siruppiddy

வெள்ளி, 19 ஜூன், 2015

கவிதாயினி சுபாவின் மனமே மனமே

மனமே 
மனமே 
என்னில் படர்ந்த 
காற்றே

உன்னில்
ஆசைக்கொண்டேன்
நெஞ்சத்தில்
உன்னை
வைத்தேன் 
பாலான
இதயத்தில்
தைத்தேன்
இன்று பாசம் வைத்தது 
பாவமா

பூமாலை தொடுத்து
வைத்தேன் 
தொடுவானம்
தொட்டு…..
இன்னல்கள் தாண்டி
வந்தேன்
காதலுடன்

நீ எங்கே 
ராஜாதி ராஜா
நீ என் பக்கத்தில் 
இருந்தால் என்
ஆயுலும் கூடும்

சிந்து பாடாமல் பாடுகின்றேன்
கொட்டும் கவித்துளியாக
ஏங்காமல் ஏங்கி தவிக்கின்றேன் 
கூண்டுக்குள் அடைப்பட்ட
கூண்டுக்கிளியாக
ஆக்கம் கவிதாயினி சுபா

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் உறவைத் தேடு..!

மீளாத வாழ்வுக்குள்
தீராத போராட்டம்.
வாழ்க்கை ஒரு
வெளிச்சக் கூடு
வாசலைத் தேடு.!

பெருமை பேசும்
பொல்லாமை நீக்கு
பெண்மையைச்
சீண்டும்
வஞ்சகரை விரட்டு.
கதைகளைக் குறை
விதைகளை
விருட்சமாக்கு.!

வாதைகளை வாங்காதே
போதைக்குள் போகாதே
போகப் பொருளாய்
எதையும் எண்ணாதே
அமைதிக்கு கைகொடு.

உணர்வைப் பகிர்ந்திட
ஒருவரைத் தேடு
அச்சம் தவிர்த்து
பட்சம் வை! மிச்சம்
இன்றி அன்பைச் சொரி.

உள்ளம் கைக்குள்
உலகம் உருளுது
உண்மைத் தோப்பில்
ஊஞ்சலை ஆட்டு
துஞ்ச மறுக்கும்
விழிகளுக்கு வஞ்சம்
செய்யாதே! நெஞ்சக்
கூட்டில் இன்பம்
சுரக்கும்..!. சுமைகளைத்
தாங்கும் தூய
உறவைத் தேடு..!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 2 ஜூன், 2015

கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு கிணற்றில் பாய்ந்தார் கணவர்!

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தெற்கு, தாளையடிப் பகுதியில், நேற்று இரவு கணவன், மனைவி ஆகிய இருவரும் குடும்ப தகராறில் ஈடுபட்ட போது, மனைவியின் கழுத்தை கணவன் அறுத்துக் கொலை செய்துள்ளார். 
இதனையடுத்து கணவன் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 40 வயதான சிவபாலன் மற்றும் அவரது மனைவியான 40 வயதான சுபாஷினி என தெரியவருகின்றது.
 சம்பவத்தின் போது சுபாஷினியின் தாயாரும் உடனிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் 
மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வெள்ளி, 15 மே, 2015

அதிசய மீன் மழைபெய்தது யாழில் !

யாழ். நல்லூர் பகுதியில்  பெய்த மழையுடன் மீன்கள் பல விழுந்துள்ளன.
கடந்த சில நாள்களாக குடாநாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
இதேபோன்று  வீரமாகாளி அம்மன் ஆலயப் பகுதி – பருத்தித்துறை வீதியில் பெய்த மழையுடன் பல கெளிறு மீன்களும் விழுந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
மழையுடன் விழுந்த மீன்களை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வாளிகளில் எடுத்துச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
கடந்த பருவமழை காலத்தின் போதும் வீரமாகாளி அம்மன் கோயில் பகுதியில் பெய்த மழையுடன் மீன்கள் விழுந்தமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 12 மே, 2015

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு குடியுரிமை

 கனடாவிலிருந்து ஜப்பான் நோக்கிச் சென்ற எயார் கனடா விமானத்தில் பிறந்த குழந்தைக்கு பெற்றோர் எந்த நாட்டவராக இருப்பினும் கனேடிய குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கனடா கல்கரியிலிருந்து டோக்கியோ நோக்கி சென்ற குறித்த விமானம் பசுபிக் சமுத்திரத்திற்கு மேலாக சென்றுகொண்டிருந்த போது விமான பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் உதவியுடன் குழந்தை 
பிரசவித்தது  
இந்நிலையில் பெற்றோர் எந்நாட்டவராக இருப்பினும் குழந்தை கனேடிய விமானத்தில் பிறந்துள்ளதால் குழந்தையை கனேடிய குடியுரிமை பிரகடனப்படுத்த விண்ணப்பிக்கலாம் என கனேடிய குடியுரிமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மேலும் கனேடிய குடியுரிமையானது கனேடிய பெற்றோர், கனடாவில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் கனேடிய விமானம் போன்ற ஏதாவது ஒன்றினால் ஏற்படுத்தப்படலாம் என தெரிவித்துள்ள வழக்கறிஞர் குடியுரிமைச் சட்டங்கள் 
நாட்டிற்கு நாடு வேறுபடலாம் எனவும் கனேடிய வான்பரப்பில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரை பொருட்படுத்தாமல் கனேடிய குடியுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் பெற்றோரின் குடியுரிமை தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

உங்கள் இந்த வாரம் ராசி பலன்கள்...

அன்பார்ந்த ராசி நேயர்களே இந்த வார ராசிபலன்கள் இதோ,
மேஷம்:-
மேஷராசி அன்பர்களே சூரியன் நன்மை தரும் கிரகமாகும். ஏப்ரல்27,28,29 வேலை இல்லாதவர்களுக்கு வெகு நாட்களாக எதிர் பார்த்து இருந்த புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் காலமாகும்.
உடம்பில் தோல் மற்றும் ரத்த சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகும். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கண்களில் கவனமுடன் இருப்பது நல்லது. பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மிகுந்த பிரயாசையின் பேரில் சமாளித்துக் கொள்வீர்கள்.
குடும்பத்தில் ஏற்படும் .ஏப்ரல்30, மே1 ஆகிய திகதிகளில் உடல் நிலை பாதிப்புகள் நீங்குவதற்காக மருத்துவத்திற்காக வெளியுர் பயணங்களை மேற் கொள்வீர்கள். பேப்பர்,பேனா பென்சில் போன்ற எழுது பொருட்கள் போன்ற ஸ்டேசனரி சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள்,அச்சுத் துறையைச் சார்ந்த பொருட்கள் விற்பனையாளர்கள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,பாடலாசிரியர்கள்,தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள்,காய்கரிகள்,இலை மற்றும் சிற்றுண்டி வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.
மே2,3நெடு நாட்களாகப் பிரச்சனையில் இருந்த குடும்பச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரக் கூடிய காலமாகும்.அரசு வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம்.விபரீத எண்ணங்களை விட்டுக் காரியத்தைக் கவனிக்கவும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்து 
அன்ன தானம் செய்து வரவும்.
உங்கள் கவனத்திற்கு >>>>
   
மேலதிக இராசி பலன்களை அறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் >>>

திங்கள், 20 ஏப்ரல், 2015

ஓவியராக மாறிய 4 வயது ஆடு - காணொளி, இணைப்பு...

 அமெரிக்காவின் உலகப் புகழ் பெற்ற டச்சு ஓவியரான 'வின்சென்ட் வான் கா’ வின் பெயரில் ’வின்செண்ட் வான் கோட்’ (ஆடு) என்று செல்லமாக அழைக்கப்படும் ஓவியர், தனது அற்புதமான பெயிண்டிங்கால் அமெரிக்காவையே கலக்கி வருகிறார். 
நியூ மெக்சிகோ மாநிலத்தின் அல்புக்வெர்க் தாவரவியல் பூங்காவில் வசித்து வரும் 4 வயது ஆடான போடிக்கு, அந்த பூங்காவின் பணியாளரான கிறிஸ்டியன் ரைட் பொழுது போக்காக ஓவியம் வரைவதற்கு பயிற்சி கொடுக்கத் தொடங்கினார். ஆனால் போடியோ, படு சீரியசாக ஓவியங்கள் வரையத் தொடங்கி விட்டது. 
வாயில் தூரிகையை பிடித்துக் கொண்டு போடி துல்லியமாக ஓவியம் வரைவதை காணக் கண்கோடி வேண்டும் என்று அதிசயிக்கிறார் பூங்காவின் மேலாலர் 'லின்’. போடி படம் வரையும் அழகை ரசிப்பதற்காகவே மாலையின் பலர் பூங்காவிற்கு வருகின்றனர்.
போடி வரையும் ஓவியங்கள் அனைத்தும் நியூ மெக்சிகோவில் உள்ள பயோபார்க் சொசைட்டியில் 40 டாலருக்கு (2 ஆயிரத்து 500 ரூபாய்) விற்பனை செய்யப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>