siruppiddy

சனி, 26 மார்ச், 2016

வருடாந்தம் கருக்கலைப்பால் 10 கர்ப்பிணிகள் சாவு

சட்டவிரோத கருக்கலைப்பினால் வருடாந்தம் சுமார் 10 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
வருடாந்தம் சுமார் நான்கு இலட்சம் பெண்கள் கர்ப்பவதியாகின்றனர். இவர்களில் 15ஆயிரம் பேர் சட்ட விரோத கருக்கலைப்புக்கு ஆளாகின்றனர். இவ்விதம் கருக்கலைப்பு செய்பவர்களிலேயே 10 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழக்கின்றனர்.அதிகமான தாய்மார் தற்கொலை செய்கின்றனர்.கடந்த வருடத்தில் 50 கர்ப்பிணித் தாய்மார் இவ்விதம் தற்கொலை 
செய்துள்ளனர்.
நாட்டின் சனத்தொகையில் 27வீதமான பெண்கள் குழந்தையைப் பெறக்கூடிய வயதினராவர். வருடாந்தம் ஓர் இலட்சத்து 80 ஆயிரம் பெண் குழந்தைகள் பிறக்கின்றன. வருடாந்தம் 24 ஆயிரம் வயது குறைந்த கர்ப்பிணித் தாய்மார் காணப்படுகின்றனர். வறுமை, வீட்டு வன்முறை, 
அதிகமான சோர்வு, மந்த போசனை என்பன இவ்வாறான சுகாதாரக் கேடுகளுக்கு பிரதான காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக