siruppiddy

புதன், 5 ஆகஸ்ட், 2015

சவூதி எஜமானர் இலங்கைப் பணிப்பெண்ணை ஏலத்துக்கு விற்கிறார்?

இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை 25000 சவூதி ரியாலுக்கு விற்பனை செய்வதாக அவரது எஜமானர் விளம்பரம் செய்துள்ளார். உள்நாட்டு ஏல விற்பனை இணைய தளமொன்றில் இந்த விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 
30 வயதான இலங்கைப் பணிப் பெண்ணை விற்பனை செய்ய விரும்புவதாகவும்,
 ஒப்பந்தம் முடிவுறுத்திக் கொண்டுள்ளதாகவும் எஜமானர் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணிற்கு இன்னும் ஒரு ஆண்டு 
காலம் சேவையாற்ற 
அனுமதியிருப்பதாகவும் விரும்பியவர்கள் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான அதிகளவான சம்பவங்கள் பதிவாவதாக சவூதி மனித உரிமை ஆணைக்குழு 
தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 30 ஜூலை, 2015

காதலியின் காலில் 10 முறைக்கும் மேல் மண்டியிடும் காதலன் காணொளியில்

ஹாங்காங்கின் மோங்காக் நகர் பா யூன் தெருவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியை அனைவரையும் வியப்படைய வைத்து உள்ளது.
காதலர் ஒருவர் காதலியை தன்னை விட்டு பிரிய வேண்டாம் என கெஞ்சுகிறார் ஒரு கட்டத்தில் காதலின் காலில் விழுத்து அழுது புரளுகிறார். ஆனால் காதலி கல் நெஞ்சக்காரியாக இருப்பார் போல் காதலல்னின் வேண்டு கோளை செவி சாய்க்க வில்லை.
மேலும் காதலனை எட்டி உதைக்கிறாள். இருந்தும் காதலியிடம் காதலன் மிகவும் கெஞ்சுகிறார் ஆனால் காதலி அவரை உதாசீனபடுத்தி தலையில் மிதிப்பது, அவரை அடித்து விரட்டுவதிலுமே குறியாக உள்ளார்.
காதலன் குறைந்தது 10 முறையாவது காதலியின் காலில் விழுந்து 
இருப்பார்.அவர்கள் பேச்சு தெளிவாக இல்லை என்றாலும் பெண் சத்தமாக் பேசுகிறார் ஒரு கட்டத்தில் என்னை தொடாதே என பெண் கூறுகிறார். போ போய் சாவு என வசைமாறி பொழிகிறார்.
போ போய் அந்த கட்டிடத்தில் இருந்து குதி என்கிறார். தனது வலது காலால் காதலனை பலமுறை தாக்குகிறார். பலமுறை கன்னத்தில் அறைகிறார்.இருந்தும் சுவற்றில் அடித்த பந்தாக காதலன் காதலையை சமாதான படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
ஆனால் கடைசி வரை காதலி எந்த வித சமாதானத்திற்கும் வரவில்லை பின்னர் இருவரும் வெவ்வேறு திசைகளில் பிரிகின்றனர். இந்த வீடியோ ஹாங்காங் டெய்லி ஆப்பிள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த காணொளி, 0.50 நிமிடங்கள் ஓடுகிறது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 28 ஜூலை, 2015

பெண்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையை பாருங்கோ ???

மீரட்: சினிமாவை மிஞ்சும் அளவில், ஒரு காதலனுக்கு இரண்டு இளம்பெண்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் உத்தரபிரதேச  மாநிலத்தில் நடந்துள்ளது.
 உத்தரபிரதேச மாநிலம், மீரட் நகரில் உள்ள மாதவபுரம் என்ற இடத்தில், திடீரென இரண்டு இளம் பெண்கள் கட்டிப் புரண்டு சண்டை போட்டனர். அதை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடியது. ஒருவழியாக அவர்களை கூட்டத்தினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த சண்டையை வேடிக்கை பார்த்த ஒருவர் கூறுகையில், "சண்டைக்கு காரணம் ஒரு இளம் பெண்ணின் காதலருடன் மற்றொருவர் பேசியதுதான். தனது காதலரை அபகரிக்க முயல்வதாக அந்த பெண்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென அந்த பெண் மற்றொரு 
பெண்ணை அடித்து கீழே தள்ளி உதைக்க தொடங்கிவிட்டார். பின்னர் சுற்றி நின்ற பெண்கள் அந்த பெண்ணை சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர்" என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 26 ஜூலை, 2015

செல்போன் பேசியதால் வாலிபரின் முகம் கிழிந்தது???

சார்ஜர் போட்டு செல்போன் பேசியதால் விபரீதம்: பேட்டரிக்கு மின்சாரம் பாய்ந்து வாலிபரின் முகம் கிழிந்தது
பெங்களூரு: உலகில் புதுமையான பல கண்டுபிடிப்புகள் உலகையே கைக்குள் அடங்கிவிட்டதாக பலர் பாராட்டி வரும் அதே வேளையில் முறை தவறி பயன்படுத்தப்படும் இந்த கண்டுபிடிப்புகள் ஆபத்தாக மாறிவிடும் வாய்ப்பும் 
உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுதான் வருகின்றது. ஆனால், இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தத பலர் வரம்பு மீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் பெரும்பாலும் விபரீதத்தில் தான் முடிகின்றன..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 22 ஜூலை, 2015

ஜன்னல் வழியாக ஓடும் பேருந்தில் சிறுநீர் கழித்த பெண் (காணொளி )

ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் ஜன்னல் வழியாக சிறு நீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் ஒருவர் ஓடும் பேருந்தில் ஜன்னல் வழியாக சிறு நீர் கழிக்கும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் பிரித்தானியாவில் நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எனினும் அந்த பெண்ணை பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த செயலில் ஈடுபட்டிருந்த போது அப்பெண் மது அருந்தியிருந்தாரா என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த காட்சிக்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 9 ஜூலை, 2015

மதமும் பெற்றோரும் தடை! மாணவி தீ மூட்டி மரணம்!

காதலுக்கு பெற்றோர்களும், மதமும் தடையாக இருந்தமையால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி மரணம் அடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வு கூட பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு மாணவியான முல்லைத்தீவு செல்வபுரத்தை சேர்ந்த மாணவியே இத்தகைய விபரிதமான முடிவை மேற்க்கொண்டு மரணத்தை தழுவிக்கொண்டவராவார்.
காதலனுடைய பெற்றோர் இந்து முறையில் திருமணம் செய்ய வேண்டும் எனவும் பெண்ணினுடைய பெற்றோர் கிறிஸ்தவ முறையில் திருமணம் செய்ய வேண்டும் எனவும் இரு பகுதியினரும் தமது பிள்ளைகளுக்கு நெருக்கடிகளை கொடுத்து வந்துள்ளார்கள்.
இந்நிலையில் காதலியிடம் காதலன் தான் கிறிஸ்தவ முறையில் திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 ம் திகதி வடமராட்சி உடுத்துறையில் உள்ள காதலனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய நிலையில் காதலன் சைவப் பாடலை கேட்டுக்கொண்டு இருந்தாகவும் இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 6ம் திகதி காலையில் காதலன் காதலி தங்கியிருந்த திருநெல்வேலி பாற்பண்னை வீதயில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். இந் நிலையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து காதலி தனக்கு தானே மண்ணெண்னை ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயணளிக்காத நிலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் மரணத்தை தழுவிக்கொண்டுள்ளார்.
மரண விசாரனையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மரண விசாரனை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 19 ஜூன், 2015

கவிதாயினி சுபாவின் மனமே மனமே

மனமே 
மனமே 
என்னில் படர்ந்த 
காற்றே

உன்னில்
ஆசைக்கொண்டேன்
நெஞ்சத்தில்
உன்னை
வைத்தேன் 
பாலான
இதயத்தில்
தைத்தேன்
இன்று பாசம் வைத்தது 
பாவமா

பூமாலை தொடுத்து
வைத்தேன் 
தொடுவானம்
தொட்டு…..
இன்னல்கள் தாண்டி
வந்தேன்
காதலுடன்

நீ எங்கே 
ராஜாதி ராஜா
நீ என் பக்கத்தில் 
இருந்தால் என்
ஆயுலும் கூடும்

சிந்து பாடாமல் பாடுகின்றேன்
கொட்டும் கவித்துளியாக
ஏங்காமல் ஏங்கி தவிக்கின்றேன் 
கூண்டுக்குள் அடைப்பட்ட
கூண்டுக்கிளியாக
ஆக்கம் கவிதாயினி சுபா

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் உறவைத் தேடு..!

மீளாத வாழ்வுக்குள்
தீராத போராட்டம்.
வாழ்க்கை ஒரு
வெளிச்சக் கூடு
வாசலைத் தேடு.!

பெருமை பேசும்
பொல்லாமை நீக்கு
பெண்மையைச்
சீண்டும்
வஞ்சகரை விரட்டு.
கதைகளைக் குறை
விதைகளை
விருட்சமாக்கு.!

வாதைகளை வாங்காதே
போதைக்குள் போகாதே
போகப் பொருளாய்
எதையும் எண்ணாதே
அமைதிக்கு கைகொடு.

உணர்வைப் பகிர்ந்திட
ஒருவரைத் தேடு
அச்சம் தவிர்த்து
பட்சம் வை! மிச்சம்
இன்றி அன்பைச் சொரி.

உள்ளம் கைக்குள்
உலகம் உருளுது
உண்மைத் தோப்பில்
ஊஞ்சலை ஆட்டு
துஞ்ச மறுக்கும்
விழிகளுக்கு வஞ்சம்
செய்யாதே! நெஞ்சக்
கூட்டில் இன்பம்
சுரக்கும்..!. சுமைகளைத்
தாங்கும் தூய
உறவைத் தேடு..!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 2 ஜூன், 2015

கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு கிணற்றில் பாய்ந்தார் கணவர்!

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தெற்கு, தாளையடிப் பகுதியில், நேற்று இரவு கணவன், மனைவி ஆகிய இருவரும் குடும்ப தகராறில் ஈடுபட்ட போது, மனைவியின் கழுத்தை கணவன் அறுத்துக் கொலை செய்துள்ளார். 
இதனையடுத்து கணவன் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 40 வயதான சிவபாலன் மற்றும் அவரது மனைவியான 40 வயதான சுபாஷினி என தெரியவருகின்றது.
 சம்பவத்தின் போது சுபாஷினியின் தாயாரும் உடனிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் 
மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வெள்ளி, 15 மே, 2015

அதிசய மீன் மழைபெய்தது யாழில் !

யாழ். நல்லூர் பகுதியில்  பெய்த மழையுடன் மீன்கள் பல விழுந்துள்ளன.
கடந்த சில நாள்களாக குடாநாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
இதேபோன்று  வீரமாகாளி அம்மன் ஆலயப் பகுதி – பருத்தித்துறை வீதியில் பெய்த மழையுடன் பல கெளிறு மீன்களும் விழுந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
மழையுடன் விழுந்த மீன்களை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வாளிகளில் எடுத்துச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
கடந்த பருவமழை காலத்தின் போதும் வீரமாகாளி அம்மன் கோயில் பகுதியில் பெய்த மழையுடன் மீன்கள் விழுந்தமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 12 மே, 2015

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு குடியுரிமை

 கனடாவிலிருந்து ஜப்பான் நோக்கிச் சென்ற எயார் கனடா விமானத்தில் பிறந்த குழந்தைக்கு பெற்றோர் எந்த நாட்டவராக இருப்பினும் கனேடிய குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கனடா கல்கரியிலிருந்து டோக்கியோ நோக்கி சென்ற குறித்த விமானம் பசுபிக் சமுத்திரத்திற்கு மேலாக சென்றுகொண்டிருந்த போது விமான பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் உதவியுடன் குழந்தை 
பிரசவித்தது  
இந்நிலையில் பெற்றோர் எந்நாட்டவராக இருப்பினும் குழந்தை கனேடிய விமானத்தில் பிறந்துள்ளதால் குழந்தையை கனேடிய குடியுரிமை பிரகடனப்படுத்த விண்ணப்பிக்கலாம் என கனேடிய குடியுரிமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மேலும் கனேடிய குடியுரிமையானது கனேடிய பெற்றோர், கனடாவில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் கனேடிய விமானம் போன்ற ஏதாவது ஒன்றினால் ஏற்படுத்தப்படலாம் என தெரிவித்துள்ள வழக்கறிஞர் குடியுரிமைச் சட்டங்கள் 
நாட்டிற்கு நாடு வேறுபடலாம் எனவும் கனேடிய வான்பரப்பில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரை பொருட்படுத்தாமல் கனேடிய குடியுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் பெற்றோரின் குடியுரிமை தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

உங்கள் இந்த வாரம் ராசி பலன்கள்...

அன்பார்ந்த ராசி நேயர்களே இந்த வார ராசிபலன்கள் இதோ,
மேஷம்:-
மேஷராசி அன்பர்களே சூரியன் நன்மை தரும் கிரகமாகும். ஏப்ரல்27,28,29 வேலை இல்லாதவர்களுக்கு வெகு நாட்களாக எதிர் பார்த்து இருந்த புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் காலமாகும்.
உடம்பில் தோல் மற்றும் ரத்த சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகும். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கண்களில் கவனமுடன் இருப்பது நல்லது. பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மிகுந்த பிரயாசையின் பேரில் சமாளித்துக் கொள்வீர்கள்.
குடும்பத்தில் ஏற்படும் .ஏப்ரல்30, மே1 ஆகிய திகதிகளில் உடல் நிலை பாதிப்புகள் நீங்குவதற்காக மருத்துவத்திற்காக வெளியுர் பயணங்களை மேற் கொள்வீர்கள். பேப்பர்,பேனா பென்சில் போன்ற எழுது பொருட்கள் போன்ற ஸ்டேசனரி சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள்,அச்சுத் துறையைச் சார்ந்த பொருட்கள் விற்பனையாளர்கள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,பாடலாசிரியர்கள்,தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள்,காய்கரிகள்,இலை மற்றும் சிற்றுண்டி வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.
மே2,3நெடு நாட்களாகப் பிரச்சனையில் இருந்த குடும்பச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரக் கூடிய காலமாகும்.அரசு வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம்.விபரீத எண்ணங்களை விட்டுக் காரியத்தைக் கவனிக்கவும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்து 
அன்ன தானம் செய்து வரவும்.
உங்கள் கவனத்திற்கு >>>>
   
மேலதிக இராசி பலன்களை அறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் >>>

திங்கள், 20 ஏப்ரல், 2015

ஓவியராக மாறிய 4 வயது ஆடு - காணொளி, இணைப்பு...

 அமெரிக்காவின் உலகப் புகழ் பெற்ற டச்சு ஓவியரான 'வின்சென்ட் வான் கா’ வின் பெயரில் ’வின்செண்ட் வான் கோட்’ (ஆடு) என்று செல்லமாக அழைக்கப்படும் ஓவியர், தனது அற்புதமான பெயிண்டிங்கால் அமெரிக்காவையே கலக்கி வருகிறார். 
நியூ மெக்சிகோ மாநிலத்தின் அல்புக்வெர்க் தாவரவியல் பூங்காவில் வசித்து வரும் 4 வயது ஆடான போடிக்கு, அந்த பூங்காவின் பணியாளரான கிறிஸ்டியன் ரைட் பொழுது போக்காக ஓவியம் வரைவதற்கு பயிற்சி கொடுக்கத் தொடங்கினார். ஆனால் போடியோ, படு சீரியசாக ஓவியங்கள் வரையத் தொடங்கி விட்டது. 
வாயில் தூரிகையை பிடித்துக் கொண்டு போடி துல்லியமாக ஓவியம் வரைவதை காணக் கண்கோடி வேண்டும் என்று அதிசயிக்கிறார் பூங்காவின் மேலாலர் 'லின்’. போடி படம் வரையும் அழகை ரசிப்பதற்காகவே மாலையின் பலர் பூங்காவிற்கு வருகின்றனர்.
போடி வரையும் ஓவியங்கள் அனைத்தும் நியூ மெக்சிகோவில் உள்ள பயோபார்க் சொசைட்டியில் 40 டாலருக்கு (2 ஆயிரத்து 500 ரூபாய்) விற்பனை செய்யப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 25 மார்ச், 2015

நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலப்பு இருவர் கைது...


யாழ்  ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தொடர்பில், அப் பாடசாலையின் கடமை நேர, இரு காவலாளிகளையும் சந்தேகத்தில் நேற்று (23) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான இருவரும் ஏழாலை மயிலங்காட்டு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார், பாடசாலையின் காவலாளிகள் இருவரையும் நேற்றயதிளம் (23) அவர்களது வீடுகளில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைதான இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டு வரும் பொலிஸார், இச் சம்பவம் அரசியல் உள்நோக்கத்திற்காக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

மேலும், பாடசாலையில் நஞ்சுத்திரவம் ஊற்றப்பட்டமை தொடர்பில் பிரதேச அரசியல்வாதி ஒருவருக்கு தொடர்பு உள்ளமை, பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த (19) திகதி, மேற்படி பாடசாலையின் நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலந்த நீரை பருகிய 26 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தனர்.இச் சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளை கைது செய்யுமாறு கோரிய பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள், மற்றும் நலன் விரும்பிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



செவ்வாய், 24 மார்ச், 2015

இன்று முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் ...

இலங்கையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் இன்று.24.03.2015. முதல் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒழுங்குத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார்.
இரட்டை குடியுரிமைக்காக இதுவரை சுமார் 300 பொதுமக்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களின் விண்ணப்பங்களும் புதிய விண்ணப்பங்களுடன் பரிசீலிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களின்போது வயது வந்தவர்களுக்கு 250, 000 ரூபா அறிவிடப்படும். முன்னர் இது 5 இலட்சமாக இருந்தது.
22 வயதுக்கு குறைந்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபா அறிவிடப்படவுள்ளது. இந்தநிலையில் இரட்டை குடியுரிமைக்கான தகுதிகள் தொடர்பான விபரங்கள் குடிவரவு, குடியகல்வு திணைக்கள இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இரட்டை குடியுரிமை பெற்றுள்ள சுமார் 2000 பேர் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதன்போது எவராவது குற்றமுள்ளவராக இனங்காணப்பட்டால் அவரின் இரட்டைக் குடியுரிமை ரத்துச் செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வெள்ளி, 20 மார்ச், 2015

மீட்ட ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு !!!!

சாத்தான்குளத்தில் வங்கியிலி ருந்து மீட்ட 10 பவுன் நகை திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்..
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சவேரியார்புரத்தைச் சேர்ந்த மரிய சிலுவைதுரை மனைவி சந்திரகுளோரி(48). இவர் பேய்க்குளத்தில் உள்ள வங்கியில் 10 பவுன் நகையை அடகு வைத்திருந்தார். நேற்று வங்கிக்குச் சென்ற அடகு நகையை திருப்பினார்.
நகையுடன் நேராக வீட்டிற்கு செல்லாமல் காய்கறி வாங்குவதற்காக சாத்தான்குளம் சந்தைக்கு வந்தார். அங்கு நகை வைத்திருந்த பையை மர்ம நபர் திருடிச்சென்று விட்டார். இதன் மதிப்பு ரூ.1.80 லட்சமாகும். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. எஸ்ஐ பால்துரை விசாரித்து வருகிறார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

குடிநீரில் விசம் பொதுமக்கள் வீதி மறியல் போராட்டம்!!!

 யாழ். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சு கலந்து, 26 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து பாடசாலை முன்றலில் வீதி மறிப்பு போராட்டம், ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
 பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.. 'மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? சுன்னாகம் பொலிஸாரே உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யுங்கள்' என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 12 மார்ச், 2015

புலவூரான் ரிஷி எதற்க்கானது....

இடைவெளியின்
நீட்சியில் 
பரப்ப முடிந்த
உன் மாசற்ற
புன்னகைகளை
இப்போதெல்லாம்
எங்கு தொலைத்தாய்
பெண்ணே?

பாச வெளிகளில்
சிதறிய இராட்சத
பொய்களின்
கொடூர சிரிப்பின்
அனல் காற்றில்
கூதல் தணிக்கும்!
சாட்சியங்களற்ற
முத்தங்களை_

மீள வறுகையில்
வீழும் கண்ணீர்
திவலைகளை
எந்த கவிதையில்
குறிப்பெடுப்பது சொல்!!

காதலி எனும்
ஸ்தானத்தில்
மாட்டியிருக்கும்
உன் புகைப்படத்தில்
மனைவியாக‌
புன்னகைக்கிறாய்!!

உன் விம்பத்தில்
ஒளி தரித்த‌
கவிதைகளின்
உனக்கான‌
ஆலாபனைகளிலும்
மெளனமே
பரிசளிக்கப்படுகிறது!!

இதோ கவிதைகள்
அழுவதற்க்கான‌
அரங்கத்தை
ஆரம்பித்துவிட்டன!
என் கல்லறைமேல்
வீழ்ந்து கிடக்கும்
தேமா மலர்களை
அகற்றிக்கொண்டு…

சித்தரிக்க இயலாத‌
அர்த்தமற்ற
உன் மெளனத்தை
போலவே
அந்த‌ பூக்கள்!!

எதற்க்கானது!!?
மெளனம்..
எதற்க்கானது!!?
பூக்கள்..
ஆக்கம் புலவூரான் ரிஷி


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 25 பிப்ரவரி, 2015

சுப்பர் சிங்கர் போட்டியில் யெசிக்காவுக்கு தங்கம்

எல்லோரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
தமிழருவி ஆசிரியர் நயினைவிஜயன் எசன் அறநெறிப்பாடசாலை எசன் நுண்கலைக்கல்லூரி மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் மற்றும் இந்நிகழ்வை ஊக்கப்படுத்திய முகநூல் நண்பர்களுக்கும் எஸ்.ரி.எஸ். ஸ்ருடியோ கோவில் டொட் கொம் வெற்றிமணிக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். வெல்க தமிழ் வளர்க தமிழர் கலைகள் !
ரு கிலோ தங்கம் இரண்டாவது இடத்தை கனடாவை சேர்ந்த இலங்கை தமிழரான ஜெசிக்கா பிடித்தார். அவருக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.
இவரை 
சகல வளமுடன்  பல்லாண்டு காலம்வாழ  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நிலாவரை இணையங்கள் வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 16 பிப்ரவரி, 2015

நக்கீராவின் காதல்திவசம் எனும் கவிதை

கருணை இல்லங்களில் கதறுகின்றன எம் கருவறைகள்
தாயர் தினங்கள் கொண்டாடுகிறார்கள் “கருணைக்கடல்கள்”
உன்னை உயர்ந்தவனாக்க உருக்குலைந்தார் தந்தை -அவர்
சிந்தை சிதைய முதியோரில்லத்தில் வாழ்வது தான் விந்தை
கட்டில் பிணமாய் ஆக்கினான் உயிருள்ள பெண்ணை
பெண்கள் தினமென உச்சரித்தான் ஒரு எண்ணை
தொழிலே இல்லாது போனான் உலகில் தொழிலாளி
தொழிலாளர் தினத்தைக் கொண்டுகிறான் முதலாளி

