siruppiddy

வியாழன், 12 செப்டம்பர், 2013

சீமான் கிட்ட பேச்சு இருக்குஎன்கிட்ட ஃபேக்ட்ஸ் இருக்கு :

 
 **நடிகை விஜயலெட்சுமி ‘‘மூணு வருஷமாக நானும் சீமானும் ரிலேஷன்ஷிப்ல தான் இருக்கோம். அவர் ஜெயிலுக்குப் போனதிலிருந்து, அவரோட அப்ஸ் அண்ட் டவுன்ஸ் எல்லாத்திலும் நான் கூடவே இருந்திருக்கேன். நாங்க கல்யாணம் பண்றதாகத்தான் இருந்துச்சு. எங்க ஃபேமிலியில எங்க திருமணத்தை

ஏத்துக்கிட்டதாலதான் தொடர்ந்து ரிலேஷன்ஷிப்ல இ ருந்தோம். பொதுவாக ஜெயிலுக்குப் போயிட்டு வந்தா யாரும் என்கரேஜ் பண்ண மாட்டாங்க. ஆனால் அப்ப கூட அவரோடயே நான் இருந்திருக்கேன்.

போன மாசம்தான் நாங்க ‘கல்யாணம் நடக்கவே மாட்டேங்குதே’னு கேட்டோம். சில வி.ஐ.பி.க்களை வைச்சு பேசிப் பார்த்தோம். அவங்ககிட்ட ‘எனக்கு அப்படியொரு ஐடியாவே இல்ல. நான் அவளைப் பார்த்தே ஒண்ணரை வருஷமாச்சு’ன்னு சொல்லியிருக்கார். அப்படீன்னா அவரோட மனசில என்னதான் இருக்குங்கிறதுதான் என்னோட கேள்வி.

நல்லா பழகுறாங்க. ஆனால் வெளியே சொஸைட்டியில யாராவது கேட்டால், ‘எனக்கு அப்படியொரு ஐடியாவே இல்ல’ன்னு சொல்றாங்க. நான் அந்தமாதிரி பொண்ணு இ ல்லைங்க. இருட்டுக்குள்ளே இருக்கிற ரிலேஷன்ஷிப்புக்காக நான் வரல. உங்க பத்திரிகையிலேயே ‘செத்த பொணத்துக்கு பொண்டாட்டி தேவையா’ன்னு அவரே சொல்றார். அப்புறம் அவரேதான் ‘நான் ஒரு இலங்கைப் பெண்ணைத் தேடிக்கிட்டு இருக்கேன். கட்டிக்கப் போறேன்’னு

சொல்றார். அவரே ஒரு குழப்பமான நிலையில இ ருக்கார்ங்கிறது தெளிவாகத் தெரியுது.’’
மதுரை ஹோட்டல்ல நீங்க தங்கினதா சொல்ற நாள்ல சீமான் சிறையிலிருந்ததாகச் சொல்றாங்களே?

‘‘அப்ப அவருக்கு பெயில் கிடைச்சது. வெளியே வந்தார். மதுரை நீதிமன்றத்துல அவர் கையெழுத்துப் போடவேண்டியிருந்துச்சு. அப்ப அவர் அந்த ஹோட்டல்ல இருந் தப்ப, அவரோட ஆட்கள் டிக்கெட் போட்டு என்னைக் கூப்பிட்டாங்கங்கிறதுதான் நான் கொடுத்த விஷயம். இதுதான் உண்மை. வெளியே அவர், ‘நான் தியாகி. எனக்கு ஈழ விஷயத்தைத் தவிர வேறெதுவும் இல்ல’ன்னு சொல்வார். என்கிட்ட ஃபேக்ட்ஸ் இருக்கு. அவர் கிட்ட பேச்சு இருக்கு.

நானும் தமிழ்ப் பொண்ணு. சைவப் பிள்ளைமார். காவிரிப் பிரச்னையில இருந்து ஒகேனக்கல் பிரச்னை வரைக்கும் நான் தமிழுக்காக நிற்கிற தமிழ்ப் பொண்ணு. தமிழ்நாட் டுல இருக்கிற தமிழ்ப் பெண்ணான என்னை இங்கே நிக்க வைச்சிட்டு ஈழத்துல இருக்கிற அகதிப் பெண்ணைத் தேடுறேன்னா என்ன அர்த்தம்?’’
நீங்க புகார் கொடுத்ததன் பின்னணியில காங்கிரஸ் பிரமுகர்கள் இருப்பதாக கிசுகிசு இருக்கே?

“குழாய்ல தண்ணி வரலன்னா கூட அதுக்குக் காரணம் காங்கிரஸ்தான்னு சொல்வார். என்னை நேருக்கு நேராகப் பார்த்து, ’நீ யாருன்னு தெரியல, நான் எதுவும் பண் ணல’ன்னு சொல்ல முடியுமா அவரால. எனக்கு இன்னிக்கு யாருமில்ல. நான் தனியாளாகத்தான் நிக்குறேன். எனக்கு காங்கிரஸ் ஆளு யாரும் சப்போர்ட் பண்ணல. நான் நேரடியாகவே போய் கமிஷனர்கிட்ட

 கம்ப்ளெய்ண்ட் கொடுத்திருக்கேன். எனக்கு யாரும் சப்போர்ட் கொடுத்துடக் கூடாதுனு இப்படிச் சொல்றார்.’’
இதுபோன்ற பிரச்னைகளில் நீங்கள் ஏற்கெனவே சிக்கி, உங்கள் மேல் புகார்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே...

‘‘பழைய கதையெல்லாம் முடிஞ்சு போச்சு. அந்தக் கதை முடிஞ்சு சீமான்கிட்ட நான் வந்தாச்சு. சீமானுடன் வந்த பிறகு ஒரு நாளைக்கு பத்து போனாவது பண்ணுவார். ‘எங்க போயிட்டு இருக்க.. எங்கே இருக்கே’ன்னு போன் பண்ணிட்டேதான் இருப்பார். மூணு வருஷமாக அவரோட ரிலேஷன்ஷிப்ல இருக்கும்போது நான் எங்கேயாவது போகமுடியுமா?

உங்க பழைய கதையெல்லாம் கேட்டு மன்னிச்சுதானே ஏத்துக்கிட்டேன். பச்சையாவே சொல்றேன் உங்களுக்கு ஆசை, அன்புன்னு தேவைப்பட்டப்ப நான் கொடுத்தேன்ல. எனக்கு அப்பாவும் இல்ல. அண்ணனும் இல்ல. எனக்குன்னு கேட்க வீட்டுல ஆம்பளை இல்ல.’’

இவ்வளவு நடந்த பிறகும் சீமானுடன் இணைந்து வாழ நீங்க தயாரா?
‘‘என்னை யாருன்னு கேட்ட பிறகு அவர் எனக்குத் தேவையே இல்ல. என்னை மாதிரி வேறெந்தப் பொண்ணும் ஏமாந்துடக்கூடாதுங்கிறதுக்குதான் இதை வெளியே கொண்டு வந்திருக்கேன்.’’

நீங்க கொடுத்த ஆதாரங்கள் போதுமான அளவு இல்ல. அதனால போலீஸ் நடவடிக்கை எடுக்கலன்னு ஒரு பேச்சு இருக்குதே?

‘‘விசாரணை சரியா போய்க்கிட்டு இருக்கு. அவர் சொல்றது பொய்னு ஆகும். நான் சொல்றது நிரூபணம் ஆகும். அம்மா ஆட்சியில, கலங்கி நிற்கும் பெண்ணுக்கு நீதி கிடைக்கும்னு நம்புறேன்.’’

0 கருத்துகள்:

கருத்துரையிடுக