siruppiddy

திங்கள், 27 ஜூன், 2016

பீடி துண்டு பொலிஸ் உத்தியோகத்தருக்கு வழங்கிய உணவுக்குள் !

காத்தான்குடியில் ஹொட்டல் ஒன்றில் தயாரிக்கப்பட்ட றோல் சாப்பாடு ஒன்றுக்குள் பற்ற வைக்கப்பட்ட பீடித் துண்டு காணப்பட்டதால் காத்தான்குடி சுகாதார பரிசோதகர்கள் ஹொட்டலை
 மூடி சீல் வைத்துள்ளனர்.
காத்தான்குடி பிரதான வீதி ஆறாம் குறிச்சியிலுள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தயாரிக்கப்பட்ட உணவிலேயே அவ்வாறு பீடித்துண்டு காணப்பட்டுள்ளது.
குறித்த ஹொட்டலுக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சாப்பிட்ட உணவிலேயே குறித்த பற்ற வைக்கப்பட்ட பீடி 
காணப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்களிடத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.றஹ்மத்துல்லா தலைமையில் சென்ற குழுவினர் குறித்த ஹொட்டலை பரிசோதனை செய்ததுடன் இன்று ஹொட்டலை மூடி சீல் வைத்துள்ளனர்.
குறித்த ஹொட்டல் உரிமையாளரை உரிமையாளரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாகவும் காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஏ.எல்.றஹ்மத்துல்லர் 
தெரிவித்தார்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக