siruppiddy

திங்கள், 2 மே, 2016

பதின் நான்கு நாட்களுக்கு பின்நிலநடுக்கத்தில் சிக்கியவர் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்

ஈக்வடாரில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 72 வயது முதியவர் இரண்டு வாரங்களுக்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மத்திய அமெரிக்க நாடான ஈக்வடாரில் கடந்த 16-ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அங்கு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 72 வயது முதியவர் இரண்டு வாரங்களுக்கு பின் உயிருடன் 
மீட்கப்பட்டுள்ளார்.
கால் விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அவரை, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அவரது பெயர் மானுவேல் வஸ்கிஸ் என்றும், சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதும் சிகிச்சையில் தெரியவந்துள்ளது.
மேலும் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக