siruppiddy

செவ்வாய், 31 மே, 2016

தங்கத்தை இடுப்புக்கு கீழ் ஏன் அணியக்கூடாது..?

தங்கமும் மகாலட்சுமியின் அம்சம். ஒரு அழகான பெண்ணை பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்குன்னு சொல்வார்கள். அல்லது கல்யாணம் ஆகி ஒரு பொண்வீட்டுக்கு வந்தால், அந்த மகாலக்ஷ்மியே வருகின்றாள் என சொல்வார்கள்.
ஏனென்றால், ஒரு பெண் ஒவ்வொரு வயதிலேயும் ஒவ்வொரு பருவத்தை எட்டுகிறாள். அந்த ஓவ்வொரு பருவத்திலும் மகாலட்சுமி ஒவ்வொரு இடத்தில் வாசம் செய்வாள்.
கன்னியாக இருக்கும் போது காதுக்கு கீழ்பக்கம், கழுத்து பகுதியிலும், திருமணம் ஆன பிறகு அவள் வைக்கும் நெற்றி பொட்டில், நேர் வகிட்டில் வாசம் செய்வாளாம் மகாலட்சுமி.
அதனால் தான் பெண்கள் தலை சீவாமல் இருக்க கூடாது. திருமணம் ஆனதும் நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும் என பெரியவர்கள்
 சொல்வார்கள்.
நல்ல மனமும், உதவி செய்யும் குணமும் கொண்ட எல்லா பெண்களும் எப்போதும் மகாலட்சுமியின் அம்சம் தான்.
அதேபோல் தங்கமும் மகாலட்சுமியின் அம்சம்தான். அதனால் தான் தங்கத்தை இடுப்புக்கு கீழ் அணியக்கூடாது என்பார்கள். அதேபோல் தங்க கொலுசு போடுவதும் தவறாகும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக