siruppiddy

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் மருத்துவர் சில்மிஷம்

 இங்கிலாந்தில் சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளியிடம் செக்ஸ் குறும்பில் ஈடுபட்ட மருத்துவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள பி.எம்.ஐ எட்க்பாஸ்டன் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருபவர் அங்கமுத்து அருண்கலைவாணன்.
இங்கு கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம், பெண் ஒருவர் மார்பக பரிசோதனைக்காக வந்துள்ளார்.
அப்போது டாக்டர் அருண்கலைவாணன் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடம் குறித்த பெண் புகார் கூறினார்.

உடனே அருண்கலைவாணன் மன்னிப்பு கேட்டும், இந்திய மருத்துவர்களுக்கு இப்படித்தான் மார்பக பரிசோதனை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறி சமாளிக்கப் பார்த்தது.
அதுபற்றி ஒரு நர்சிடம் அந்த பெண் நோயாளி கேட்டபோது, அது பொய் என்று தெரிய வந்தது.
இதனைதொடர்ந்து, இந்த விவகாரத்தை இங்கிலாந்து டாக்டர்கள் தீர்ப்பாயத்தில் அப்பெண் முறையிட்டார்.

தீர்ப்பாய விசாரணையில், அருண்கலைவாணன் தவறாக நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து மருத்துவ தொழிலுக்கே அவமரியாதை ஏற்படுத்தி விட்டதாக கூறி, அருண்கலைவாணன் ஒரு வருடம் மருத்துவ தொழில் செய்ய தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
எனினும் அவரது சேவையை கருத்தில் கொண்டு, பெயரை மருத்துவ பதிவேட்டில் இருந்து நீக்கவில்லை.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக