siruppiddy

சனி, 21 செப்டம்பர், 2013

நிம்மதியாக தூங்கலாம்: புகையை விட்டால்ஆய்வில் தகவல்


புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டால் நிம்மதியாக தூங்கலாம் என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
புகைபிடிப்பதால் பல்வேறு நோய்களும், அவற்றின் மூலம் மரணமும் ஏற்படுகிறது.

புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வகையில், புளோரிடா பல்கலையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், புகைப்பழக்கத்திற்கும், தூக்கத்திற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு சிகரட்டும் 1.2 நிமிட தூக்கத்தை கெடுப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

புகைபிடிப்போரில் 11.9 சதவிகிதம் பேர் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதாகவும், 10.6 சதவிகிதம் பேர் நள்ளிரவில் எழுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக