siruppiddy

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

மதுபோதையுடன் நடமாடிய உறுப்பினர் கைது


பெரஹரா சமயத்தில் தலதா மாளிகையின் மகமதுவ பிரதேசத்திற்குள் மதுபோதையில் நடமாடிய கண்டி மாநகர சபையின் ஐ. தே. க. உறுப்பினர் ஒருவரை கண்டிப் பொலிஸார் நேற்று இரவு கைது செய்தனர்.
ரந்தோலி பெரஹராவின் நான்காவது பெரஹரா நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இப் புனித பிரதேசத்திற்குள் சிலர் அதிக மதுபோதையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவரை கைது செய்த பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டு பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 29ஆம் திகதி கண்டி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக