siruppiddy

சனி, 28 செப்டம்பர், 2013

விமானிகள் உறக்கம் பறந்துகொண்டிருந்த விமானத்தில்


பிரித்­தா­னிய பய­ணிகள் விமா­ன­மொன்று பறந்­து­கொண்­டி­ருந்­த­போது இரு விமா­னி­க ளும் உறங்­கிக்­கொண்டு சென்­ற­தாக வெளி­யான தகவல் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

எயார் பஸ் ஏ330 ரகத்தைச் சேர்ந்த இந்த விமா­னத்தின் இயக்­கத்தை “ஒட்டோ பைலட்” முறை­மைக்கு மாற்­றி­விட்டே இவர்கள் இவ்­வாறு உறங்­கி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த மாதம் இடம்­பெற்ற இச்­சம்­பவம் தொடர்­பான தகவல் கடந்த செவ்வாய்க்கிழமை வெளி­யா­கி­யுள்­ளது. விமானம் தரை­யி­லி­ருந்து கிளம்­பி­ய­வுடன் விமா­னத்தை ஒட்டோ பைலட் முறை­மைக்கு மாற்­றி­விட்டு ஒருவர் மாறி ஒருவர் சிறிது நேரம் உறங்­கு­வ­தற்கு தலைமை விமா­னியும் துணை விமா­னியும் இணங்­கினர்.

ஆனால் அவர்­களில் ஒருவர் விழித்­தெ­ழுந்து பார்த்­த­போதே இரு­வரும் உறங்­கிக்­கொண்­டி­ருந்­ததை உணர்ந்­துள்ளார். இச்­சம்­பவம் குறித்து இவர்கள் தாமா­கவே முன்­வந்து பிரித்­தா­னிய சிவில் விமான சேவைகள் அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்­துள்­ளனர்.

இத்­த­கைய சம்­ப­வங்கள் குறித்த தக­வல்­களை அம்­ப­லப்­ப­டுத்­து­வதை ஊக்­கு­விப்­ப­தற்­காக, இவ்விமானிகள் பணியாற்றும் நிறுவனத்தின் பெயரை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அதிகாரிகள் வெளியிடவில்லை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக