siruppiddy

ஞாயிறு, 22 மே, 2016

இளம் யுவதி பொகவந்தலாவையில் தற்கொலை!

பொகவந்தலாவ - ஆரியபுற பகுதியில் 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
இந்த சம்பவம் நேற்று (21) சனிகிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 
குறித்த மாணவி கடந்த மாதம் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் கடத்தி செல்ல முயற்சிக்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்தநிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கும் குறித்த முச்சக்கர வண்டி சாரதிக்கும் காதல் உறவு இருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து 
தெரியவந்துள்ளது. 
சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர். 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

புதன், 11 மே, 2016

நேற்று மாலை மின்னல் தாக்கி இரு பிள்ளைகளின் தாய் பலி

பதுளை மடுல்சீமை கல்வுல்ல மெட்டிக்காத்தன்னை பகுதியில் பெண் ஒருவர் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 49 வயதான இரு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
கணவனும் மனைவியும் வீட்டிலிருந்த போதே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மனைவி இறந்துள்ளதாகவும் கணவனுக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் 
குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் செயற்படுமாறு காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

திங்கள், 9 மே, 2016

சிவனாலய வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு காணொளி

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள்



ஞாயிறு, 8 மே, 2016

. போதுமான அளவு தாதிமார்கள் lபற்றாக்குறை வைத்தியசாலையில்

நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் பாரியளவில் தாதிமார்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கம்
 கூறுகின்றது.
வைத்தியசாலைகளுக்குள் 30,000 இற்கும் அதிகமான தாதிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அந்த சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
வைத்தியசாலைகளில் புதிய கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்ட போதிலும், அவற்றில் பணியாற்றுவதற்கு போதுமான அளவு தாதிமார் இல்லை என்பது வருத்தமளிப்பதாக காமினி குமாரசிங்க
 கூறினார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 7 மே, 2016

விரைவில் சவுதியில் நிர்க்கதிக்கு ஆளாகியுள்ள தமிழர்கள் இலங்கைக்கு!

சவூதி அரேபியாவில், முகாம்களில் இருக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவிற்கு சென்று பல்வேற காரணங்களால் நிர்க்கதிக்குள்ளாகிய நிலையில் நாட்டுக்கு வர முடியாமல், அந்த நாட்டு நலன்புரி முகாம்களில் நீண்டகாலமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள், மீண்டும் நாடு திரும்புவதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு ஒன்றை ஏற்படுத்துவதற்கு சவூதி அரசாங்கம் இணக்கம் 
தெரிவித்துள்ளது.
வெளிவிவகார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா அண்மையில் சவூதி அரேபியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, அந்த நாட்டு தொழில் மற்றும் உள்துறை பிரதியமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக சவூதி அரேபியா இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
இதுதவிர சவூதி அரேபியாவில் பணி புரியும் இலங்கையர்கள் குறித்த தகவல்களை இலங்கையுடன் அவ்வப்போது பரிமாறிக்கொள்ளவும், இலங்கையர்களின் நலன்புரி விடயங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது குறித்தும் அந்த நாட்டு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அத்துடன் அந்த நாட்டின் சமூக சேவைகள் அமைச்சர் மற்றும் பொது சுகாதார பிரதியமைச்சர் ஆகியோருடனும் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
சவூதியில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள, மருத்துவ உதவி தேவைப்படும் இலங்கை தொழிலாளர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குதல் மற்றும் சவூதியில் இறந்து போகும் இலங்கையர்களின் உடல்களை இலங்கைக்கு விரைவாக எடுத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவது என்பன குறித்தும் இந்த பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 6 மே, 2016

சிவன் தேர்த் திருவிழாவில் மி்ன்சாரம் தாக்கி ஒருவர் பலிà?

யாழ் சுன்னாகம் சிவன் தேர்த் திருவிழாவில் மி்ன்சாரம் தாக்கி ஒருவர் பலி
சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி  ஒருவர், வியாழக்கிழமை (05) உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
தண்ணீர்ப்பந்தலில் ஏற்பட்ட மின் கசிவால் 7 பேர் மின்சார தாக்கத்துக்கு உள்ளாகினர். இதில் எஸ்.சொர்ணகுமார் (வயது 42) என்ற 1 பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 2 மே, 2016

பதின் நான்கு நாட்களுக்கு பின்நிலநடுக்கத்தில் சிக்கியவர் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்

ஈக்வடாரில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 72 வயது முதியவர் இரண்டு வாரங்களுக்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மத்திய அமெரிக்க நாடான ஈக்வடாரில் கடந்த 16-ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அங்கு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 72 வயது முதியவர் இரண்டு வாரங்களுக்கு பின் உயிருடன் 
மீட்கப்பட்டுள்ளார்.
கால் விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அவரை, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அவரது பெயர் மானுவேல் வஸ்கிஸ் என்றும், சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதும் சிகிச்சையில் தெரியவந்துள்ளது.
மேலும் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>