siruppiddy

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

:அழகிப் போட்டிஉயரம் குறைவானவர்களுக்கான ! :


உயரம் குறைவானவர்களுக்கான அழகிப் போட்டி : சென்னை நடைபெறுகிறது
சென்னை, ஆகஸ்ட் 31 (டி.என்.எஸ்) நாகரிக உலகில் புதுமையாகவும் புரட்சிகரமாகவும் ஒரு போட்டியை நடத்தும் நோக்கத்தில், ஒளியும் ஒலியும் பொழுது போக்கு நிறுவனம் சென்னையில் 'என்.ஏ.சி இளம் இளவரசி' என்ற போட்டியை நடத்த உள்ளது.
இந்த போட்டியின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த போட்டியில் உயரம் குறைவானவர்களே கலந்து கொள்ள முடியும். இந்த போட்டியில் பங்கு கொள்ள பெண்களின் உயரம்  5.7 அடிக்கும் குறைவாக இருக்க வேண்டும். அழகி போட்டியில் வெல்ல உயரம் ஒரு தடையல்ல.
தகுதி சுற்று போட்டிகள் மூலம் 12 இறுதி போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் முதல் சுற்று போட்டியில் நடுவர்களாக பேஷன் டிசைனர் சிட்னி ஷெல்டன், மாடல் அழகி ப்ரதாயினி சர்வோத்தம் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
பெண்களின் பல்வேறு திறன்களை வெளிபடுத்த வாய்பளிக்கும் விதமாக இப்போட்டி அமையும், இறுதி போட்டியாளர்கள் அழகு, உடல் திறன் யோகா, தற்காப்பு, நடிப்பு மற்றும் ஆளுமை திறன் போன்ற பல திறமை கலை அடிப்படையாக கொண்டு இறுதி போட்டிகளுக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்கள் பெண்களை இறுதி போட்டிக்கு தயார் படுத்துவார்கள்
இறுதி போட்டியில் பிரபலங்கள் திரைப்பட கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். ஸ்டார் விஜய் டிவி யில் ஒளிபரப்பப்படும். போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 'என்.ஏ.சி  அழகி' என்ற பட்டம் வழங்கப்படும்

1 கருத்துகள்: