siruppiddy

வெள்ளி, 15 மே, 2015

அதிசய மீன் மழைபெய்தது யாழில் !

யாழ். நல்லூர் பகுதியில்  பெய்த மழையுடன் மீன்கள் பல விழுந்துள்ளன.
கடந்த சில நாள்களாக குடாநாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
இதேபோன்று  வீரமாகாளி அம்மன் ஆலயப் பகுதி – பருத்தித்துறை வீதியில் பெய்த மழையுடன் பல கெளிறு மீன்களும் விழுந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
மழையுடன் விழுந்த மீன்களை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வாளிகளில் எடுத்துச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
கடந்த பருவமழை காலத்தின் போதும் வீரமாகாளி அம்மன் கோயில் பகுதியில் பெய்த மழையுடன் மீன்கள் விழுந்தமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக