siruppiddy

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

மீண்டும் விரைவில் ஆரம்பமாகும் காங்கேசன்துறை சிமேந்து தொழிற்சாலை

 
யாழ்.காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு யாழ். மாவட்ட அரச அதிபர் வேதநாயகம் தலைமையில், இன்று இடம்பெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது எனவும், இது தொடர்பில் இன்னும் சில கலந்துரையாடல்களை மேற்கொண்டு வெகு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எனவும் அமைச்சர்
தெரிவித்தார்.
யாழ். கச்சேரியில் இந்த உயர்மட்ட மாநாடு நடந்து முடிந்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர், "மாநாட்டில் பங்கேற்ற மக்கள் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், சூழலியலாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர்களின் கருத்துக்களை உள்வாங்கி அதனடிப்படையில் இந்தத் தொழிற்சாலைமீள ஆரம்பிக்கப்படும்" - என்றார். சீமெந்து தொழிற்சாலை ஆரம்பிக்கப்பாட்டாலும் இந்தப் பிரதேசத்தில் சுண்ணாம்புக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படமாட்டது.
அத்துடன் வேலைவாய்ப்பு வழங்கும்போது காங்கேசன்துறை மக்களுக்கும், அதன் பின்னர் யாழ்ப்பாண மக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்தத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், மத்திய சுற்றாடல் அதிகார சபை, மாகாண சுற்றாடல் அதிகார சபை ஆகியவற்றின் முழுமையான அறிக்கைகளும், சூழல்தாக்க அறிக்கை, சமூகத்தாக்க அறிக்கை ஆகியவையும் பெறப்படும் என்றும்  அமைச்சர்   கூறினார்.
அத்துடன் வடக்கு மாகாண சபையின் ஆலோசனைகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களும் பெறப்பட்ட பின்னரே அமைச்சரவைக்கு இது தொடர்பில் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதன் மூலம், பல்லாயிரக்கணக்கானோர்க்கு தொழில் வழங்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சி.சிறிதரன், த.சித்தார்த்தன், அங்கஜன்
இராமநாதன், வடக்கு 
மாகாண சபை அமைச்சர்காளான த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன், சீமெந்து கூட்டுத்தாபனத் தலைவர் ஹுசைன் பைலா ஆகியோரும் பங்கேற்று கருத்துத் தெரிவித்தனர். பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றபோதும், வெளிப்படையாகவும், மனந்திறந்தும் அவர்கள் கருத்துக்களைத் தெரிவித்தமை குறித்து அமைச்சர் தனது நன்றிகளையும் தெரிவித்தார். -
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக