால் ஒன்றும் ஆகாது. இருந்தாலும் சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது, தண்ணீர் கெட்டிருக்கிறது என்று ஒரு வேளை நீங்கள் நினைத்தால் உங்களது மனத் திருப்திக்காக சில காரியங்களைச் செய்யலாம். நான் கூறுவது போல உங்கள் தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில் இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
1. மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி
மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த WATER FILTER மண் பானை ஆகும்.
நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து உங்கள் வீட்டில் WATER FILTER வாங்கி வைத்திருக்கிறீர்களே நாற்பதாயிரம் ரூபாய்க்கு மண் பானை வாங்கினால் எவ்வளவு பானை கிடைக்கும், தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது. ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான இயற்கையான ஒரு WATER FILTER ஐ யாரும் பயன்படுத்துவதில்லை. எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்துக் குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும். மண் சக்தியும் கிடைக்கும், பிராண சக்தி அதிகரிக்கும்.
2. வெள்ளை நிற பருத்தித் துணியால் வடிகட்டலாம்.
வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால் ஒரு தண்ணீரை பில்டர் செய்தால், வடி கட்டினால் அந்தத் தண்ணீரில் உள்ள அனைத்து நோயை உண்டுசெய்யும் வைரஸ் , பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற உண்மை, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனால் தான் அம்மை போன்ற நோய்கள் வரும் பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்லாமல் வெள்ளைத் துணியில் வடிகட்டிய நீரில் குளிப்பாட்டி குணப்படுத்தியிருக் கிறார்கள். எனவே தேவைப்பட்டால் இந்த முறையில் தண்ணீரைச் சுத்தப்படுத்தலாம்.
3. வாழைப்பழத் தோல் மூலம் சுத்தம் செய்யலாம்
நாம் சாப்பிடும் சாதாரண வாழை பழத் தோலை மண் பானைக்குள் இருக்கும் தண்ணீரில் இட்டு அரை மணி நேரத்திற்கு பிறகுவெளியே எடுத்து விட்டால் இந்த வாழைபழத் தோல் மண் பானையில் உள்ள நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும், கெட்ட பொருள்களையும் உறிஞ்சி 
எடுத்து விடுகிறது.
ஆனால் வாழைபழத் தோலை அதிக நேரம் தண்ணீரில் வைத்திருந்தால் அதுவே ஒரு குப்பையாக மாறி விடும். எனவே அரை மணி நேரத்திற்குள் எடுத்து விட வேண்டும். இந்தச் சுலபமான நீரை சுத்திகரிக்கும் முறையையும் பயன்படுத்தலாம்.
4. செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலம் சுத்தப்படுத்தலாம்...
செம்பு என்ற உலோக பாத்திரத்தின் மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான சக்தி கிடைக்கிறது. அதில் உள்ள கெட்டப் பொருள் அழிக்கப்படுகிறது.
எனவே செம்பு என்ற உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க பயன்படுத்தலாம். அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும். பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு
 இருப்பார்கள்.
அவர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால் அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக போவதைப் போல நாம் படங்களில் பார்த்திருப்போம். செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப்படுத்த 
முடியும்.
எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில் மண்பானை, வெள்ளை பருத்தித் துணி, வாழைப் பழத் தோல், செம்பு என்ற உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை சுத்தப் படுத்துவதற்கு பல உத்திகள் இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு கருவிகளை வாங்க வேண்டும்? வாழ்வோம் ஆரோக்கியமாக....
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 30 ஜூலை, 2016

நாம் கராம்பு சேர்த்து தேநீர் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!

சோர்வை பொக்கம், சுறுசுறுப்பாக இயங்க நம்மில் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் கருவி தான் டீயில். இன்று கிரீன் டீ, பிளாக் டீ என டீக்களில் பல வகைகள் வந்துவிட்டன. இதில், கிராம்பு கலந்த மூலிகை டீ குடிப்பதால் பெறும் அற்புத ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு காணலாம்…
தேவையான பொருட்கள்:
ஐந்து கிராம்பு
ஒரு கப் சூடான நீர்
தயாரிக்கும் முறை:
சூடான நீரில் கிராம்பை போட்டு ஐந்து நிமிடங்கள் ஐந்து நிமிடம் கொதிக்கவிடுங்கள்.பிறகு அதை வடிக்கட்டி குடியிங்கள்.
வைட்டமின்கள்:
கிராம்பு மூலிகை டீயின் மூலம் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்,
வைட்டமின் பி
வைட்டமின் சி
வைட்டமின் ஈ
வைட்டமின் ஜே
வைட்டமின் கே
நன்மைகள்:
தலைவலி போக்க
ஆண்டி- ஆக்ஸிடன்ட்
உயர் இரத்த அழுத்தம்
இரத்த ஓட்டம் சிறக்க
இதய நலன்
பற்களின் ஆரோக்கியம்
செரிமானம் சிறக்கும்
கல்லீரலுக்கு நன்மை
கணையம் ஆரோக்கியம் அடையும்குறிப்பு:
பல் வலி இருப்பவர்கள் இந்த டீயை மிதமான சூட்டில் 
குடிப்பது நல்லது!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 6 ஜூலை, 2016

சேர்த்து வைத்திருக்கும் சொத்தும்.பணமும்உயிர்'பிரிந்த பிறகு கூட வரப்போவதில்லை!!!

உடலைவிட்டு உயிர்' பிரிந்த பிறகு தான் சேர்த்து 
வைத்திருக்கும் சொத்தும்.பணமும் கூட வரப்போவதில்லை 
என்று தெரியாமலும்.'நம்மை கூட்டிச்செல்லும் எமன் 
லஞ்சம் வாங்கப்போவதில்லை என்று தெரியாமலும்
நாட்டில் சில 'பண முதலைகளும்' ஊழல் பெருச்சாலிகளும்.
அவர்களிடம் இருக்கும் அளவுக்கு அதிகமான 'பல ஆயிரம் 
கோடிகள் கருப்பு பணத்தை 'சுவிஸ் வங்கி'-( Credit Suisse ) 
அமெரிக்கன் வங்கி'-( Merrill Lynch Wealth management ) 
ஈரோ வங்கி'-( Barclays ) போன்ற வெளிநாட்டு வங்கிகளில்
பதுக்கி வைத்து வாழும் கேடு கெட்ட மனிதர்கள் வாழும் இந்த
நாட்டில் இப்படியும் ஒரு தெய்வப்பிறவி
 மனிதர்...!!
இவர் 'மருத்துவம் செய்து சம்பாதித்து கிடைக்கும் பணத்தில்.
அவர் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக. மீதம் உள்ள பணத்தை
கொண்டு 25000' பழங்குடி பிளளைகளை வைத்து பாராமறிக்கிறார்
இந்த மாமனிதநேய மருத்துவர்.!' இந்த மனிதக்கடவுளை
பாராட்டி' பிரபலப்டுத்தலாமா' மனிதநேய நன்பர்களே..!!
இவரை நாமும் வாழ்த்துகின்றோம் 
 வாழ்க வளமுடன்   
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 1 ஜூலை, 2016

இரட்டை பிரஜாவுரிமை 20 ஆயிரம் பேருக்கு !

இந்த ஆண்டு இறுதிக்குள் 20ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி 1700 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த அரசாங்கத்தினை போன்று இல்லாமல் மிகவும் நேர்மையான முறையில் இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர்கள் இயல்பாகவே தமது இலங்கை பிரஜாவுரிமையை இழந்து விடுகின்றனர்.
எனவே, இவர்கள் மீண்டும் விண்ணப்பிப்பதன் மூலம் இலங்கைக்கான பிரஜாவுரிமையினை பெற முடியுமென அவர் 
கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கையில், இடம்பெற்ற யுத்தம் காரணமாக , கல்வித் தகைமை மற்றும் தொழில்துறையில் தேர்ச்சிபெற்ற பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு வெளியேறியவர்களினது, அறிவு, அனுபவம் மற்றும் பங்களிப்பு நாட்டிற்கு அவசியமாகின்றது. எனவேதான், தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இரட்டை பிரஜாவுரிமை வழங்கலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 27 ஜூன், 2016

பீடி துண்டு பொலிஸ் உத்தியோகத்தருக்கு வழங்கிய உணவுக்குள் !

காத்தான்குடியில் ஹொட்டல் ஒன்றில் தயாரிக்கப்பட்ட றோல் சாப்பாடு ஒன்றுக்குள் பற்ற வைக்கப்பட்ட பீடித் துண்டு காணப்பட்டதால் காத்தான்குடி சுகாதார பரிசோதகர்கள் ஹொட்டலை
 மூடி சீல் வைத்துள்ளனர்.
காத்தான்குடி பிரதான வீதி ஆறாம் குறிச்சியிலுள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தயாரிக்கப்பட்ட உணவிலேயே அவ்வாறு பீடித்துண்டு காணப்பட்டுள்ளது.
குறித்த ஹொட்டலுக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சாப்பிட்ட உணவிலேயே குறித்த பற்ற வைக்கப்பட்ட பீடி 
காணப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்களிடத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.றஹ்மத்துல்லா தலைமையில் சென்ற குழுவினர் குறித்த ஹொட்டலை பரிசோதனை செய்ததுடன் இன்று ஹொட்டலை மூடி சீல் வைத்துள்ளனர்.
குறித்த ஹொட்டல் உரிமையாளரை உரிமையாளரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாகவும் காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஏ.எல்.றஹ்மத்துல்லர் 
தெரிவித்தார்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 23 ஜூன், 2016

உலக சாம்பியன் பட்டத்தை ஈழத்து சிறுவன்க ராத்தே வென்றான்!

தாயகத்தை  சேர்ந்த  திரு அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீரர், 2016 ஆண்டுக்கான கராத்தே உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் வல்வையை சேர்ந்த அகிலன் கருணாகரன் அவர்கள் அயர்லாந்தில்(டப்ளின்) 15ம் திகதி முதல் 19ம் திகதி வரை நடந்த கராத்தே உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார்.
இதில் 36 நாடுகளில் இருந்து 2254 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். kumiteக்கான போட்டியில் 66 போட்டியாளர்கள் பங்கேற்ற பிரிவில் விளையாடி முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கதக்கத்தை பெற்றுக்கொண்டதுடன் இந்த ஆண்டுக்கான உலக சாம்பியன் பட்டத்தையும் 
பெற்றுக் கொண்டார்.
2014ல் போலந்து நாட்டில் நடந்த சாம்பியன்ஷிப்பில் இவர் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
2015ல் பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் இவர் kumite விளையாட்டில் தங்கம் மற்றும் வெண்கலபதக்கங்களை பெற்றுக் கொண்டார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 20 ஜூன், 2016

தமிழ் மக்களுக்கு பெருமைசேர்த.சிறுமி செல்வி அகல்யா

6வது உலக கராத்தே அனைத்துவயதினருக்குமான சம்பியன் போட்டி அயர்லாந்து நாட்டில் 16/06/2016 தொடக்கம் 19/06/2016 நாள் வரையும் நடைபெறுகிறது . 17/06/2016 அன்று ஈழத்தமிழ் சிறுமி செல்வி அகல்யா சிவகுமார் பங்குபற்றி இரண்டாவது இடத்தை பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
அதுபற்றிய சிறு காணொளிப்பு 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

சனி, 18 ஜூன், 2016

அரிய மருத்துவ பண்புகளை கொண்ட சீத்தாப்பழம்!

பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது சீத்தாப்பழம். இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது.
பழத்தில் உள்ள சத்துக்கள்:
சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:
சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.
முகப் பருக்கள் குணமடையும்:
சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.
மேனி பளபளப்பாகும்:
விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.
சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.
சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.
மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை பொடி முக்கிய பங்காற்றுகிறது. விதையின் பொடியில் டீ தயாரிக்கப்பட்ட டீயை அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்.
எலும்பு பலமடையும்:
சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.
நினைவாற்றல் அதிகரிக்கும்:
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.
சீத்தாப்பழ ஒயின்:
நன்கு கனிந்த சீதாப்பழத்தில் இருந்து ஒயின் தயாரிக்கப்படுகிறது. இது மருத்துவ குணம் கொண்டது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

திங்கள், 13 ஜூன், 2016

கர்ப்பம் அடையாமல் இருக்க பல்வேறு காரணங்கள்

பெண்கள் கர்ப்பம் அடையாமல் இருக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் கருப்பையில் ஏற்படும் நீர் கோவை எனப்படும் நோயும் ஒரு காரணமாக உள்ளது. இந்நோய்க்கு தீர்வு காண்பது குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறியதாவது, பெண்களின் கருப்பையில் சிறிய பலநீர் கோவைகள்
உருவாகுவதை pcos(polycysticovarysyndrome) என்கிறோம். இது பெண்களின் ஈஸ்டிரோஜன், பிரஜட்டரான் ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வுகளால் ஏற்படும் பிரச்னை ஆகும். இந்நோயானது பெண்களின் மாதவிடாய் காலத்தில் சீரற்றநிலையை ஏற்படுத்துகிறது. மேலும் இது கருமுட்டை
 வெளிப்படாத சூழ்நிலையையும் ஏற்படுத்தும். முகம் மற்றும் உடலில் மாற்றங்களை
 ஏற்படுத்துகிறது. முக்கியமாக இந்நோய் ஏற்படின் கர்ப்பம் 
அடையும் நிலை மிகவும் குறைவு. பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு அதிக எடை, முகத்தில் அதிக முடி, மாதவிடாய் தடங்கல் ஏற்படும். இந்நோய் தாக்கத்தால் கருப்பையை சுற்றி பல நீர்க்கோவைகள் இருக்கும். இதனால் கருமுட்டை வளர்ச்சியடையாத சூழ்நிலை ஏற்படும். இப்பிரச்னை உள்ள 
பெண்களுக்கு,
 ஆண்களிடம் அதிகம் உள்ள ஹார்மோன்களான ஆன்ட்ரோஜன் அதிகம் சுரக்கும். எனவே தான் முகத்தில் முடி அதிகம் வளருகிறது. காரணம் என்ன? தகுந்த காரணம் துல்லியமாக தெரியா விட்டாலும் பல காரணங்களின் கூட்டு விளைவினால் தான் இது ஏற்படுகிறது என கருதப்படுகிறது. ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள், பரம்பரையில் உள்ளவர்களிடம் இந்நோய் இருத்தல், ஆன்ட்ரோஜன் என்ற ஆண் ஹார்மோன்
 அதிகம்சுரப்பது.
 அறிகுறிகள் சீரற்ற மாதவிடாய், கருமுட்டை வெளியேறாத சூழ்நிலை, முகம், மார்பு, வயிற்றில் அதிக ரோமம் வளருதல், கழுத்து, முகத்தில் கறுப்பான திட்டுகள், கழுத்தை சுற்றி கருமை நிறம் காணப்படுதல். மார்பகம் சிறுத்து இருத்தல், குரலில் கரகரப்பும், ஆண் குரலை சார்ந்தும் 
இருத்தல். தலை முடி
 மெல்லியதாக இருக்கும். முகப்பரு, எண்ணெய் பதம் உள்ள முகம், அதிக எடை, இடுப்பு வலி, கோபம், மனஅழுத்தம் தென்படும். நோயினால் ஏற்படும் பிரச்னைகள் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு ஆகிய பிரச்னைகள் ஏற்படும். கர்ப்பபை புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. தூக்கத்தில் குறட்டை, கர்ப்பம் ஏற்பட்டாலும் எளிதில் கரு பதியாத படிகருகலையும்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

சனி, 11 ஜூன், 2016

விமான நிலைத்தில், பயணிகளிடம் கொள்ளையிட்டவர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலயத்தில் பயணிகளை ஏமாற்றி கொள்ளையிட்ட இருவர் கைதுவெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை ஏமாற்றி போக்குவரத்து வசதிகளை செய்து தருவதாக கூறி குளிர் பானங்களில் போதைப பொருளை கலந்து கொடுத்து பயணிகளின் பணம் மற்றும் உடைமைகளை கொள்ளையிட்டு வந்த சந்தேக நபரையும் , சந்தேக நபரின் காதலியையும் கட்டுநாயக்க பொலிஸார்
 கைது செய்துள்ளனர்.
நீரகொழும்பு கட்டுவெல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த சிசிர குமார (28 வயது), சந்தேக நபரின் காதலியான 23 வயது யுவதியுமே கைது செய்யப்பட்டவர்களாவர்.
சந்தேக நபர்கள் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுடன் விமான நிலையத்தில் வைத்து சுமுகமான முறையில் பழகி அவர்கள் பயணிப்பதற்கு போக்குவரத்து சேவையை வழங்குவதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று இடை நடுவில் வைத்து கடையில் குளிர் பானத்தை வாங்கி அவற்றில் போதைப் பொருளை கலந்து 
கொடுத்துள்ளனர். 
பயணிகள் போதையில் மயங்கிய பின்னர் அவர்களின் பணத்தையும் உடைமைகளையும் சந்தேக நபர்கள் அபகரித்துக் கொண்டு பயணிகளை அந்த இடத்தில் விடடுச் செல்வதாக பொலிஸார்
 தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கடந்த இரண்டாம் திகதி சந்தேக நபர்கள் பயணிக்ளை ஏமாற்றி அழைத்துச் செல்ல முற்பட்டபோது பொலிஸார் அவர்களின் வாகனத்தை சோதனை 
செய்துள்ளனர். 
அதன்போது அந்த வாகனத்தில் போதைப் பொருள் கலந்துள்ளதாக கருதப்படும் பான வகை அடங்கிய போத்தலை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 5 ஜூன், 2016

தற்போது சுவாச நோயாளர்கள் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் சுவாச நோயினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றாடலில் தூசுக்களின் அளவு அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என்று பிரதி சுகாதார பணிப்பாளர் அமல் ஹர்ஸ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் பொதுமக்களின் தவறான பழக்க வழக்கங்களும் இதற்கான காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் சுற்றாடலில் காணப்படும் தூசுகளில் இருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான பல வழி வகைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது பச்சை வட்டத்தை அமைத்து எமது நிறுவனங்களுக்கோ அல்லது வீடுகளுக்கோ வரும் தூசியின் அளவைக் குறைக்கலாம் என்று தெரிவித்துள்ள அவர், அநேகமான நாடுகளில் சிறிய பாத்திரத்தில் பூக்களை
 போட்டு வைக்கும்
 நடைமுறை காணப்படுகின்றது.இவ்வாறு பூக்களை நீரில் இடுவது அழகுக்காக மட்டுமல்ல சுற்றாடலில் சேரும் தூசுக்களை குறைப்பதும் இதன் நோக்கமென்று பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.அத்துடன் தமது சுற்றாடலை தூசுக்களில் இருந்து பாதுகாத்தால் தமது வாழ்நாளை அதிகரிக்கலாம் என்றும் அவர் 
குறிப்பிட்டுள்ளார். -
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 31 மே, 2016

தங்கத்தை இடுப்புக்கு கீழ் ஏன் அணியக்கூடாது..?

தங்கமும் மகாலட்சுமியின் அம்சம். ஒரு அழகான பெண்ணை பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்குன்னு சொல்வார்கள். அல்லது கல்யாணம் ஆகி ஒரு பொண்வீட்டுக்கு வந்தால், அந்த மகாலக்ஷ்மியே வருகின்றாள் என சொல்வார்கள்.
ஏனென்றால், ஒரு பெண் ஒவ்வொரு வயதிலேயும் ஒவ்வொரு பருவத்தை எட்டுகிறாள். அந்த ஓவ்வொரு பருவத்திலும் மகாலட்சுமி ஒவ்வொரு இடத்தில் வாசம் செய்வாள்.
கன்னியாக இருக்கும் போது காதுக்கு கீழ்பக்கம், கழுத்து பகுதியிலும், திருமணம் ஆன பிறகு அவள் வைக்கும் நெற்றி பொட்டில், நேர் வகிட்டில் வாசம் செய்வாளாம் மகாலட்சுமி.
அதனால் தான் பெண்கள் தலை சீவாமல் இருக்க கூடாது. திருமணம் ஆனதும் நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும் என பெரியவர்கள்
 சொல்வார்கள்.
நல்ல மனமும், உதவி செய்யும் குணமும் கொண்ட எல்லா பெண்களும் எப்போதும் மகாலட்சுமியின் அம்சம் தான்.
அதேபோல் தங்கமும் மகாலட்சுமியின் அம்சம்தான். அதனால் தான் தங்கத்தை இடுப்புக்கு கீழ் அணியக்கூடாது என்பார்கள். அதேபோல் தங்க கொலுசு போடுவதும் தவறாகும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

சனி, 28 மே, 2016

கவனக்குறைவாக செயல்பட்ட விமான ஓட்டிகளின் உரிமம் ரத்து!

கடந்த பிப்ரவரி 27, 2016 அன்று ஜெய்ப்பூரில் தரை இறங்க வேண்டிய இண்டிகோ 6E - 237 என்கிற விமானத்தின் விமான ஓட்டிகள், தாங்கள் தரை இறங்க வேண்டிய ரன் வே என்று நினைத்து ஜெய்ப்பூரின் ஒரு முக்கிய சாலையில் தரை இறங்க முயற்சித்திருக்கிறார்கள்.
விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த க்ரவுண்ட் ப்ராக்சிமிட்டி சென்சார் (Ground Proximity Censor) ஆபத்தான உயரத்தில் (போதுமான உயரத்தில் பறக்காதது) பறக்காததற்கு எச்சரிக்கை கொடுத்த பிறகு தான் விமானிகள் தங்கள் தவறை உணர்ந்து சரியான பாதையில் 
சென்றிருக்கிறார்களாம்.
இப்படி கவனக்குறைவாக செயல்பட்டு, விமான பயணிகளின் உயிரை ஆபத்திற்குள்ளாக்கிய காரணத்திற்காக, அந்த விமானிகள் இருவருக்கும் பறப்பதற்கான உரிமத்தை டிஜிசிஏ (Directorate General of Civil Aviation) ரத்து செய்திருக்கிறது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 27 மே, 2016

நடேஸ்வர கல்லூரி எதிர் வரும் ஜூன்மாதம் மீண்டும் சொந்த இடத்தில்

 
காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி, நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் என்பன வரும் ஜூன் 2 ஆம் திகதி தொடக்கம் சொந்த இடத்தில் இயங்கும் என அதிபர் பொ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சுமார் 26 வருடங்களாக இயங்காது இருந்த இந்த இரு பாடசாலைகளும் தெல்லிப்பழையில் தற்காலிகமாக இயங்கி வந்தன.
இந்நிலையில் கடந்த மார்ச் 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து இரு பாடசாலைகளையும் விடுவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து சிரமதானப் பணிகள் இடம்பெற்று இரு பாடசாலைகளையும் சொந்த இடத்தில் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



புதன், 25 மே, 2016

பொலிஸார் மறைத்து வைக்கப்பட்டிருந்த உர மானிய மூட்டைகள் கண்டுபிடிப்பு!

மானியமாக வழங்கப்பட இருந்த 150 உர மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஹொரவபொத்தானை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸார் நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த உர மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹொரொவப்பொத்தான பகுதியில் ஒரு களஞ்சியசாலையில் இந்த உர மூட்டைகளை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்பாக விவசாய அதிகாரி ஒருவருடன் மேலும் நான்கு பேரை தாம் கைது செய்துள்ளதாக ஹொரவப்பொத்தானை பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

முல்லை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான போக்குவரத்தில் பாதிப்பு

முல்லைத்தீவில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்காக பொதுமக்கள் மேற்கொண்ட பயணத்தில் பல அசௌகரியங்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாப்புலவு வீதி புனரமைப்பு செய்யாத காரணத்தினால் இந்த பாதை குன்றும் குழியுமாக இருந்து பொதுமக்கள் பாரிய கஸ்டங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 24 மே, 2016

நாட்டில் பேரிடரால் 29,000 கோடி ரூபா சொத்துக்கள் அழிவு!!!


 இலங்கையில்  பேரிடரால் 29,000 கோடி ரூபா சொத்துக்கள் அழிவு
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் 150 தொடக்கம் 200 கோடி டொலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் 21 ஆயிரத்து 750 தொடக்கம் 29 ஆயிரம் கோடி ரூபா) மதிப்பிலான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன என 'ரொய்ட்டர்' செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இந்த அழிவில் சிக்கி இதுவரை 92 பேர் இறந்தமை உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனக் கருதப்படுகின்றுது.
மேலும் இதுவரை மூன்றரை இலட்சம் பேர் வரை
 இடம்பெயர்ந்துள்ளனர்.
2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரிடரால் ஏற்பட்ட சொத்தழிவுக்குப் பின்னர் ஏற்பட்ட பேரழிவாக அண்மையில் நடந்த பேரிடர் கருதப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>




இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>

ஞாயிறு, 22 மே, 2016

இளம் யுவதி பொகவந்தலாவையில் தற்கொலை!

பொகவந்தலாவ - ஆரியபுற பகுதியில் 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
இந்த சம்பவம் நேற்று (21) சனிகிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 
குறித்த மாணவி கடந்த மாதம் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் கடத்தி செல்ல முயற்சிக்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்தநிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கும் குறித்த முச்சக்கர வண்டி சாரதிக்கும் காதல் உறவு இருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து 
தெரியவந்துள்ளது. 
சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர். 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

புதன், 11 மே, 2016

நேற்று மாலை மின்னல் தாக்கி இரு பிள்ளைகளின் தாய் பலி

பதுளை மடுல்சீமை கல்வுல்ல மெட்டிக்காத்தன்னை பகுதியில் பெண் ஒருவர் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 49 வயதான இரு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
கணவனும் மனைவியும் வீட்டிலிருந்த போதே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மனைவி இறந்துள்ளதாகவும் கணவனுக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் 
குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் செயற்படுமாறு காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

திங்கள், 9 மே, 2016

சிவனாலய வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு காணொளி

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள்



ஞாயிறு, 8 மே, 2016

. போதுமான அளவு தாதிமார்கள் lபற்றாக்குறை வைத்தியசாலையில்

நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் பாரியளவில் தாதிமார்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கம்
 கூறுகின்றது.
வைத்தியசாலைகளுக்குள் 30,000 இற்கும் அதிகமான தாதிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அந்த சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
வைத்தியசாலைகளில் புதிய கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்ட போதிலும், அவற்றில் பணியாற்றுவதற்கு போதுமான அளவு தாதிமார் இல்லை என்பது வருத்தமளிப்பதாக காமினி குமாரசிங்க
 கூறினார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 7 மே, 2016

விரைவில் சவுதியில் நிர்க்கதிக்கு ஆளாகியுள்ள தமிழர்கள் இலங்கைக்கு!

சவூதி அரேபியாவில், முகாம்களில் இருக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவிற்கு சென்று பல்வேற காரணங்களால் நிர்க்கதிக்குள்ளாகிய நிலையில் நாட்டுக்கு வர முடியாமல், அந்த நாட்டு நலன்புரி முகாம்களில் நீண்டகாலமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள், மீண்டும் நாடு திரும்புவதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு ஒன்றை ஏற்படுத்துவதற்கு சவூதி அரசாங்கம் இணக்கம் 
தெரிவித்துள்ளது.
வெளிவிவகார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா அண்மையில் சவூதி அரேபியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, அந்த நாட்டு தொழில் மற்றும் உள்துறை பிரதியமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக சவூதி அரேபியா இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
இதுதவிர சவூதி அரேபியாவில் பணி புரியும் இலங்கையர்கள் குறித்த தகவல்களை இலங்கையுடன் அவ்வப்போது பரிமாறிக்கொள்ளவும், இலங்கையர்களின் நலன்புரி விடயங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது குறித்தும் அந்த நாட்டு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அத்துடன் அந்த நாட்டின் சமூக சேவைகள் அமைச்சர் மற்றும் பொது சுகாதார பிரதியமைச்சர் ஆகியோருடனும் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
சவூதியில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள, மருத்துவ உதவி தேவைப்படும் இலங்கை தொழிலாளர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குதல் மற்றும் சவூதியில் இறந்து போகும் இலங்கையர்களின் உடல்களை இலங்கைக்கு விரைவாக எடுத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவது என்பன குறித்தும் இந்த பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>