siruppiddy

ஞாயிறு, 5 ஜூன், 2016

தற்போது சுவாச நோயாளர்கள் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் சுவாச நோயினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றாடலில் தூசுக்களின் அளவு அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என்று பிரதி சுகாதார பணிப்பாளர் அமல் ஹர்ஸ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் பொதுமக்களின் தவறான பழக்க வழக்கங்களும் இதற்கான காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் சுற்றாடலில் காணப்படும் தூசுகளில் இருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான பல வழி வகைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது பச்சை வட்டத்தை அமைத்து எமது நிறுவனங்களுக்கோ அல்லது வீடுகளுக்கோ வரும் தூசியின் அளவைக் குறைக்கலாம் என்று தெரிவித்துள்ள அவர், அநேகமான நாடுகளில் சிறிய பாத்திரத்தில் பூக்களை
 போட்டு வைக்கும்
 நடைமுறை காணப்படுகின்றது.இவ்வாறு பூக்களை நீரில் இடுவது அழகுக்காக மட்டுமல்ல சுற்றாடலில் சேரும் தூசுக்களை குறைப்பதும் இதன் நோக்கமென்று பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.அத்துடன் தமது சுற்றாடலை தூசுக்களில் இருந்து பாதுகாத்தால் தமது வாழ்நாளை அதிகரிக்கலாம் என்றும் அவர் 
குறிப்பிட்டுள்ளார். -
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக