siruppiddy

சனி, 4 மே, 2013

தமிழ்நாதமிழ்நாட்டு செய்தித்தலைப்புக்கள் ?

 
சிவகங்கை மாவட்டத்தில் 3000 பண்ணை குட்டைகள் : ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளின் நலனுக்காக 3000 பண்ணை குட்டைகள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------
 சேலத்தில் பேருந்து போக்குவரத்துக்கு தொடர் பாதிப்பு
பா.ம.க-வினர் நடத்தி வரும் தாக்குதல்களால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------
 சாதி அரசியல் கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை : கி.வீரமணி
தமிழகத்தில் எப்போதும் சாதி அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
--------------------------------------------------------------------------------
 17ஆம் தேதி வரை ராமதாசுக்கு காவல் நீட்டிப்பு
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வரும் 17ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------
 தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட 55 பேர் குண்டர் சட்டத்தில் கைது : கோவை கமிஷ்னர் நடவடிக்கை
கடந்த ஒராண்டு காலமாக தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 55 பேரை கோவை மாநகர காவல் துறை குண்டர் சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
--------------------------------------------------------------------------------
 தர்மபுரி அருகே ரயில் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தி வருகிறார்கள். இதனால் இரவு நேரங்களில் கிராமபுரங்களுக்கு செல்லும் பேருந்துகளின் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------
 வேலூரில் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக 400 பா.ம.க-வினர் கைது
தடையை மீறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள், கல்வீச்சு நடைபெற்று வருகிறது.
--------------------------------------------------------------------------------
 கியாஸ் டேங்கர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது : கியாஸ் கசிவால் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே கியாஸ் டேங்கர் லாரி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் அந்த லாரியில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------
 மர்ம பெட்டியால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பு
சென்னையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் இருந்து இறக்கப்பட்ட மர்ம பெட்டியால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
--------------------------------------------------------------------------------
 ராமதாஸுக்கு ஜாமீன் வழங்கியது விழுப்புரம் நீதிமன்றம்
அத்துமீறி ஆர்பாட்டம் நடத்தியதாக விழுப்புரத்தில் கைது செய்யப்பட்ட பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
--------------------------------------------------------------------------------
 ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல்
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரூபேஷ்குமார் மீனா உத்தரவின் பேரில், கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜோஷ்.தங்கையா மேற்பார்வையில், நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் 24 மணிநேரமும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
--------------------------------------------------------------------------------
 ராமதாஸ் ஜாமீன் மனு : இன்று விசாரணைக்கு வருகிறது
டாக்டர் ராமதாஸின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.m
--------------------------------------------------------------------------------
 ராமாதாஸ் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் முழு அடைப்பு
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைதை கண்டித் புதுவையில் இன்று பா.ம.கா மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------
 ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் : வைகோ
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
--------------------------------------------------------------------------------
 மரக்காணத்தில் உயிரிழந்தவர்களின் வழக்கில் புதிய திருப்பம் : கொலை வழக்காக மாறியது
மரக்காணத்தில் நடைபெற்ற கலவரத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தவர்கள் வழக்கில் புதிய திருப்பமாக, அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------
 புதுச்சேரி அருகே வெடிகுண்டு வைத்து பாலத்தை தகர்க்க முயற்சி
புதுச்சேரியை அடுத்துள்ள வானூர் அருகே மயிலம் செல்லும் ரோட்டில் உள்ள பாலம் ஒன்றை வெடிகுண்டு வைத்து தகர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------
 நெல்லையில் பேருந்து மீது கல்வீச்சு
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளதை தொடர்ந்து, நெல்லையிலும் பேருந்து மீது கல் வீசி சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
--------------------------------------------------------------------------------
 வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட வனக் காவலரை பாம்பு கடித்தது
வனவிலங்கு கணக்கெடுப்புக்கான முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டிருந்த வேட்டைத்தடுப்பு வனக்காவலர் ஒருவரை பாம்பு கடித்தது.
--------------------------------------------------------------------------------
 ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மரணம்
திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் இருந்த அழ்த்துளை கிணற்றில் நேற்று முன் தினம் விழுந்த சிறுமி பலியானார்.
--------------------------------------------------------------------------------
 சிவகாசி அருக்கே பட்டாசு ஆலையில் விபத்து : 5 பேர் பலி
சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து ஏற்படும் போது அங்கு இல்லாத, ஆலை மேஸ்திரி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக