siruppiddy

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

மாநாட்டுக்கு சென்றதாககூறுவதில் உண்மை இல்லை


 
 தமிழ் பல்கலைக்கழக பேராசிரியா்கள் விரிவுரையாளா்கள் லன்டனில் நடைபெற்ற தமிழட ஈழ ஆதரவு மாநாட்டுக்கு சென்றதாக இராணுவம் கூறுவதில் உண்மை இல்லை என பல்கலைக்கழக விரிவுரையாளா் சம்மேளன தலைவா் நிமல்ரஞ்சித் தேவசிறி கூறினார்.
அவா்கள் சென்றது தமிழியல் ஆய்வு மாநாட்டுக்கு என்று கூறிய அவா் வெளிநாடுகளுக்கு சென்று மாநாடுகளில் கலந்துகொள்ளும் உரிமை பேராசிரியா்கள் விரிவுரையாளா்களுக்கு உண்டு என்றும் தெரிவித்தார். அவ்வாறு வெளிநாடு சென்று தமிழ் ஈழ ஆதரவு மாநாட்டில் கலந்துகொண்டதாக இருந்தால் அதனை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுதான் விசாரனை செய்ய வேண்டும் இராணுவம் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நிமல்ரஞ்சித் தேவசிறி கூறினார். இராணுவத்துக்கு பல்கலைக்கழக விடயங்களில் தலையிட உரிமை இல்லை என குளோபல் தமிழ்ச் செய்தியாளருக்கு அவா் நிமல்ரஞ்சித் தேவசிறி கூறியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக