siruppiddy

வியாழன், 12 டிசம்பர், 2013

முகத்தில் உள்ள முடிகளை நீக்க - பெண்களுக்கான அழகு குறிப்புகள்


பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது முகத்தில் தோன்றும் முடிகள்தான். 
சிறுசிறு முடிகள் முகத்தில் தோன்றி, முகத்தின் அழகை கெடுக்கும். இத்தகைய முடிகளை அகற்ற இக்காலத்தில் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் அதிகம்.
குறிப்பாக முடிகளை நீக்க ப்ளீசீங் முறையைப் பயன்படுத்துகின்றனர். ப்ளீச்சிங் முறையில் முடிகளை அகற்றுவது சிறந்தென்றாலும், இதனால் சருமம் உலர்ந்து வறட்சித் தன்மை ஏற்படும். வறட்சியான தோலில் பருக்கள், வெடிப்புகள் தோன்றும்.

ஆனால் இயற்கை முறையிலேயே கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி ப்ளீச்சிங் செய்யலாம். இதனால் முகத்திலுள்ள அழுக்குகள், தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, நல்ல ஆரோக்கியமான அழகையும் பெற முடியும்.

இயற்கையாக ஸ்கரப்கள் தயார் செய்வது எப்படி?
கடலை, மஞ்சள்தூள்:

இயற்கை அழகு குறிப்புகள்
கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளுடன் கடுகு எண்ணையைச் சேர்த்து பசைபோல ஆக்கி, அதை முகத்தில் பூசவேண்டும். முடிகள் இருக்கும் இடத்தில் இந்த கலவையை நன்றாக தேய்த்து நீரில் கழுவ வேண்டும். இம்முறையை தொடர்ந்து வாரம் இருமுறை செய்துவர முகத்தில் இருக்கும் அழுக்கு, முடிகள் நீங்கும். தேவையில்லாமல் முகத்தில் தோன்றும் முடிகளின் வளர்ச்சி குறைந்து நாளடைவில் அவைகள் நீங்கிவிடும்.

தேன், எலுமிச்சை:

தேனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி இருபது நிமிடங்கள் ஊறவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவ முகம் பட்டுப்போன்ற சருமத்தைப் பெற்று ஜொலிக்கும்.
முட்டை, சர்க்கரை, சோளமாவு:

முட்டையை உடைத்து ஒரு கோப்பையில் ஊற்றி, அதில் சர்க்கரை, சோளமாவை கலந்து நன்றாக கலக்கி, உருவான கலவையை எடுத்து முகத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு ஐந்து நிமிடத்திற்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ முகம் பளிச்... பளிச் ....

கடலை மாவு, தயிர், மஞ்சள்:

இம்மூன்றையும் கலந்து பசைபோல் ஆக்கிக்கொள்ளுங்கள். பிறகு அதை இதமாக முகத்தில் நன்கு தடவி இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு பசும்பால் கொண்டு முகத்தை கழுவவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாக கழுவி, வெண்மைநிற துணியால் முகத்தை இதமாக துடைக்கவும். இப்பொழுது உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்க.. நீங்களே வியந்துபோவீர்கள்..!!! இம்முறையை வாரம் இருமுறை தொடர்ந்து செய்துவர உங்கள் முகம் பால்போல் வெண்மையாக ஜொலிக்கும்.

மூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்?


நன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து முகத்திற்கு பூசலாம் மேலும் பழங்களான ஃபேஸ் பாக் போடலாம்.வாழைப்பழத்தின் தோலின் உட்பகுதியை முகம் முழுவதும் தேய்த்து காயவைத்து கழுவலாம். மேலும் எலுமிச்சை வெள்ளரிக்காய் போன்ற காயிலும் இதே முறையை பின்பற்றலாம்


முகம் பொலிவு பெற
மூக்கு மற்றும் காது
கிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து மூக்கின் தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம். ஆனால் எப்படிப்பட்ட ஷேப் உள்ள மூக்கினையும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் ஷேப்பைப் பற்றிய கவலை தேவையில்லை. மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. ரெகுலரான பேஷியல் கூட போதும். அதுவும் முடியாவிட்டால் வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்மெண்ட்டே போதும். மிக எளிதான மூக்குக்கான அழகுக் குறிப்பினை பார்ப்போம்

 நன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து முகத்திற்கு பூசலாம் மேலும் பழங்களான ஃபேஸ் பாக் போடலாம்.வாழைப்பழத்தின் தோலின் உட்பகுதியை முகம் முழுவதும் தேய்த்து காயவைத்து கழுவலாம். மேலும் எலுமிச்சை வெள்ளரிக்காய் போன்ற காயிலும் இதே முறையை பின்பற்றலாம்

 

புதன், 11 டிசம்பர், 2013

இன்றுஓர்அதிஸ்டநாள்... 11.12.13


இதே மாதிரியான ஒரு எண்கோலம் இந்நூற்றாண்டில். 11.12.13.இன்றைக்குப் பின்னர் மீண்டும் வராது. பலர் இதனால் அதிர்ஷ்டம் வந்து சேரும் என்றும் நம்புகின்றனர்

 


 

செவ்வாய், 10 டிசம்பர், 2013

இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால் நுரையீரல் …..

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.
அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?
1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை ஒழுச்சு கட்டிடும்.
3. வாயுத் தொல்லை என்பதே வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.
அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.
ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.
மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

தமிழில் வீட்டு கடிகாரம் தமிழ் தந்த புதுப்பாடம்


12தமிழில் வீட்டு கடிகாரம் இது கடிகாரத்தில்
 மட்டும் இருந்தால்
 போதுமா? நாம் இன்று இந்த நிலையில் இருப்பதர்க்கும் தமிழே காரனம் எம்மை எமது தனித்துவத்தைக் காட்டவும்

 தமிழே காரனம் அழகில் தமிழ் பேச்சும் அன்பின் நடைப்பாட்டுக்கும் எங்கள் தமிழே காரனம் கலை இலக்கிய விழுமியங்களை கட்டிக்காத்த முந்தையர் பேசிய மூத்த தமிழ் எம் தந்தையர் தாயார் நமக்கென பேசிட கற்றறிந்த எம் மொழி சுற்றத்தை சுமந்து மற்றவர்வாழ்கைக்காய் வாழும்தமிழினம் பேசிடும் மொழி தமிழ்மொழி
 ஆதி கூறும் ஔவையும் முருகனோடு அள்ளிச் சுவைத்த எம் தமிழ்
 மொழி அதன்

 ஓர் காலத்தில் எண்ணிக்கை 12 வரைதான் இருந்தது அப்போது எல்லாம் பன்னிரண்டை வைத்தே பிரிக்கப்பட்டது அதில்த்தான் ,காலன் , அங்குலம் நேரம் எல்லாம் உருவாகிற்று இதனை தமிழ் அதி அறிஞர்களே உருவாக்கினார்கள் நாளடைவில் பத்து என்பது இறுதி கணக்காக மாறியது ஆனால் நேரத்தை மட்டும் மாற்ற எவராலும் உமுடியாது எல்லாம் தமிழன் சிந்தையே நன்றி இ நேமி பகி்ந்த கொண்டமைக்கு
 

புதன், 4 டிசம்பர், 2013

சிரிப்பு வெடிகளை வீசிய இரா. குணபாலன்...


கலை வாழ்வில் இன்னொரு அத்தியாயம்..உயிர்வரை இனித்தாய் திரைப்படத்துடன்இரா. குணபாலனும் அவர்
 உலகத்தமிழரை நோக்கி தனது சிரிப்புச் சரவெடிகளை வீச வருகிறார்..இதுவரை புலம்பெயர்ந்த தமிழரிடையே சிரிப்பு வெடிகளை வீசிய கலைஞர். இரா. குணபாலன் தனது நகைச்சுவையை மேலும் மேலும் மெருகேற்றிக்கொண்டு உலகத்தமிழரை நோக்கி சிரிப்பு வெடிகளை வீச வருகிறார்.உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தில் இரா. குணபாலனின் நடிப்பு அவ்வளவு சிறப்பாக வந்துள்ளது.

உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தமிழ்நாடு ஏ.வி.எம்மில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது.. இரா. குணபாலனின் நடிப்பைப் பார்த்த தயாரிப்பாளர் பாவல் சங்கர் இவர் பாரீசில் இருந்தது போதும் ; இனிமேலாவது தமிழகம் வரவேண்டும் என்று அழைப்புவிட்டது விளையாட்டல்ல..இன்று தமிழகத்தில் ரென்ட் நகைச்சுவைதான்.. இரா. குணபாலன் கால் நூற்றாண்டுக்கு மேலாக ரசிகர்களை சிரிக்க வைக்கும் நடிப்பிற்கும், உடல் மொழிக்கும் சொந்தக்காரராக இருக்கிறார்.
இப்படியொரு அரிய கலைஞர் தமிழகம் வந்தால் அவருக்கு எத்தனை பெரிய வாய்ப்புக்கள் இருக்கிறது என்பதே பாவல் சங்கரின் கவலை.இன்று வெறுமனே மிமிக்கிரி செய்தவர்கள் எல்லாம் தாமும் நகைச்சுவை நடிகர்கள் என்கிறார்கள் ஆனால் நகைச்சுவையை டெலிவரி பண்ணமுடியாமல் திணறுகிறார்கள் என்று பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு சொன்னது தெரிந்ததே.

நடிப்பால் ரசிகனை அழ வைக்கலாம் ஆனால் சிரிக்க வைப்பதுதான் மாபெரும் கடினம் காரணம் நகைச்சுவை நடிப்பு என்பது மாபெரும் ஆற்றலின் பிறப்பிடம் என்பது கலைவாணர் என்.எஸ்.கே, கே.ஏ. தங்கவேலு போன்றவர்களின் திரையுலக வரலாறு எடுத்துரைத்துள்ளது.அந்த ஆற்றலை நோக்கி கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக கடின உழைப்பும், பயிற்சியும் செய்து திரையுலகிற்கு வந்துள்ளார் இரா. குணபாலன்.அந்தவகையில் இரா. குணபாலனின் நடிப்பாற்றலும், ரசிகர்களை மிக நுட்பமாக அவர் சிரிக்க வைக்கும் முறையும் அபாரமாக இருக்கிறது.நடிக்க வந்துவிட்டால் கிடைக்கும் வளங்களை

எல்லாம் சேகரித்து, தயாரிப்பாளரையும், இயக்குநரையும் அதிசயிக்க வைத்துவிடுவார், அப்படியொரு ஆற்றல் அவரிடம் உள்ளது.அதைப்பார்த்தால் அடடா இவரைப்போன்றவர்களுக்கு சரியான வாய்ப்புக்களை தமிழ் திரையுலகம் ஏற்படுத்தத் தவறிவிட்டதே என்ற நினைப்பு அரும்புவது இயல்பானதே என்றும் பாவல் சங்கர் தெரிவித்திருக்கிறார்.இரா. குணபாலன் நையாண்டி மேளம் தொடரில் நடித்து, மேலை நாடுகளில் உள்ள ரசிகர்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர்,அவருக்கு

எண்ணற்ற ரசிகர்கள் மேலை நாடுகள் முழுவதும் இருக்கிறார்கள்.இப்போது உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தில் தனது நகைச்சுவை நடிப்பால் ஓவியம் வரைந்துள்ளார் இரா. குணபாலன், தமிழக நடிகர்களின் முன்னாலும் தரிசனமாக இருக்கிறார்.ஆற்றல் மிக்க புலம் பெயர் நடிகர்களையும், கலைஞர்களையும் தமிழக திரையரங்குகளின் ரசிகர்களின் முன்னால் கொண்டுவரும் காத்திரமான புதிய பணியை முன்னெடுத்துள்ள தமிழ்நாடு கிரியேட்டி சிட்டி ஆர்ட்ஸ் நிறுவனம் தனது முயற்சியால் தமிழகத்தில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு தெளிவாக ஒரு செய்தியைத் தெரிவித்துள்ளது.இன்று தமிழ்

சினிமாவின் வர்த்தகம் ஏறத்தாழ தமிழகத்தில் இல்லை என்ற நிலை வந்துவிட்டது, தமிழ் சினிமாவை காப்பாற்றி நிற்பதே புலம் பெயர் தமிழர்தான், அதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் மனம் கோடம்பாக்கத்திற்கு வரவேண்டும் என்கிறது.புலம் பெயர் தமிழர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் தமிழ் திரைப்படங்கள் இனி பெருமளவில் தயாரிக்கப்பட வேண்டும், தமிழ் வர்த்தக சினிமாவின் அடுத்தகட்ட வெற்றிக்கு இது அவசியம்.

அதன் ஓரங்கமாக முற்று முழுதாக ஐரோப்பாவில் உள்ள கலைஞர்களை வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது உயிர்ரை இனித்தாய்.
இப்படம் புலம் பெயர் தமிழனின் திரைப்படம் என்ற பெயருடனும், துணிச்சலுடனும் தமிழக திரைச்சந்தைக்கு போகிறது.
திரைப்படத்தை பல்கலைக்கழக கல்வியாகக் கற்ற இளம் தமிழ் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

டென்மார்க் திரைப்பட தொழில்நுட்பத்துறை இந்த முயற்சிக்கு பேருதவியாக இருந்துள்ளது.
இந்தத் திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் வரும் இரா. குணபாலன் முற்றிலும் புதிய பரிமாணம் எடுத்துள்ளார்.

நடிக்க வந்துவிட்டால் எடுத்த கருமத்தில் கண்ணாக இருந்து, பிரதியை தெளிவாக விளங்கிக்கொண்டு, அதற்கேற்ப அதி உச்ச சிரிப்பை வரவழைக்கும் உடல்மொழியோடு உரையாடலையும் வழங்குவதில் அவருக்கு இணை அவரே.

அவரும் அவருடைய இணைபிரியாத நண்பர் தயாநிதியும் படப்பிடிப்பு இடத்திற்கு வந்துவிட்டால் படப்பிடிப்பே களைகட்டிவிடும், அதுமட்டுமல்ல இளம் நடிகர்களோடு கடுகளவும் ஈகோ இல்லாமல் பழகி இணைந்து நடிப்பதிலும் அவர்களுக்கு இணை அவர்களே.

இதுவரை புலம் பெயர் தமிழ் ரசிகர்களை குறியாக வைத்து நகைச்சுவை விருந்தளித்த இரா. குணபாலன் இந்தத் தடவை தமிழகம் உட்பட உலகம் முழுவதும் பரவியுள்ள எட்டுக்கோடி தமிழ் ரசிகர்களுக்கும் ஏற்றவாறு தனது நகைச்சுவை வெடிகளை புதுமையும், பொதுமையும்படுத்தி சரமாரியாக சுழற்றி வீசியபடி, தனது நண்பர் தயாநிதியுடன் திரைக்கு வருகிறார்.வரும் புத்தாண்டில் வெடிக்கப்போகும்

பட்டாசுகள் போல அடுத்த ஆண்டு திரையில் மத்தாப்பாக வெடித்துச் சிதறப்போகிறது.. இரா. குணபாலனின் சிரிப்புப் பட்டாசுகள் என்கிறார்கள் உயிர்வரை இனித்தாய் திரைப்படக் குழுவினர்.நம்பியிருங்கள் இரா. குணபாலன் ஜெயித்துக்காட்டுவார்.இவர் கலைவாழ்வில் இன்னும் பலதிறமையுள்ளவராக நன்று நடிப்புத்துறையில் சிறந்தோங்க
 எமது வாழ்த்துக்கள்

திங்கள், 4 நவம்பர், 2013

கடவுளிடம் ஒரு கணவன் வேண்டினான்,''


ஒரு கணவன் கடவுளிடம் வேண்டினான்,'' நாள் முழுவது நான் கடுமையாக உழைக்கிறேன்.என் மனைவி வீட்டில் ஒரு சிரமமும் இல்லாது மகிழ்ச்சியாக இருக்கிறாள்.போதாக் குறைக்கு என்னிடம் வேறு குற்றம் காண்கிறாள்.
எனவே என்னை பெண்ணாக்கி என் மனைவியை

ஆணாக்கிவிடு.அப்போதுதான் அவளுக்கு ஆண்களின் துன்பமும் சிரமமும் புரியும்.
 ''கடவுளும் அவனது வேண்டுகோளை ஏற்று மறுநாளே அவர்கள் இருவரையும் மாற்றிவிட்டார்.

மனைவி ஆணானவுடன் வேலைக்கு சென்றாள்.பெண்ணான கணவன் காலை எழுந்து வீடு வாசல் சுத்தம் செய்து,அடுப்படி வேலைகளை முடித்து பிள்ளைகளை பள்ளிக்குத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு,கடைக்கு சென்று காய்கறிகள் வாங்கி வந்து சமையல் முடித்து,இப்படியாக இரவு நெடு நேரம் வரை வேலை இருந்தது .

மறுநாள் எழுந்ததும் முதல் வேலையாகக் கடவுளிடம் ,
 ''ஐயோ கடவுளே!பெண்களுக்கு இவ்வளவு துன்பங்கள் இருப்பதை உணராது இருந்து விட்டேனே!என்னால் இந்த பொறுப்புகளை சுமக்க முடியாது.
தயவு செய்து என்னை மறுபடியும் ஆணாக்கி,என் மனைவியைப் பெண்ணாக்கிவிடு,''என்று அழுது வேண்டினான்.
கடவுள் சொன்னார்,

 ''உன் வேண்டுகோளை நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் அதற்கு நீ நாற்பது வாரங்கள் காத்திருக்க வேண்டும்''.அவன் ஒன்றும் புரியாமல் விழிக்க,
கடவுள் சொன்னார்,
 ''இப்போது நீ கருவுற்றிருக்கிறாய்.''