siruppiddy

திங்கள், 13 ஜூன், 2016

கர்ப்பம் அடையாமல் இருக்க பல்வேறு காரணங்கள்

பெண்கள் கர்ப்பம் அடையாமல் இருக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் கருப்பையில் ஏற்படும் நீர் கோவை எனப்படும் நோயும் ஒரு காரணமாக உள்ளது. இந்நோய்க்கு தீர்வு காண்பது குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறியதாவது, பெண்களின் கருப்பையில் சிறிய பலநீர் கோவைகள்
உருவாகுவதை pcos(polycysticovarysyndrome) என்கிறோம். இது பெண்களின் ஈஸ்டிரோஜன், பிரஜட்டரான் ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வுகளால் ஏற்படும் பிரச்னை ஆகும். இந்நோயானது பெண்களின் மாதவிடாய் காலத்தில் சீரற்றநிலையை ஏற்படுத்துகிறது. மேலும் இது கருமுட்டை
 வெளிப்படாத சூழ்நிலையையும் ஏற்படுத்தும். முகம் மற்றும் உடலில் மாற்றங்களை
 ஏற்படுத்துகிறது. முக்கியமாக இந்நோய் ஏற்படின் கர்ப்பம் 
அடையும் நிலை மிகவும் குறைவு. பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு அதிக எடை, முகத்தில் அதிக முடி, மாதவிடாய் தடங்கல் ஏற்படும். இந்நோய் தாக்கத்தால் கருப்பையை சுற்றி பல நீர்க்கோவைகள் இருக்கும். இதனால் கருமுட்டை வளர்ச்சியடையாத சூழ்நிலை ஏற்படும். இப்பிரச்னை உள்ள 
பெண்களுக்கு,
 ஆண்களிடம் அதிகம் உள்ள ஹார்மோன்களான ஆன்ட்ரோஜன் அதிகம் சுரக்கும். எனவே தான் முகத்தில் முடி அதிகம் வளருகிறது. காரணம் என்ன? தகுந்த காரணம் துல்லியமாக தெரியா விட்டாலும் பல காரணங்களின் கூட்டு விளைவினால் தான் இது ஏற்படுகிறது என கருதப்படுகிறது. ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள், பரம்பரையில் உள்ளவர்களிடம் இந்நோய் இருத்தல், ஆன்ட்ரோஜன் என்ற ஆண் ஹார்மோன்
 அதிகம்சுரப்பது.
 அறிகுறிகள் சீரற்ற மாதவிடாய், கருமுட்டை வெளியேறாத சூழ்நிலை, முகம், மார்பு, வயிற்றில் அதிக ரோமம் வளருதல், கழுத்து, முகத்தில் கறுப்பான திட்டுகள், கழுத்தை சுற்றி கருமை நிறம் காணப்படுதல். மார்பகம் சிறுத்து இருத்தல், குரலில் கரகரப்பும், ஆண் குரலை சார்ந்தும் 
இருத்தல். தலை முடி
 மெல்லியதாக இருக்கும். முகப்பரு, எண்ணெய் பதம் உள்ள முகம், அதிக எடை, இடுப்பு வலி, கோபம், மனஅழுத்தம் தென்படும். நோயினால் ஏற்படும் பிரச்னைகள் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு ஆகிய பிரச்னைகள் ஏற்படும். கர்ப்பபை புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. தூக்கத்தில் குறட்டை, கர்ப்பம் ஏற்பட்டாலும் எளிதில் கரு பதியாத படிகருகலையும்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக