siruppiddy

வெள்ளி, 19 ஜூன், 2015

கவிதாயினி சுபாவின் மனமே மனமே

மனமே 
மனமே 
என்னில் படர்ந்த 
காற்றே

உன்னில்
ஆசைக்கொண்டேன்
நெஞ்சத்தில்
உன்னை
வைத்தேன் 
பாலான
இதயத்தில்
தைத்தேன்
இன்று பாசம் வைத்தது 
பாவமா

பூமாலை தொடுத்து
வைத்தேன் 
தொடுவானம்
தொட்டு…..
இன்னல்கள் தாண்டி
வந்தேன்
காதலுடன்

நீ எங்கே 
ராஜாதி ராஜா
நீ என் பக்கத்தில் 
இருந்தால் என்
ஆயுலும் கூடும்

சிந்து பாடாமல் பாடுகின்றேன்
கொட்டும் கவித்துளியாக
ஏங்காமல் ஏங்கி தவிக்கின்றேன் 
கூண்டுக்குள் அடைப்பட்ட
கூண்டுக்கிளியாக
ஆக்கம் கவிதாயினி சுபா

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் உறவைத் தேடு..!

மீளாத வாழ்வுக்குள்
தீராத போராட்டம்.
வாழ்க்கை ஒரு
வெளிச்சக் கூடு
வாசலைத் தேடு.!

பெருமை பேசும்
பொல்லாமை நீக்கு
பெண்மையைச்
சீண்டும்
வஞ்சகரை விரட்டு.
கதைகளைக் குறை
விதைகளை
விருட்சமாக்கு.!

வாதைகளை வாங்காதே
போதைக்குள் போகாதே
போகப் பொருளாய்
எதையும் எண்ணாதே
அமைதிக்கு கைகொடு.

உணர்வைப் பகிர்ந்திட
ஒருவரைத் தேடு
அச்சம் தவிர்த்து
பட்சம் வை! மிச்சம்
இன்றி அன்பைச் சொரி.

உள்ளம் கைக்குள்
உலகம் உருளுது
உண்மைத் தோப்பில்
ஊஞ்சலை ஆட்டு
துஞ்ச மறுக்கும்
விழிகளுக்கு வஞ்சம்
செய்யாதே! நெஞ்சக்
கூட்டில் இன்பம்
சுரக்கும்..!. சுமைகளைத்
தாங்கும் தூய
உறவைத் தேடு..!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 2 ஜூன், 2015

கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு கிணற்றில் பாய்ந்தார் கணவர்!

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தெற்கு, தாளையடிப் பகுதியில், நேற்று இரவு கணவன், மனைவி ஆகிய இருவரும் குடும்ப தகராறில் ஈடுபட்ட போது, மனைவியின் கழுத்தை கணவன் அறுத்துக் கொலை செய்துள்ளார். 
இதனையடுத்து கணவன் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 40 வயதான சிவபாலன் மற்றும் அவரது மனைவியான 40 வயதான சுபாஷினி என தெரியவருகின்றது.
 சம்பவத்தின் போது சுபாஷினியின் தாயாரும் உடனிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் 
மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>