தினமின்றிப் போன தினங்களே தினங்கள்
கனங்கொண்டு வாழும் தினங்களில் மனங்கள்
காதல் எல்லாம் கருவின்றிப் போச்சு
காதலர் தினமும் கருக்கொள்ளலாச்சு
செத்தவர்க்கு செய்வார்கள் நினைவுகொள்ள திவசம்
காதலுக்கும் காதலர்கள் செய்கிறார்கள் காதல்திவசம்
காதலர் தினமாம் போதகன் செத்த14 மாசி
கல்லறையில் கதறுகிறது காதல் நீ யோசி
தினம் தினம் தினங்கள்
தினம் வந்த போகும்
இனம் இனம் இனமாய்
மனம் கொண்டு ஆடும்
சினம் சிந்திப் போக
சிறுமை நின்று ஏங்கும்
கனம் கொண்ட தினங்கள்
மனமின்றியும் வாழும்
ஆக்கம் நோர்வே நக்கீரா

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 30 ஜனவரி, 2015

அதிரடி விலைக் குறைப்பு மா.சீனி..பால்மா!!

வரவுசெலவுத் திட்டத்தில் சமர்பிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைப் பட்டியல் 
இன்று முதல் விலை குறைக்கப்படும் பொருள்களின் விபரம்
இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் மா, சீனி, பால்மா உள்ளிட்ட 13 பொருள்களின் விலைகள்
  சீனியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படும்
 400கிராம் பால்மா 61  ரூபாவால் குறைக்கப்பட்டு 325 ரூபாவுக்கு விற்பனை
 சஸ்டோஜன் பால்மாவின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்
குரக்கன் மா ஒரு கிலோவின் விலை 12 ரூபாவால் குறைக்கப்படும்
 நெத்தலி ஒரு கிலோவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படும்
 கொத்தமல்லி ஒரு கிலோவின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படும்
டின் மீனுக்கான வரி 52 வீதத்தால் குறைப்பு 
 மாசிக் கருவாடு ஒரு கிலோவின் விலை 200 ரூபாவால் குறைப்பு  
 பாணின் விலை 6 ரூபாவால் குறைப்பு மிளகாய் தூள் ஒரு கிலோவின் விலை 25 ரூபாவால் குறைப்பு
 நூற்றுக்கு 10 வீதம் பஸ் கட்டணம் குறைக்கப்படும். பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் நூற்றுக்கு 5 
 வீதத்தால் குறைக்கப்படும்
ஒரு கிலோ தேயிலைக் கொழுந்தின் நிர்ணயிக்கப்பட்ட விலை 80 ரூபா 
 விவசாயிகளின் நலன் கருதி பசும்பாலின் விலை 10 ரூபாவாக உயர்த்தப்படும்
 விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு உழவு இயந்திரம் மற்றும் உர மானியம் வழங்கப்படும்
தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும் 
 கர்ப்பிணி பெண்களுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும்  
 வங்கிகளில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 15 வீதம் வட்டி வழங்க தீர்மானம்
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 1000 ரூபா அதிகரிக்கப்படும்
 பெப்ரவரி மாதத்திலிருந்து அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் சம்பள உயர்வு
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 20 ஜனவரி, 2015

13வது திருமண நாள் வாழ்த்து சுதா ஜசோதா 19.01.15.

பதின்மூன்றாவது திருமணநாள் சுதா ஜசோதா இன்று. 19.01.2015. யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன்  தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் திருமண நாளை தனது இல்லத்தில்  சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை  அன்பு மகள் மகன் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நல்லைகந்தன் இறைஅருள் பெற்று சகல செல்வங்களும் பெற்று  சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
திருமண வாழ்த்து கவிதை
உன் பிறப்பில் தான்
கண்டுகொண்டேன்…
கவிதைக்கும்
உயிருண்டென!
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்......
இவர்களின்
 நிச்சயிக்கப்பட்டுவிட்ட
சொர்க்கத்திற்கு,
இனியதிருமணநாள் நல் நல்வாழ்த்துகள்..


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>