siruppiddy

திங்கள், 14 அக்டோபர், 2013

இரண்டு பிள்ளைகளுடன் யாழ்.தேவியின் முன் பாய்ந்த தாய்


p'0கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ். தேவி புகையிரதத்தின் முன் பாய்ந்து தாயொருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம்  பகல் 1 மணியளவில் இடம்பெற்றதாக மத்திய புகையிரதக் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

தாய் ஒருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் ஓடும் புகையிரதத்தின் முன் பாய்ந்துள்ளார் இதன்போது தாயும் ஒரு மகளும் புகையிரதத்தில் மோதி உயிரிழந்த நிலையில் ஒரு மகள் தப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் வெயங்கொட, கீனவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த இருவரின் சடலமும் வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வெயங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக